
இருளை தின்னும்
ஒரு
விளக்கு கம்பத்தினடியில்
நிகழ்ந்து கொண்டிருந்தது
கட்டுப்படுத்தப்பட்ட
நிழல்களின் உற்பத்தி
மூன்றாம் நிழல்
நுழைந்து
வித்தியாசம் அறியாத பாத்திரமாய்
ஒரு சாமியாடியின் கால்களில்
நிமிர முடியாத படி விழுந்தது
அகோரச்சண்டையில்
முகம் முளைத்த நிழல்
நிஜத்தின் உடம்பை பிடுங்கி
பொருத்துக்கொண்டது
ஒருஅகால வேளையில்
இரண்டும்
வெடுக்கென தன்னைப்பிடுங்கி
ஒளியில் கரைந்து
வடிந்தோடியது
ஒரு
பெருச்சாலியாய்
No comments:
Post a Comment