
வீட்டுக்கு எவனும் ஓலைபோட்டு
தரமாட்டிங்கறாங்க.......
மேகத்த வாசல்ல போட்டு
கோலத்த அழிச்ச
அவன்
குஞ்ச அறுத்து
கூரையில போட்டுட்டு
நிலாவுக்குள்ள போயிருவேன்
பச்சை மரம் பொய் சொல்லாது..
ஒடக்கா எங்கபோய் முட்டை வைக்கும்.....
கனவை தடுப்போன்
கையை முறுச்சு
குண்டிக்குள்ள துணிச்சுட்டுருவேன்
என்ன ஆறுன்னு நெனச்ச?
என்ன ஆறுன்னு நெனச்ச!
என்ன ஆறுன்னு நெனச்ச,
நாம் பத்திரகாளீயாத்தாவுக்கே
பேன் பாத்தவ
பல அவதாரமெடுத்து
இருட்டில் திரிந்த
அந்த
கிரீகடம் விக்கிறவன்
என் தாலிய மட்டும்
கழட்டி
சுடுகாட்டு வேப்ப மரத்தில்
பேயோடு சுருக்குபோட்டு செத்து போனான்
மழைத்துளிகளை சோராக்கித்திங்கிற
எனது
சட்டியில் மிஞ்சியது
ஊர்க்காரன்களின் பீ
No comments:
Post a Comment