November 05, 2010

ஒரு கொலை, தண்டனையில்லாமல்-சந்தனமுல்லை


ஞாயிறு எல்லோருக்கும் விடிவதைப்போலத்தான் விடிந்திருக்கும் ‍ - குடும்பத்தின் சம்பாதிக்கும் ஒரே நபரான அம்பிகாவிற்கும். தான் ஒரு படுகொலையை சந்திக்கப்போவது தெரியாமல் ,அடுத்தடுத்த நாட்கள் பற்றிய திட்டமிடல்களோடும், எதிர்காலம் பற்றிய எண்ணங்களோடும், ஏழேமுக்கால் முதல் பத்தேமுக்கால் வரையிலான ஷிப்டுக்கு வந்திருப்பார் அம்பிகா.

அம்பிகாவைப் பற்றி இணையத்தில் வந்திருக்கும் செய்திகளைப் படித்துத் தெரிந்துக்கொண்டிருப்பீர்கள். பல செய்தித்தளங்கள் கூறுவது போல ரோபோவால் தாக்கப்பட்டோ அல்லது மன உளைச்சலால் தற்கொலையோ அவர் செய்துக்கொள்ளவில்லை. முக்கியமாக அது எதிர்பாராமல் நடந்த விபத்துமில்லை.

திங்களன்று மதியம் செய்தியைக் கேள்விப்பட்டபின், அவரது உடல் அப்போலோவில் இருப்பதாக அறிந்து நேரில் சென்றேன். அவருடன் வேலை செய்யும் உடன் ஊழியர்கள் சிலரையும் சந்தித்தேன். சுமார் 50 முதல் 100 பேர் குழுமி இருந்தனர். சராசரியாக அவர்கள் வயது இருபது அல்லது இருபத்தியிரண்டுக்குள் தான் இருக்கும்.

வேலை செயும் இடமோ அல்லது கான்டீனுக்கோ, டாய்லெட்டுக்கோ எங்கு சென்றாலும் எந்நேரமும் கண்காணிக்கும் கேமராக்கள். உழைப்பை அட்டையைப்போல உறிஞ்சும், கொஞ்சமும் மனிதாபிமானமற்ற சூபர்வைசர்கள். வெளிநாட்டு முதலாளிகளின் லாபத்தையே குறிக்கோளாகக் கொண்ட உயரதிகாரிகள். கொத்தடிமைகளைப் போல வேலை செய்தும் ஒருநாளைக்கு இருநூறு ரூபாய் கூட கிடைக்காத நிலை. எப்போது வேண்டுமானாலும் துரத்தப்பட வசதியாக ஒப்பந்த முறையில் வேலை.

’பத்தாவது முடித்திருந்தால் போதும்,நோக்கியாவில் வேலை’ என்று சென்னையின் ‍- முக்கியமாக‌ புறநகர் பகுதிகளின் பள்ளிகளில் நோட்டீஸ் ஒட்டுவது; மொத்தமாக 500, 1000 என்று ஏழை மாணவர்களை அள்ளிக்கொண்டு வரவேண்டியது. முதலாளிகள் நியமித்த டார்கெட்டுக்கும் முன் அவர்களது உயிருக்கும் மதிப்பில்லை. உற்பத்தியை பெருக்க வேண்டிய மற்றுமொரு எந்திரங்களே.

'தீபாவளிக்கு அப் அப் அப்கிரேட்' என்றும் நமக்குப் பிரியமானவர்களுக்கு பரிசளிக்க உகந்தது என்றும் விளம்பரப்படுத்தப்படும் செல்போன்களும், கேட்ஜெட்டுகளும், குறைந்தபட்ச உரிமைகள் கூட மறுக்கப்பட்ட இந்தக் கொத்தடிமைகளைத் தாண்டியே வருகின்றன. உயிரே போகும் அபாயகட்டத்தில் இருந்தாலும் நிற்க மறுக்கும் எந்திரங்களைத் தாண்டியும்...

உலகின் ஏதோ ஒரு மூலையில் விற்கப்படப்போகும் செல்போனின் மதர்போர்டை காப்பாற்ற முனைந்து
கட்டிங் மெஷினால் கழுத்தறுப்பட்டிருக்கிறார் அம்பிகா. பக்கத்திலிருப்பவர்கள் பார்த்துவிட்டு, கத்தியும் செக்யூரிட்டிகளோ சூபர்வைசரோ உதவவில்லை. 'எமர்ஜென்சி' மூலம் எந்திரத்தை நிறுத்த முயன்ற ஊழியர்களையும் செக்யூரிட்டி தடுத்து தள்ளிவிட்டிருக்கிறான். இதற்குள் நான்கு முறை அலறி தலைதொங்கியிருக்கிறார் அம்பிகா. ”அங்கிருந்து அப்போல்லோ வருவதற்கு பதிலாக வழியில் வேறு ஏதாவது மருத்துவமனையில் ஏன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலாவது சேர்ந்திருந்தால் பிழைத்திருப்பாளே” என்று அங்கலாய்க்கிறார்கள் அம்பிகாவுடன் அதே ஷிஃப்டில் வேலை செய்தவர்கள்.

கட்டிங்மெஷினின் சென்சார்கள் இடையூறு வந்தால் ஓடாமல் நிற்கவேண்டும். ஆனால், அப்படி நின்றால் உற்பத்தி பாதிக்கும். திரும்ப ஓடுவதற்கு பத்து நிமிடங்கள் ஆகும். இதற்குள், ஏற்படும் உற்பத்தி இழப்பை ஈடுகட்டுவதற்கு இந்தியாவின் மிக மலிவாகக் கிடைக்கும் மனித உயிரை இழக்கலாமே! இதுதான் அங்கிருந்தவர்களின் மனநிலையாக இருந்திருக்கிறது.

’அம்பிகாவிற்கு ஏற்பட்ட அதே நிலைதான் எங்களுக்கும்’ என்று ஒரு பெண் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவருக்கு ஒரு மெசேஜ் வந்தது. அடுத்த ஷிப்ட் வழக்கம் போல நடக்கும் என்பதாக.. அதை எங்களிடம் காட்டியபடி உடனிருந்தவர்களிடம் "அப்போவே அந்த மெஷினையெல்லாம் ஒடைச்சுபோட்டுட்டு வந்திருக்கணும் நீங்க" என்று பொருமுகிறார் அவர்.

அம்பிகா இறந்தபின் அடுத்த ஷிட் நடந்திருக்கிறது டெக்னீஷியன்களைக் கொண்டு.

க்ரூப் இன்ஷ்யூரன்சிலும் பெரிதாக எதுவும் கிடைக்காது. அம்பிகாவின் மரணத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக, பேச்சு வார்த்தையின் போது கிராஜூவிட்டித் தொகையை மட்டும் தருவதாக பேசியிருக்கின்றனர் நிர்வாகத்தினர். ஓய்வு பெறும்வரையிலான அவரது சம்பளத்தை கேட்டதற்கோ 'அது 52 லட்சம் வருது சார், எந்த கம்பெனி கொடுக்கும்' என்று பேசியிருக்கிறான் கம்பெனி ஹெச் ஆர். பேச்சுவார்த்தையை தற்போது எட்டாம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.

எங்களை வைச்சு எவ்ளோ சம்பாரிச்சிருப்பான், ரெண்டு கோடி ரூபா மெஷினை எமர்ஜென்சிலே நிறுத்த முடியாம ஒரு உயிர் போயிருக்கு, 52 லட்ச ரூபாய் கொடுக்க முடியலையா என்று கொந்தளிக்கிறார்கள். 'ந‌டந்தது விபத்தல்ல;கொலைதான்' என்றும் உறுதியாக உணர்ந்திருக்கிறார்கள். 'திமுகவும் அதிமுகவும் வந்தாங்களே, என்ன நடந்தது, எங்களை பத்தி எந்த கட்சிக்கும் கவலையில்ல' என்று வெறுத்துப்போய் பேசுகிறார்கள்.

ஒபாமாவிற்காக நாடே விழாக்கோலம் பூண்டு பட்டாசு வெடிக்கும் ஒலியில் அம்பிகாவிற்காக ஒலிக்கும் நண்பர்களின் குரலை கேட்பவர்கள் யார்?

அம்பிகா தனது தம்பியை படித்து ஆளாக்கியபின்னரே திருமணம் செய்துக்கொளவதாக உறுதியாக இருந்திருக்கிறார். வரும் ஜனவரி எட்டாம் தேதி திருமணமும் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அவரது தம்பி தற்போது டிப்ளமோ இறுதியாண்டு படிக்கிறார். தற்போது அவரது தம்பிக்கு வேலை தருவதாக எது ஏதோ பெரிய உதவியாக நினைத்து வாக்களிக்கிறது நிர்வாகம். "ஊழியர்களின் பாதுகாப்பே தங்களுக்கு பிரதானமென்றும் இச்சம்பவத்தை கம்பெனியின் விதிமுறைகளுக்கேற்ப புலனாய்வு செய்வதாகவும்" அறிக்கை விடுகிறார்கள் கொலையாளிகள்.

அம்பிகாவின் இழப்பை எதுதான் ஈடு செய்ய இயலும், நியாயத்தைத் தவிர!

October 30, 2010

நினைவுகள் 2008








புவியரசு, ப ப ரமணி டாக்டர் சிவகுமார் ,முருகவேள்
நன்றி - கலை இலக்கிய பெருமன்றம்,கோவை

October 07, 2010

புலிகளின்மூச்சைஉங்களிடம் ஒப்படைக்கப்போவதில்லை- லட்சுமணன்



கொன்றை மரத்தின் கீழே
ஒரு புலி
மனிதனின் தோல் பரப்பி உட்கார்ந்திருந்தது

நைந்திருந்த அந்த தோல்
உதயபூர் ம்காராசாவுடையதோ
காட்ரன் துரையுடையதோ அல்ல

புலியை குலக்குறியாகக்கொண்ட
கோண்டுவினுடையது

இப்போது
இலைகளை காரி
துப்பத்தொடங்கியது


தாமஸ் கிளப் ஏனோ இன்றைக்கு மர்மமானதாக காட்சியளித்தது .அந்த சந்துக்குள் புலியொன்று தீடிரென பாய்ந்து தாக்குமோ என்ற அச்சத்துடன் இருவர் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர்


சேகர் தத்தாத்திரியின் மிஸ்டரீஸ் ஆப் டைகர் திரையிடுவதாக எனக்கு வந்த தகவலோடு கணத்துக்கிடந்தேன்

எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என முயன்றேன் ஆனால் கடைசி வரை படம் பற்றிய எல்லா தகவல்கள்களும் கிடைத்ததே ஒழிய குறுந்தகடு
கிடைக்கவில்லை। கிடைத்த தகவல்கள் அதிர்சியாக இருந்தது

பெரும்பாலானவர்கள் தத்தாதிரியின்
புலிகள் பற்றிய நல்ல அபிப்ராயம் சொல்லவில்லை. ஆனால் ஆண்டோவின் புலிமேல் நல்ல அபிப்ராயம் சொன்னார்கள்

காலை 10 மணீக்கு தொடங்கவேண்டியகூட்டம் பதினொன்றுக்கு வழக்கமாக தொடங்கியது

அங்கே ‘சோலைக்காடுகள்’ திரையிடப்பட்டது

அது குறித்த கருத்துகள் மிக சாதுவான முறையில் வைக்கப்பட்டது நல்லமுறையில் படமாக்கப்பட்டிருக்கிறதென்றும், இப்படி ஒரு இடம் 40 கிலோ மீட்டரில் இருப்பது ஆச்சரியமாக இருப்பதாகவும் பாம்புகளை பற்றியும் பறவைகளின் குணம் பற்றியும் குறிப்பாக அட்டைகளைப்பற்றியும் தெரிந்துகொண்டதாக ஒரு வட்டம் தெரிவித்தது

இன்னொரு வட்டம் புலிகள் சரணாலயத்தினை எதிர்த்துபோராடும் மக்களுக்கு பின்னே ரிசாட் முதலாலிகள் இருக்கிறார்கள் என்று அரிய கண்டுபிடிப்புகளை சொன்னார்கள்

மிகப்பெரும் போராட்டம் நடக்கயில் சிலருடைய வெஸ்டேடு இன்ட்ரஸ்டுகளும் அதில் இருக்கத்தானே செய்யும். சரி, அந்த ரிசாட்டுகளையும் சேர்த்து தூக்கியடிக்கும் வாய்ப்புகள் தருகிற 2006 வனச்சட்டத்தினை அமுல்படுத்த அழுத்தம் தரும் போராட்டங்களில் இந்த அதிமேதாவிகளின் பங்கு ஏன் ஒரு கிராம்கூட இல்லாமல்போனது

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் மு ஆனந்தனும், வெங்கடேசும் மட்டும் மக்களின் பார்வையிலிருந்து மிகக்கூர்மையான சில கேள்விகளை அரங்கத்துக்கு எழுப்பினார்கள்

ஒரு ஆவணப்படத்துக்கக்காக நானும் தோழர் முருகவேளும் அம்மக்களோடு இரண்டு நாட்கள் தங்கியிருந்தபோது அவர்களிடமும், கூடலூர் செல்வராஜிடவிடமும் ஏகப்பட்ட தரவுகளை வாங்கியிருந்தோம் அதனால் எனக்கு கொஞ்சம் டென்சன் தலைக்கேறியது

நான் எழுந்துபோனேன்

நான் இங்கு ட்ரூத் அபௌட் டைகர் திரையிடுகிறார்கள் என்று கேள்விப்பட்டு வந்தேன் நல்லவேளையாக அது திரையிடப்படவில்லை ஆனாலும்அதுகுறித்த எனது கருத்துகளை இந்த சோலைக்காடுகள் படத்துக்கும் பொருத்தமானவையாக இருக்கும் என கருதுவதால் உங்களோடு பகிர்ந்துகொள்ள விருப்பப்படுகிறேன்

இடதுசாரிகளுக்கும் சூழலுக்கும் சம்பந்தமில்லை என்ற மூடநம்பிக்கைகளை உடைத்து இங்கிருந்து ஒருவர் தீவிரமாக இது குறித்த ஒரு பயணத்தை துவங்கியிருப்பது ஆறுதல் அளிக்கிறது। ஆனால் சுத்த சூழல் வாதிகள் நம்மைபோன்றவர்களிடம் உள்ள அமைப்பையும் ஆர்வத்தையும் சாதகமாக பயன்படுத்தும் போக்கு தீவிரமாகி வருகிறது அதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்

புலியின் பல்லிடுக்கில் எல்லாம் போய் சதைத்துனுக்குகளை ஆராயும் இவர்களின் கேமராவுக்கு லட்சக்கணக்கான ஏக்கரில் வெறும் நூறுக்கும் இருநூறுக்கும் 100 ஆண்டுகள் குத்தகை என்ற பெயரில் காடுகளை கபளீகரம் செய்துவிட்ட செய்கின்ற
காப்பித்தோட்டங்களோதேயிலைத்தோட்டங்களோ தெரிவதில்லை அந்நிய செலவாணிகள் வேண்டும் என்பதற்க்காக மக்களுக்கு களவாணிப்பட்டம் சூட்டி வெளியேற்றத்துடிக்கும் இவர்களின் லென்சுகளில் தேக்குக்காடுகளும் யூக்கலிப்டஸ் காடுகளும்கூட என்றும் பதிவாவதில்லை
மிஸ்டிரிஸ் ஆப் டைகர் ஆவணப்படத்தில் குதிரைமுக்கில் பாக்ஸைட் தோண்டுவதை காண்பிக்கிறோம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்

1ஒன்னறை மணிநேரம் புலிகளைபற்ரிய phd யில் அதற்க்கு காரணமான கொள்ளையர்களையும் அவர்கள் தொழிற்சாலைகளையும் ஒருவிநாடிமட்டும் காட்டிவிட்டு 89 நிமிடம் 99 விநாடிகள் புலிகளின் அழிவுக்கு காரணமாகாத பழங்குடிகளையுமே காரணமாக காட்டுவது அயோக்கியத்தனமாக இருக்கிறது

2 புலிகளின் போரனாக இருந்து அதன் சகலபருவங்களையும் சல்லடைகளால் துளைத்து ஆராய்ந்த அளவு பழங்குடிகளின் வாழ்வும் அவர்கள் நிலத்திலிருந்து அந்நியமானல் உண்டாகும் விளைவுகள் பற்றியும் ஆராயவில்லை அதில் அவருக்கு அக்கறையுமில்லை

3 மனிதனும் புலிகளும் ஒருக்காலும் சேர்ந்திருக்கமுடியாது எனென்றால் புலிகள் தேவலோகத்தில் மட்டுமே உயிர்வாழக்கூடிய பிராணி
இப்படியாக நிறைய கேள்விகள் இன்னும் எண்டேஞ்சராகவே இருக்கிறது

1973 ஆம் வருடம் புராஜக்ட் டைகர் ராஜஸ்தானின் ராந்தாம்பூர் காடுகளில் புலிகள் எண்ணிக்கை 14 ஆனால் அதற்குப்பிறகு அது பத்தாண்டுகளில் ஆண்டுக்கு ஒன்றுவீதம் பெருகி 42 ஆகியதாகவும் இப்போது வெறும் 17 ஆகிவிட்டதென்றும் வெளிவரும் புள்ளிவிவரங்கள் எதை நமக்கு தெரிவிக்கிறது

அதே ராந்தாம்பூர் பற்றிய சரிஸ்காவின் புள்ளிவிவரக்களை பாருங்கள்

2003 ல் 28 ஆக இருந்த புலிகள்
2004ல் 18 ஆக குறைந்து
இப்போது 0 என்றாகிவிட்டதாக தெரிவிக்கிறது
இப்பகுதி 1973 ல் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்ட பகுதி

1973 ல் 9 ஆக இருந்த சரணாலயங்கள்
இப்போது 27 ஆக உயர்ந்திருக்கிறது
ஆனால் புலிகளின் என்ணிக்கை 4500 லிருந்து 1500 ஆக குறைந்திருப்பதாக டேட்டாக்கள் சொல்கிறது
சுனிதா நாரயணன் கமிட்டி (TTF tiger task force) யின் அறிக்கையை பாருங்கள்
“வனவிலங்கு சரணாலயமாகவும் தேசிய புலிகள் பூங்காவாகவும் அறிவிக்கப்பட்ட இடங்களில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் நுழைவதற்கான தடையை மறுபரிசீலனை செய்யவேண்டும், மேலும் சூழலையே புரட்டிப்போடும் கனிம அகழ்வாய்வு திட்டங்கள் வெட்டுமரங்கள் தறிப்பது நீர்மின் திட்டங்கள் அணைதேக்கங்கள் ஆகியவற்றை அனுமதித்திருக்கும் இந்த அரசு வாழ்வாதாரங்களுக்காக காடுகளையே நம்பியிருக்கும், நம்பியிருந்த அம்மக்களுக்கு தடை போடுவது எவ்வளவு பெரிய நகைமுரண்
அம்மக்களை இணைக்காமல் அம்மக்களுக்கு நீதிவழங்காமல் நீங்கள் புலியை காக்கமுடியாது அதன் பாதுகாப்பு பழங்குடிகள் கையில்தான் இருக்கிறதே ஒழிய நீங்கள் அமைக்கிற பாதுகாப்பு வேலிகளில்லை” என்று பலமாக பரிந்துரைத்து அரைந்திருக்கிறது அக்கமிட்டி
மன்னர்கலும் தூரைமார்களும் பணக்காரர்களும்தான் அன்றைக்கும் இன்றைக்கும் வேட்டையாளர்கள்। அவர்களுக்கு துணையாகத்தான் பழங்குடிகளை கட்டாயப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்

1864 ல் கார்டன்துரை கொன்ற புலிகளின் என்னிக்கை 130

கார்னல் நைட்டிங்கேல் 78

ஐந்தாம் ஜார்ஜ் வேட்டை விருந்தின் போது கொல்லப்பட்டவை 58 குட்டிகள் உட்பட 158 புலிகள்

உதயபூர் மகாராசா கொன்ற புலிகள் 1000

ரைஸ் என்னும் அதிகாரி 1000 ம் புலிகளுக்கு மேல் கொன்றதுமில்லாமல் அவன் பராக்கிரமத்தை ஒருபுத்தகமாக எழுதி வைத்துவிட்டு போயிருக்கிரானாம்
இன்னும் பட்டியல் இருக்கிறது

காலங்காலமாக டப்பாத்தனமான தங்கள் வீரத்தை நிரூபிக்க புலிகளைவேட்டையாடிக் கொன்ற இந்த பரம்பரைதான்,புலிப்பல் போடாத பழங்குடியை, புலி நகத்தை தன் தலைகளில் சூடாத பழங்குடியை, புலியை தன் குலக்குறியாக கொண்ட பழங்குடியை, மரத்தால் தன் வீட்டுக்கு ஒரு கட்டில்கூட செய்துகொள்ளாத பழங்குடியை நோக்கி நெஞ்சில் உரமின்றி நேர்மைத்திறமின்றி தங்கள் சுட்டுவிரலை நீட்டிச் சொல்கிறது
‘நீங்கள் புலிகளை வேட்டையாடுகிறீர்கள் உங்களால் புலிகளுக்கு பிராப்ப்ளம் வெளியேறவேண்டுமென்று’

பழங்குடி மக்கள் பழங்குடிகளாக இல்லை இப்போது மாறிவிட்டார்கள் நெல்லிக்காயை உலுக்கி எடுப்பதில்லை முறிக்கிறார்கள், கொத்துக்கொத்தாக பிடுங்குகிறார்கள் அவற்றைமட்டுமே தின்றுவாழும் குரங்குகள் இப்போது ஹோட்டல்களுக்கு வருகிறது என்கிறார்கள்। ஒரே ஒரு ரகத்தை தின்று பேளும் ஒரு பிராணி இந்த உலகத்திலிருப்பதை கண்டுபிடித்ததற்க்காகவே இவர்களுக்கு நாம் ஏதாவது சிறப்பு அவார்டுக்கு பரிந்துரைத்தால்கூட தப்பில்லையென்று தோன்றுகிறது

அப்படி எங்களின் பண்பாட்டை சூறையாடிய நீங்கள் என்றைக்காவது எங்கள் பண்பாட்டை காப்பதற்க்கோ அல்லது எங்கள் பிரச்சனைகளின் வேர்களை சித்தரிக்கும் ஆவணப்படங்களையோ வேண்டாம் வெறும் போட்டோகளையாவது எடுத்து இப்படி ஊர் ஊராய் மடம்பிடித்து திரையிட்டிருக்கிறீர்களா? என்றால் உறுதியாக அடித்துச்சொல்ல முடியும் இல்லை என்றுஅப்படி செய்யாத நீங்கள் ஒருதலைப்பட்சமாக இதை ஒரு கொடும்பாவியைப்போல் தூக்கிவைத்துக்கொண்டு ஊர் ஊராய் அலைவது உங்கள் நேர்மையற்றதன்மையை காட்டுகிறது,நீங்கள் யாரோவினுடைய கைப்பாவை என்ற சந்தேகம் வலுக்கிறது

இன்றும் நாம் 18 ஆம் நூற்றாண்டின் புலிக்குத்திக்கல்களை பார்க்கமுடியும் புலியும் மனிதனும் சேர்ந்தே வாழ்ந்தற்கான ஆதாரங்கள் அவை ।புலிகளுக்கு மக்களுக்கும் மிகப்பெரிய பிரச்சனை அன்று இருந்திருக்க முடியாது, இன்றும் இருக்க முடியாது

அவர்கள் நோக்கம் இது ....உங்கள் நோக்கம் இதுவா ? என்று பரிசோதித்துக்கொள்ளுங்கள்

1 2006 வனச்சட்டத்தை அமுல்படுத்த தொடங்கும் முன் , புலியின் பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ எங்களை வெளியேற்றிவிடவேண்டுமென தீவிரமான திட்டங்களுடன் களமிறங்கியிருக்கறீர்கள்

2 நாங்கள் இங்கிருந்து வெளியேறிவிட்டால் நீங்கள் நினைத்தை சாதிக்கமுடியும்
இங்கேபல்லாயிரக்கணக்கான டன்களில் புதைந்துகிடக்கும் பிளாட்டினங்களையும் பாக்சைட்டுகளையும் கொள்ளையடிக்க வசதியாக இருக்கும் இந்த மேற்கு கிழக்கு மலைத்தொடர்களை நீங்கள் விரும்பியவண்னம் சுரண்டமுடியும்

३ சில அரசியல் பிரச்சனைகளை ,போராட்டங்களை, போராட்டங்களின் நியாயங்களை, நாடு முழுவதும் உள்ள நடுத்தர மக்களின் மனதிலிருந்து துடைத்தெரிய இது மிக நல்ல ஆயுதம்

அவர்களுக்கன கேள்விகள்
.... இதில் உங்களுக்கானதும் இருக்கலாம்

1 எங்களுக்கு சுபிட்சமான வாழ்வை தரப்போவதாகவும், எங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தப்போவதாகவும் தம்பட்டமடிக்கும் நீங்களும் உங்கள் கும்பலும்தான் இங்கு நாங்கள் வாழ இயலாத சூழலை ஏற்படுத்தியவர்கள்

2 இப்போதும் நகரங்களுக்கோ ,கிராமங்களுக்கோ சென்றால் எப்போது எங்கள் பதிக்கு திருப்புவோம் என்றுதான் இருக்கிறது மற்ற மக்களின் வாழ்வையும் அங்கே ஏழைகளின் அழுகையையும் வசதியானவர்களின் டாம்பீகத்தையும் பார்த்து ஒருவித நடுக்கம் உருவாகிறது

3 நகரங்களுக்கு வேலைக்கு செல்லும் எங்கள் குழந்தைகள் படும் துயரம் சொல்லிமாளாது தினந்தோறும் ஏதாவது தைரியம் சொல்லியே அனுப்பினாலும்ஆறுமாததுக்கும் மேல் அந்த சூழலில் தொடர்ச்சியாய் வாழ்வது கடுமையான மன அழுத்தத்தை தருகிறது அந்த மன அழுத்ததின் மூலம் எங்கிருந்து ஏன் வருகிறது

4 அங்கே வந்தால் எல்லாம் வசதிகளும் செய்துகொடுக்க தயாராக இருக்கும் இவர்கள் இங்கேயே செய்துகொடுத்தால் என்ன குடி மூழ்கப்போகிறது

5 அதிகமான விலங்குகளின் வாழிடம், பப்பர் ஷோனாகத்தான் இருக்கிரதே ஒழிய மிடில், லோயர் சோனில் அது அதிகமாக
தலைகாட்டுவதில்லை இங்கே நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வந்தவாசிகளையும், பெரிய முதலாலிகளையும் வெளியேற்றிவிட்டு எங்களுக்கு அந்த நிலங்களின் ஓரங்களை விட்டுவிடுங்கள் நாங்கள் அடர்ந்த மலைகளுக்குள்ளிருந்துகூட அங்குவந்து குடியிருக்கிறோம் நீங்கள் உட்பட உங்கள் துறைகளும் இங்கு காலடிவைக்கவேண்டாம் நீங்கள் அளக்கும் சென்சிடீவ் விலங்கு சுதந்திரமாக உலவட்டும் நாங்கள் ரெடி கம்பணிகள் தயாரா

6 நகரவாசிகள் நீங்கலெல்லாம் எல்லாவிதமான வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு சந்தோசமாக இருக்கும்போது நாங்கள்(பழங்குடிகள்) மட்டும், ஏன் கஷ்டப்படவேண்டும் என்ற கேள்வி எங்களுக்கான அடிப்படை வசதிகோரி உங்களைப்போன்றவர்களை நோக்கி நாங்கள் கேட்டது

நீங்கள் மிக விசமத்தனமாக அதை எங்களுக்காக காலங்காலமாக துணையாக இருந்துகொண்டிருக்கும் சின்னாம்பதியிலும் வச்சாத்தியிலும் தண்டேவாடாவிலும் தாளவாடியிலும் எங்களுக்காக எங்களோடு சித்திரவதைகளை அனுபவித்த எங்களுக்கான குரலாக இருந்தவர்களை நோக்கி தந்திரமாக எழுப்புகிறீர்கள்

அப்போதுதெல்லாம் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள், ஏதாவது வாரியக்கூட்டங்களிலோ உயர்ரக ஓட்டல்களிலோ உரையாற்றிக்கொண்டிருந்த , கம்பளிப் புழுவின் புழுக்கைகளை ஆராய்ந்துகொண்டிருந்த உங்களின் திடீர்பாசத்துக்கு காரணம் என்னவென்பது எங்களுக்கு தெரியாமலில்லை

7 ஒரு தண்ணீர் டேங் கேட்டால் நீங்கள் நகரத்துக்கு வந்து பாருங்கள் பலாற்றை ரெடி பன்ணிவைத்திருக்கிறோம்


ஒரு காரை வீடு கேட்டால் நகரத்துக்கு வாருங்கள் உங்களுக்கு மாபெரும் அரண்மனையை தயார் செய்து வைத்திருக்கிறோம்


படிக்க ஒரு பள்ளிகூடமும் நல்ல ஆசிரியனும் கேட்டால் கீழேவாருங்கள் உங்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைகழகமே தயாராக இருக்கிறது
இப்படி சொல்லும் உங்களை பார்த்துகேட்கிறோம்
இப்போது கீழே உள்ள மக்கள் அனவருக்கும் நீங்கள் ஒழுங்கான இருப்பிடவசதியை அளித்திருக்கிறீர்களா?


நாள்தோறும் பல்லாயிரக்கணக்காணவர்கள் வாழ்விடங்களை அந்நிய காசுக்கும் உங்கள் நகரை அழகுபடுத்தும் முயற்சிக்கும் இழந்துபோராடும் மக்களை நாங்கள் சந்தித்திருக்கிறோம்

கீழே உள்ள மக்கள் அனைவருக்கும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா?

தண்ணிக்காக பல கிலோமீட்டர் இப்போதும் நடக்கும் கிராமங்களை பார்த்திருக்கிறோம்

கீழே உள்ளஅனைவருக்கும் சமமான கல்வி வசதி கொடுக்கப்பட்டுள்ளதா?

பலலட்சக்கணக்கான குழந்தைகள். குழந்தை தொழிலாளிகளாக இருப்பதை காட்டுகிறதே உங்கள் புள்ளிவிவரங்களில் எங்கள் குழந்தைகளும் இணையவேண்டும் என விருப்புகிறீர்களா?


பலலட்சம் பெண்கள் பாலியல் தொழிலாக அலைவதாக சொல்கிறதே எங்கள் பெண்களையும் உங்கள் சுற்றுலா நகர வளர்ச்சிக்கு இரையாக்கப்போகிறீர்களா?


சில விதிவிலக்குகளை எடுத்துக்கொண்டு அதையே பொதுவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதும் அதை விதியாக மாற்ற முயல்வதும் துரோகமாக தெரியவில்லையா?


அட செல்போன்களால் சிட்டுக்குருவிகள் காணாமல் போகிறதென்று பலர் தெரிவித்த பிறகும் அந்த சின்ன வசதியையே கைவிடமுடியாத நீங்கள், காலம் காலமாய் ஒன்றாய் வாழ்ந்த புலிகளைவிட்டுவிட்டு காடுகளையும் விட்டுவிட்டு வெளியே வாருங்கள் உங்களுக்காக ஒரு பரலோக ராஜ்ஜியம் காத்திருக்கிறது என்று அழைப்பதை எப்படி நம்பகமானதாக எடுத்துக்கொள்வது


புலியே வந்து சொன்னாலும் நீங்கள் உங்கள் பிரசங்கங்களை விட்டுவிடமாட்டீர்கள். ஏனென்றால் பழகிவிட்ட ஒரு விசயத்தை அதிலும் உங்கள் சமவெளிக்காரர்களின் பரம்பரியமான குற்றத்தை மறைக்க வசதியானதும் உங்களுக்கு அடையாளத்தையும், வருமானத்தையும், அந்தஸ்த்தையும் ஒருசேர ஏற்படுத்தித்தரும் ஒன்றை அவ்வளவு எளிதில் விட்டுவிடமுடியாதுதான்


ஆனால் உங்கள் அந்தஸ்துகளின் கொண்டாட்டங்களின் வெடி எங்கள் வாழ்க்கையின் மேல் விழுகிறது


நாங்கள் எங்கள் வாழ்வையும், புலிகளின் மூச்சையும் உங்களிடம் விட்டுவிடப்போவதில்லை

September 29, 2010

புதிய ழ வும் பழைய கசடதபற வும்


ஒரு கட்டத்தில் கோவைமாநகரில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று கவிதை என்று பேசுகிற அத்தனை இளசுகளும் மொத்தமாய் கூடும் ஓர் இடம் பாசறை அதை ஆரம்பத்தில் அண்ணன் மரபின் முத்தையாவும் தற்போது தனது இலக்கியத்துக்கு 302 செக்ஷன் போட்டுவிட்டு நீதிபதியாகி போய்விட்ட அண்னன் தமிழினியனும் சேர்ந்து குஜராத் சமாஜில் நடத்துவார்கள் எல்லா கல்லூரிகளின் பிரதிநிதிகள் இருப்பார்கள் அது கவிஞர்களின் வேடந்தாங்கலாய் இருந்தது என்றுகூட சொல்லலாம்

என்றும் பாசறை தனக்கான அரசியலை விட்டுக்கொடுக்கவேயில்லை அரசியல் வகுப்புகள் என்று தெரியாத அளவுக்கு அரங்கம் தொடர்ந்து ஒர் பெரும் பட்டாளத்தை தயார் செய்திருந்தது. அப்போது நாங்கள், நாங்கள் என்றால் சின்ன குழுதான் முழுக்க அவர்களின் அரசியலுக்கு அப்பாற்பட்டு கடைசி இருக்கையில் உட்கார்ந்துகொண்டு டிராட்ஸ்கியயும் கிராம்ஸியையும் அதர்க்கு சம்பந்தமே இல்லாத சிலபேரையும்பிடித்துவந்து உட்காரவைத்துக்கொண்டு குதரிக்கொண்டிருப்போம் மண்டயோடுகளில் மார்ட்டின் மலம் கழித்து வைப்பான் பூபதி நார்த்போல் அட்டையில் இருக்கும் பூமி உருண்டையை வைத்துக்கொண்டு மீமாம்சம் பேசிக்கொண்டிப்பான் ஆனாலும் எங்கள் கவிதைகளையும் வாசிக்க தவறியதில்லை கட்டாயம் பெரும் பிரச்சினைகளாய்தான் நாங்கள் இருந்திருப்போம்

சரவணன் என்றொரு நண்பர் கடைசியில்தான் கவிதை படிக்க வருவார் எல்லோரும் படிக்கும்போது ஏதோ குறிப்பெடுத்துக்கொண்டிருப்பார் கடைசியில் எல்லோருடைய கவிதையிலிருந்தும் சொல்லையெடுத்து ஒரு டப்பாவுக்குள் போட்டு கலக்கி அடிப்பார் அது அரங்கத்தை நிசப்தமாக்கும்கடைசிவரை அந்த தொழில்நுட்பம் எங்களுக்குள் ரகசியமாகவே இருந்துவந்தது. இதுதான் நவீனகவிதை என்னும் நம்பிக்கையில் அந்த விக்கிரமாதித்தன் இன்னும் மனம் தளரவேயில்லை தற்போது வழக்கறிஞராக இருக்கும் அவருக்கு நாங்கள் வைத்தபெயர் கவிஞர் three eighty
சிலபேர் மேடையேறி சிலவிநாடிகள் நின்றுவிட்டு ‘’பிரபாகரன்’’ என்று மட்டும் சொல்லி விட்டு இறங்கிவிடுவார்கள்
‘’வவுனியா காடிருக்கும் திசைநோக்கி வணங்கி’’ சிலர் தொடங்குவார்கள்
தற்போது செய்தி வாசிப்பாளராக இருக்கும் சுந்தரராமன் மொசைக்கில் பழம் வழுக்குவதுபோல் இழைத்து இழைத்துப்படிப்பார்
மிகப்புகழ்பெற்ற ஹேர்லிக்ஸ் கவிதைவாசித்த பெரியவர் இப்போதும் பந்தயசாலையில் முத்தமிழ் அரங்கத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்

தமிழுக்கும் மரபுக்கும் பூ சாகோ கலை அறிவியல் கல்லூரியின் வார்புகள் என்ற ஒரு பெருமிதம் இருந்துகொண்டே இருக்கும் அது தவறில்லையென்றே தோன்றுகிறது ஒரு கட்டத்தில் அரசி¢யல் காரணமாக பாசறைக்கு குஜராத் சமாத்தில் இடம் கொடுப்பதில் பிரச்சனை நிலவிய நினைவு மேலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது மங்கலான நினவில் இருக்கிறது ஆனாலும் ஒரு விடாப்பிடியான வைராக்கியம் பாசறையை தொடர்ந்து நகர்த்திக்கொண்டே இருந்தது
அதற்கு ஒரு காரணம் மாற்றுகளுக்கு மதிப்பளிக்கும் தன்மையும் ஜனநாயகமும் அதன் வேரிலேயே இருந்தது என நினைக்கிறேன் ஏனென்றால் மரபும், தமிழும் நேரெதிர் துருவங்கள் ஒருவர் ஆத்திகம் மற்றவர் நாத்தீகம் ஒருவர் மரபு மற்றவர் புதுசு இருவரும் இணைந்து அரங்கத்தில் மின்னலிடும் கவிதைகளை தலையில் வைத்துக்கொண்டாடிக்கொண்டிருப்பார்கள் நல்ல கவிதைகளை புத்தகமாக்கவும் தயங்கியதில்லை

அப்பூரம் இலக்கிய பாசறை என்னும் இதழை கொண்டுவந்து மாதமாதம் அந்த அரங்கத்தில் வரும் கவிதைகளை வெளியிடுவார்கள் அது எத்தகையது இதை வெளியிடலாம என்று பலநேரம் பிரித்துகூடபார்த்ததில்லை
புவனாகிட்ட கேட்டால் ‘ஒருத்தன் எழுதறதே பெரிசு எடுத்த எடுப்பிலேயே அதை எதுக்கு காயடிக்கனும் எல்லாம் இப்படித்தான் தொடங்கும் ஆனால் இப்படியே தொடராது ’ அவர்களுக்கு வாசிப்புகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தருவார்கள். அங்கேதான் நாங்கள் கே ஆர் பாபுவிடமிருந்து வெண்பாக்களையும் அவைநாயகனிடமிருந்து ஹைக்கூக்களையும் உள்வாங்கினோம் இலக்கிய ஆளுமைகளை என்று சொல்லும் சிலரை அங்கேதான் சந்தித்திருதோம்
ஒரு நாள் நாகர்ஜுனனின் கர்நாடகமுரசும் தமிழ் இலக்கியத்தின் மீதான ஆய்வும் என்ற புத்தகத்தை வாசிக்க நேரிட்டது அது தமிழின் முதல் நான் லீனியர் புத்தகம் என்றே கருதுகிறேன் அது எங்களை நவீனகவிதைகளை நோக்கி தூக்கியெரிந்தது அப்புறம் ஆத்மநாம் வந்தார் பின் யாராரோ வரிசையாக நூல்பிடித்து வந்தார்கள். மூலங்களை கற்பது என்ற போக்கை முற்றிலுமாக கடாசிவிட்டோம்
நானும் பாசறையில் சாட்டைகளை சிலமுறை சுழட்டியிருக்கிறேன் ஆனாலும் அவர்கள் என்னை எங்கும் விட்டுக்கொடுத்ததில்லை அவர்கள் ஏற்படுத்திய வாய்ப்பு, கவிதை பண்ணையார்கள் இடம் பெறும் மாபெரும் அரங்கங்களில் எனக்கான இடத்தை தந்துகொண்டே இருந்தது நான் இளங்கலை பயின்றுகொண்டிருந்த நேரம் சென்னையில் நாங்கள் அனுதாபிகளாக இருந்த ம லெ(மக்கள் யுத்தம்) அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட அனைதிந்திய புரட்சிகர இலக்கிய அமைப்பில் (ALRC) ஒரிசா பெங்கால் பீகார் என்று இந்தியாவின் அனைத்து மாநிலமும் பங்குற்ற அந்த கவியரங்கில் தமிழகத்தின் சார்பில் ஒத்தையாய் மேடையேறினேன் அதற்கான தைரியத்தை நான் பாசறையிடமிருந்து கொஞ்சம் பெற்றிருந்தேன்

பாசறை இழுத்துமூடப்பட்டது அதற்க்குப்பினால் பெரும் இடைவெளி.................... கவிதைகளை விட்டுவிட்டு மீண்டும் களங்களுக்கு போனோம் களங்களில் குறிப்பாக சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வேகமாகவும் தீவிரமாகவும் பணியாற்றி உளவுப்போலிசாரின் சரித்திரப்புகழ்வாய்ந்த டைரியில் எங்களுக்கென்று ஒரு இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டோம் அங்கும் கவிதைகளை கைவிட்டதில்லை பாடல்கள் மூலமாகவும் தொடர்ந்துகொண்டிருந்தோம் இப்படியாக நிறைய பதியமுடியும் அளவுக்கு அனுபவங்களை சேமித்திருக்கிறோம்
இன்று நெருஞ்சி இலக்கியமுற்றம்( என்னாச்சு மீனாட்சி),த மு எ ச, கலை இலக்கிய பெருமன்றம், பாரதி இலக்கிய பேரவை, சூலூர் இலக்கிய பேரவை, என்று நிகழ்வுகள் ஏதாவது ஒரு வடிவத்தில் எப்படியாகிலும் தொடர்ந்துகொண்டிருந்தாலும் பாசறை போல் மீண்டுமொரு ஜனநாயககாலம் வராதா என்று இப்போதும் சில பொழுதுகளில் ஏங்கியது உண்டு

பேராசிரிரர் மணிவண்ணால் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அனைவரையும் அரவனைக்கும் புதிய ழ பாசறையின் சில கூறுகளோடு வளர்வது மகிழ்சியளிக்கிறது

September 25, 2010

ஆதிவாசிகளை ஏமாற்றும் நகரவாசிகள் - தமிழக அரசியல் -பாமரன்


அமெரிக்காவில் செவ்விந்தியப் பழங்குடிகள் பட்டபாட்டையும்... மாயன் பழங்குடியினரைப் பற்றியும் மண்டையை உடைத்துக் கொண்டு எழுதும் எழுத்தாளர்களுக்கு மத்தியில் நம் உள்நாட்டு ஆதிவாசி மக்களைப் பற்றிய கவிதை நூல் ஒன்றினை ஓசைப்படாமல் கொண்டு வந்திருக்கிறார் நண்பர் லட்சுமணன். பிளக்ஸ்... பேனர்... சிறப்பு விருந்தினர்... அழைப்பிதழ்... என ஏக அமர்க்களங்களோடு நாம் நூல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் வேளையில்... அந்தப் பழங்குடி மக்கள் வாழும் பகுதியில்... அதுவும் அந்தப் பழங்குடி மக்களை வைத்தே வெளியிட வைத்திருக்கிறார் லட்சுமணன். அந்த கவிதை நூலின் பெயர்தான்:ஒடியன்.

கோவை அருகிலுள்ள ஆனைகட்டி பகுதிகளில் வாழ்ந்து வரும் இருளர் பழங்குடி மக்களைப் பற்றிய கவிதை நூல் இது.

1987 வாக்கில் ஆனைகட்டி மலைப்பகுதிகளிலுள்ள தூமனூர், தூவைப்பதி போன்ற பகுதிகளுக்கு நண்பர்களோடு சென்று தெரு நாடகங்கள் போட்டிருக்கிறோம். அதற்கு முன்னோடியாக இருந்தவர்கள் மறைந்த என் தோழர்கள் சத்யன், சசி போன்றவர்கள்தான். அதன் பின்னர் ஆதிவாசி மக்களுடனான சந்திப்பு அடிக்கடி இல்லாவிடினும் அவ்வப்போதாவது நிகழ்வதுண்டு. அதனால் அவர்களது மொழி ஓரளவுக்கு பரிச்சயம்தான் எனக்கு. ஆனால் இன்றைக்கு ஏறக்குறைய அழிந்துவரும் மொழிகளில் ஒன்றாக அந்த இருளர்களது மொழியும் இருக்கிறது என்பது சமகாலத் துயரங்களுள் ஒன்று.

இந்த வேளையில் பணபலமும், அடியாள் பலமும் கொண்ட நகரமிராண்டிகளால் அம்மக்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதை எழுத்துவடிவம் இல்லாத அவர்களது பேச்சு மொழியிலேயே சொல்லியிருக்கும் விதம் வெகு நயம்.

‘‘அஞ்சு இட்லிகூ

ஆறு ஏக்கரே கொடாத்து

காலேவாயிலே

கல்லு சொமக்கே நா.”



இதுதான் அவர்களது மொழிநடை. இதையே நகர வார்த்தைகளில் விளக்குவதானால்...

“ஐந்து இட்லிக்கு

ஆறு ஏக்கர் ஏமாந்து

செங்கல் சூளையில்

கல் சுமக்கிறேன் நான்.”

என்றும் சொல்லலாம் இக்கவிதையை.

இட்லியையே பார்க்காத அந்த ஆதிவாசி மக்களை ஏமாற்றி அவர்களது நிலங்களை நகரவாசிகள் எழுதி வாங்கிய அயோக்கியத்தனங்கள் ஏராளம் இருக்கிறது இந்த மண்ணில். ஒவ்வொரு கவிதையின் கீழேயும் ஆதிவாசி மக்களது மொழிக்கான அர்த்தங்களை அளித்திருக்கிறார் கவிஞர். அத்தோடு நில்லாமல் அதன் அருகிலேயே இருளர் மொழிக் கவிதைகளை நகரவாசிகளுக்கான வார்த்தைகளிலும் படைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

வீடு என்பதை அவர்கள் கூரே என்கிறார்கள்.

தாயை அக்கா என்கிறார்கள்.

தந்தையை அம்மே என்றும் தவளையை கப்பே என்றும் அழைக்கிறார்கள் இம்மக்கள்.

கள்ளம் கபடமற்ற இந்தப் பழங்குடி மக்களிடம் எள்ளலும் நையாண்டியும் துள்ளி விளையாடுவதற்கு அடையாளமாய் ஒரு கவிதை...

“ஆதிவாசிக்கு

அற்புதமா திட்டோம் தந்தேங்கே

டெவலப்புன்னு

டெண்டரு போடுகே

பேப்பருலே எழுதுகா...

டீவிலே காட்டுகா...

ஊரெல்லாம் பேசுகா...

போட்டா புடிக்கா...

நினாக்கு பெரியாபிசர் பதவீ.

இப்போ

நிம்து பேரு வாங்காக்கு

நேனு கடங்காரே.”

அரசு அதிகாரிகளும், தொண்டு நிறுவனங்கள் என்கிற பெயரில் இயங்கும் தன்னார்வக் குழுக்களும் ஆதிவாசிகளுக்கு திட்டங்கள் தீட்டுகிறோம் என்கிற பெயரில் எப்படியெப்படியெல்லாம் தங்களைக் கடன்காரர்கள் ஆக்குகிறார்கள் என்பதை அப்பட்டமாக நக்கலடிக்கும் வரிகள்.

அவர்கள் பேசும் மொழி நமக்கு புதிதாய் இருக்கலாம்। கொஞ்சம் சிரமமாகக்கூட இருக்கலாம். ஆனால் வளர்ச்சியின் பெயராலும்... நாகரிகத்தின் பெயராலும் அழித்தொழிக்கப்பட்டு வரும் இம்மக்களுக்கு ஏதேனும் நாமும் செய்தாக வேண்டும் என்கிற அக்கறையும் சமூகப் பொறுப்பும் இருந்தால் அந்தச் சிரமம் நம்மை ஒருபோதும் உறுத்தாது. ஆகவே மக்களே... வாசிக்க ஆசையிருப்பின் அழையுங்கள்: 094886 57729. அப்புறம் உங்கபாடு அவுங்கபாடு.
http://www.tamilagaarasiyal.com/ActionPages/Cont

August 03, 2010

அரை செண்டில் ஒரு சுடுகாடும் கோடித்துணி நெய்யும் சாதிப்பேயும்

µ÷ ¦¾¡¨Ä§Àº¢ «¨ÆôÒ ±ý¨É ¸ðÊô§À¡ð¼Ð


«ó¾ «¨ÆôÒìÌ ¦º¡ó¾ì¸¡Ã÷ ±øÄ¡ §¿Ãí¸Ç¢Öõ, À¡¾¢ì¸ôÀð¼Å÷ ¿¢¨Ä¢ĢÕóРŢºÂí¸¨Ç «ÏÌõ ÄðÍÁ½ý, ¾¸Åø¦¾¡Æ¢ø ÑðÀòÐ¨È «¨ÁîºÃ¢ý «Ãº¢Âø ¯¾Å¢Â¡Ç÷.


±ý ¯¼ø À½õ ¦ºöžüì¸¡É ¾Ì¾¢Â¢ø þø¨Ä¾¡ý ¬É¡ø ¾Å¢÷ì¸ÓÊÂÅ¢ø¨Ä

¸¡Ã½õ ¦ÅÚõ «È¢Ó¸õ ±ýÀÐ ÁðÎÁøÄ «Åâý «¨ÆôÒõ, À½Óõ ±ô§À¡Ð§Á´Îì¸ôÀð¼ Áì¸Ç¢ý À¢Ãɸ¨Ç ¦ÅǢ즸¡ñÎÅÕžü측¸§Å¡ «øÄÐ «õ Áì¸Ç¢ý «ÊôÀ¨¼ À¢ÃɸÙìÌ ²§¾¡ ´Õ ¾£÷¨Å§Â¡ ¾Õž¡¸ þÕó¾¢Õ츢ÈÐ ±ýÀÐ ±ÉÐ «ÛÀÅõ


§¾¡Æ÷ ±ôÀ×Óõ Á¨Ä¨Â§Â À¡÷òÐ즸¡ñÊÕ측Áø ¦¸¡ஞ்ºõ வேறு À¢Ãɸ¨Ç À¡÷측ġ§Á! ÅÕ¸¢È£÷¸Ç¡?


±ôÀÊ ¾ð¼ ÓÊÔõ?


‘¿¡ý «ýëÕìÌ Àì¸ò¾¢ø¾¡ý þôÀ þÕ째ý ¯í¸û À½ôÀðÊÂÄ¢ø þÕìÌõ «ó¾ °÷ §Àà ¦¸¡íºõ ¦º¡øÖí¸ ¿¡ý «í¸ §À¡Â¢¼§Èý ¿£í¸ À¢ýÉ¡§Ä ÅóÐ §ºóÐì¸í¸’ ±ý§Èý


¦º¡ýÉ¡÷


«ôÀÊ Ó¾Ä¢ø ¦ºýÈ °÷


¿øÄ¢ ¦ºðÊ À¡¨ÇÂõ


§¸¡¨Å Á¡Åð¼õ «ýëâĢÕóÐ 5 ¨Áø ¦¾¡¨ÄÅ¢ø þÕìÌõ ´Õ ÅÃñ¼ ¿¢ÄôÀ̾¢ «Ð


¦Àâ¡÷ ÀÊôÀ¸õ ±ýÈ Òò¾õÒ¾¢Â ¦ÀÂ÷ÀĨ¸ ±ý¨É ÅçÅüÈÐ


«È¢Ó¸òÐìÌ À¢ýÉ÷ ±ý¨É «Å÷¸û À̾¢ìÌû «¨ÆòÐýÈÉ÷

.............................................................................

«ÄȢ ¦¾¡¨Ä §Àº¢¨Â ±ÎòÐô§Àº¢§Éý

’¿øÄ§Å¨Ä ¿£í¸û þÃñÎ Á¡¾õ ¸Æ¢òÐ Åó¾¢Õ츢ȣ÷¸û §À¡ÉÁ¡¾õ Åó¾¢Õó¾¡ø ¯í¸û ¨¸¸û ¦Åðð¼ôÀðÊÕó¾¡Öõ ¬îºÃ¢ÂôÀΞ츢ø¨Ä ’’


±ýÉ ¦º¡øÄÈ£í¸?


¬Á¡õ ¦ºø§À¡ý §Àºìܼ¡¦¾ýÈ ±Ø¾ôÀ¼¡¾ ¾¨¼Â¡¨½ þ¿¾ Àஞ்º¡Âò¾¢ø இருந்தது


‘´Õ ¦¾¡¨Ä¦¾¡¼÷ÒòÐ¨È «¨ÁîºÃ¢ý ¦¾¡Ì¾¢Â¢ø ¦ºø§À¡É¢ø §Àºò¾¨¼Â¡?


¬Á¡õ ¾Ä¢òиÙìÌ ÁðÎõ


þýÛõ «¾¢÷¢ø ¯¨ÈóÐ ¿¢ý§Èý


±ýÉ §¾¡Æ÷ þÐ째 þôÀÊ ¬¸¢ðËí¸ Å¡í¸ þýÛõ À¡÷ô§À¡õ


þ¾À¡Õí¸ þ×Ú §ÀÕ ¦ºøÅሠõ.. ¦º¡øÖôÀ¡


§À¡ÉÁ¡ºõ þ§¾ ¿¡Ùí¸(21.6.2010)

«ó¾¡ ¦¸¼ì¸¢øÄ «ó¾ Àஞ்º¡ÂòÐ ¬À£Í Àì¸õ §Áøº¡¾¢¨Â §º÷ó¾ ãÏ

þÇÅð¼í¸ º£ð¼¡ðʸ¢ðÊÕó¾¡í¸


õ


¿¡Ûõ §¾Åფõ «í¸¾¡ý ¿¢ýÉ¢Õó§¾ý


õ.. ¦º¡øÖí¸


«ôÒÈõ «×í¸¸¢ð¼ ²í¸ Àஞ்ÂòÐ ¾¨ÄÅ÷ þí¸øÄ¡õ ¦ÅǢ¡¼¡ÐýÛ ¦º¡øÄ¢Õ츢ȡ¦ÃøÄ¡ ¦¸¡íºõ ¾ûÇ¢ ¦Å¨Ç¡ð¼Ä¡Á¢øÄ£í¸Ç¡

Á⡨¾Â¡ö¾¡ý ¦º¡ý§Éý


¿£ ¡ռ¡ ±í¸ÙìÌ Òò¾¢ ¦º¡øÄ....... ºì¸¢Ä¢ò¾¡§Â¡Ç¢....!


²í¸, ±ýÛí¸ «×Õ ¦º¡ýɾ ¦º¡ý§Éý «ùÅÇ×¾¡ý ºÃ¢ ±ýɧÁ¡ ÀýÛí¸ «ôÒËÛðÎ ¾¢ÕõÀ¢§Éý


«ó¾ Àºí¸ ±øÄ¡Õõ ±ý¨ÉÔõ §¾ÅᨃÔõ ¦À¡ÃðÊ ±ÎòÐ ¨¸Â¢ ¸¡Ö À̦¼øÄ¡õ §ÀòÐÐð¼¡í¸


«ôÒÈõ ±í¸¡Ù¸ ÅóÐ ¸¡ôÀ¡ò¾¢ ¦¸¡ñΧÀ¡ö ¬ŠÀò¾¢Ã¢§Ä §ºòÐÉ¡í¸


þýÛõ ÁÕòÐÅõ À¡÷òÐ즸¡ñÊÕó¾ ŨÇó¾¢Õó¾ ¦ºøÅሠÀ¡¾ò¨¾Ôõ Àü¸û ¯¨¼óÐ Å£í¸¢Â¢Õó¾ §¾Åტý Ą̀¼Ôõ À¡÷òÐ ¦Å𸢾¨ÄÌÉ¢ó§¾ý


«ôÒÈõ ±ýÉ ¦ºö¾£í¸?


«ôÒÈõ §À¡Ä£ÍÄ §À¡ö Ò¸¡÷¦¸¡Îò§¾í¸


¬É¡ §À¡Ä£Í §¸Í §À¡¼Ä£í¸


«ôÒÈÁ¡ ¦Àâ¡÷ ¾¢Ã¡Å¢¼÷ ¸Æ¸ ¾¨ÄÅ÷ Á½¢Âñ½í¸¢ð¼ ¦º¡ý§É¡õ

«×Ú ±í¸Ù측¸ Š§¼ºÛÄ §Àº¢É¡Õ

«×Õ ºñ¼§À¡ð¼ ¦À¡È̾¡ý §¸§º §À¡ð¼¡í¸


þ¨¾ì§¸ûÅ¢ôÀð¼ §Áøº¡¾¢ì¸¡Ãí¸'¿¡í¸Ùõ §¸Í ¾¡§Ã¡õ «×í¸¨ÇÔõ ¯ûÇ ÒÊîͧÀ¡Îí¸ýÛ' Àஞ்º¡ÂòÐ À¢Ãº¢ÃñÎ ¾¨Ä¨Á墀 ±ø§Ä¡Õõ §Ã¡¼ ÁâîÍ ¯ì¸¡óÐð¼¡í¸


±í¸§Á¨ÄÔõ ¦¸¡¨ÄÓÂüº¢!!!!!!!!!!! ÅÆì̧À¡ðÎ ¯ûǡçÀ¡ðÎð¼¡í¸


¿£í¸ ±í¸ §ÁÄ ¦¸¡Îò¾ À¢º¢¬¨Ã Å¡ÀŠ Å¡í¸¢É¡ ¿¡í¸Ùõ ¯í¸ §ÁÄ ¦¸¡Îò¾ §¸º Å¡ÀŠ Å¡í¸¢ì¸§È¡ÓýÛ Àஞ்º¡ÂòÐìÌ Åó¾¡í¸


þí¸ À¡Õ ¯í¸§ÁÄ §À¡ðÊÕ츢ÈÐ ¦¸¡Äì§¸Í ¯í¸ Å¡ú쨸 «ùÅÇ×¾¡ý


¬Á¡õ þÐ ¦¸¡Œºõ ¦Àâ §¸Í¾¡ý ±ÐìÌ «×í¸ ¸¢ð¼ §Á¡¾¢ðÎ ¨ÀºÄ¡ §À¡í¸

Áக்கள் ¦º¡øÄ ¦º¡øÄ À§ÁÈ¢¢ì¦¸¡ñ§¼ §À¡ÉÐ


‘ºÁ¡¾¡ÉÁ¡’!!?? §À¡¸Ä¡õ ±ýÈ «ù÷¸Ç¢ý ÓʨŠ´ÕÅâý

þÃ× ºó¾¢ôÒ Á¡üÈ¢Õó¾Ð «ó¾ ºó¾¢ôÒ «õÁì¸ÙìÌ ¨¾Ã¢Âò¨¾ ÁðÎÁøÄ¡Áø

§Áøº¡¾¢ì¸¡Ã÷¸Ç¢ý ¦¼ìɢ쨸Ôõ Òâ¨Åò¾¢Õó¾Ð


«¾üìÌôÀ¢ÈÌ


°§Ã ¾¢ÃñÎ ¸¡Åø¿¢¨ÄÂòÐìÌ ¦¸¡ñΧÀ¡Â¢Õó¾ ¦ºøÅᨃÔõ §¾ÅᨃÔõ Á£ðÎ즸¡ñÎÅó¾¢Õ츢ÈÐ


ÅÆì¸Á¡É ÀâÁ¡üÈí¸ÙìÌôÀ¢ÈÌ


±ó¾§Á¨¼Â¢ø «Å÷¸¨Ç «ÛÁ¾¢ì¸Å¢ø¨Ä§Â¡ ±ó¾ Áñ½¢ø «Å÷¸û §Àº ¾¨¼Å¢¾¢ì¸ôÀ𼧾¡ «§¾ þ¼ò¾¢ø ¨Á즺ð¸ðÊ Àó¾ø§À¡ðÎ ´Õ À¢ÃÁ¡ñ¼Á¡É ¦À¡ÐìÜð¼ò¨¾ ¿¼ò¾¢Â¢Õ츢ȡ÷¸û


¦À¡ý;¡Å¢ý ‘¿¼ó¾¸¨¾ ¾¢¨Ã¢¼ôÀðÊÕ츢ÈÐ. «¿¾ ÌÚõÀ¼ò¾¢ý þÚ¾¢ì¸¡ðº¢¨Â ¸ñ¼§À¡Ð, «õÁì¸Ç¢¼Á¢ÕóÐ ÀÈó¾ Å¢º¢Öõ, ÀÄò¾¨¸¾ð¼Öõ «Å÷¸Ç¢ý §Å𨸨 ¦ÅÇ¢ôÀÎò¾¢Â¢Õ츢றÐ


º¢ýÉ º¢Ú ¸¢Ã¡Áò¾¢ø ¬Â¢Ãõ§ÀÕìÌ §Áø ¾¢ÃñÊÕó¾ «ó¾ìÜð¼õ ¬¾¢ì¸º¡¾¢ì¸¡Ã÷¸ÙìÌ «îºò¨¾Ôõ ¾Ä¢òиÙìÌ «ÇÅ¢¼ÓÊ¡¾ ¨¾Ã¢Âò¨¾Ôõ ÅÆí¸¢Â¢Õ츢றÐ


þô§À¡Ð ¿¢¨Ä¨Á ¾¨Ä¸£Æ¡ö Á¡È¢Â¢Õ츢ÈÐ


þÃ𨼠¼õÇ÷ Ó¨È þø¨Ä


§Á¨¼Â¢ø «ÁÃÓʸ¢ÈÐ


¨¾Ã¢ÂÁ¡ö ¯ÄÅÓʸ¢ÈÐ


þó¾ Á¡üÈí¸¨Ç ÁüÈ ¸¢Ã¡Áí¸Ç¢Öõ ¦ºÂøÀÎò¾ ÀÊôÀ¸ §¾¡Æ÷¸û ÓÂýÚ¦¸¡ñÊÕ츢ȡ÷¸û

2

º¡¨Ää÷ À¢Ã¢¨Å ÅñÊ ¸¼ìÌõ§À¡Ð ®ŠÅÃý ¸¡ðÊÉ¡÷


þо¡ý ±í¸ Íθ¡Î


±Ð?


þ§¾¡ þо¡í¸


þÐÅ¡? «¾¢÷¢ø §¸ð§¼ý


¬Á¡í¸


¯Ä¸ò¾¢§Ä§Â Ó¾ýӾġ¸ «¨Ã ¦ºñÊø ´Õ Íθ¡ð¨¼ þí̾¡ý À¡÷ì¸ ÓÊó¾Ð


¦ÃñΧÀÕ ´ðÎ측 ¦ºò¾¡ ¦Áõ§Áľ¡ý ¦À¡¨¾ì§¸¡Ûí¸ †¡ †¡ †¡

¿ñÀ÷¸û §Å¾¨É¨Â ¿ì¸Ä¢ø Á¨Èò¾¡÷¸û


«¾À¡Õí¸ «ó¾ ¦À¡Ä¢§Áľ¡ý ¦À¡½ò¾ à츢¸¢ðÎ §À¡§¸¡Ûõ


¦À¡லி ŢðÎ ¸¡ðÎìÌûÇ ¸¡Ä¦Å «ùÅÇ×¾¡


²§É¡ ¦ÁÇÉõ ±ý¨É ´Õ ÀÕóÐ §À¡ø ÝÆóÐ ¦¸¡ñÎ ¦¸¡ò¾¢ò¾¢ýÈÐ


¸õÀ¢Â¢Ä ¿¼ìÌÈ Å¢ò¨¾ ±í¸¡ÅÐ ¦º¡øÄ¢ò¾ó¾¡ §ºò¾¢ÔÎí¸ - þРáÁý

±ÐìÌ


þó¾ ´ò¨¾ÂÊ墀 À¢½ò¨¾ à츣ðÎ §À¡ö ¦À¡¨¾ì¸ÈÐìÌò¾¡ý †¡†† ÁÚÀÊÔõ º¢Ã¢ò¾¡÷¸û


Íθ¡Î ¦À⺡¾¡ý þÕóÐí¸ ¦ÃñÎ ¸¡ðÎ측Ãí¸Ùõ º¸¡§À¡¼õ §À¡ðÎ ¾ûÇ¢ ¾ûÇ¢ ÅóÐ þôÀ þó¾ «¨Ã¦ºñð «¾¢ºÂò¾ ±í¸ÙìÌ ¯ðÎÕ측í¸


3

¿¡ð¨¼§Â þ¨½ìÌõ §¾º¢Â ¦¿Îíº¡¨Ä¢ø¾¡ý þó¾ °÷ þÕ츢ÈÐ


â§Ç ¸×ñ¼ý Òà÷........


«§¾¡ «í¸ ¦¾Ã¢Ô¾¢ø¨Ä¡ º¡÷.. «Ð¾¡ý ¿¡í¸ ¦Á¡¾øÄ þÕó¾ °Õ


²ý þôÀ «í¸ þø¨Ä¡ ¿£í¸?


«í¸ ÁÛºíÌÊ¢Õì¸ÓÊÔí¸Ç¡!


²ý?


«¾§Âý §¸ð¸È£í¸!


«ó¾ °ÕìÌÇ ¿¡í¸ ¿¼ì¸Ü¼¡Ð!

«×í¸ °ðÎÄ ¸ø¡½õ ¿¼ó¾ «ÐÄ ¿¡í¸ §À¡¸ìܼ¡Ð!!

செத்தா «ÐÄ ±ÎòÐðΧÀ¡¸ìܼ¡Ð!!!


..... ....


º£ÕýÉ¡ «ÐÄ §À¡¸ìܼ¡Ð!!


²ý §À¡¸ìܼ¡Ð ?


«Ð ¸×ñ¼Õ Å£¾¢í¸, «Ð¾¡ý ´§Ã ¸¡Ã½õ²¾¡ÅÐ ¿øÄÐ ¦¸ð¼ÐýÉ¡ «ó¾ Ìð¨¼ÅÆ¢§Â¾¡ý §À¡¸Ûõ ÅÃÛõ


«ó¾Ì𨼠ÅÆ¢¨Â À¡÷ò§¾ý «Ð ÅÆ¢¦ÂýÚ ¦º¡øžüì¸¡É ±ó¾ ¾Ì¾¢ÔÁüÚ º¢ýÉ கோடு §À¡ø ¸¡ðº¢ÂÇ¢ò¾Ð

«ó¾ ¿Ã¸òÐÄ Å¡Æ ºí¸¼ôÀðÎðÎ þí¸ ÅóÐ Ìʨº§À¡ðÎ ¦À¡ÆôÀ µðʸ¢ðÊÕ째¡õ


þí¸ ¸ÃñÎí¦¸¨¼Â¡Ð ¾ñ½¢Ôõ ¸¢¨¼Â¡Ð ¬É¡Öõ ;ó¾¢Ãõ þÕìÌÐ


²ý ¨ÄðÎõ ¾ñ½¢Ôõ §¸ð¸Ä¡õ ¾¡§É


§¸ð§¼¡§Á......!


þ§¾¡ þó¾ Å¡ö측ø «ÐÄÔõ Áñ½«ûÇ¢ §À¡ðÎÕîÍ


Å¡ö측ġ?


¬Á¡í¸ ¿¡í¸ þí¸ ÌÊÅÕõ§À¡Ð þÐ º¢ýÉ ÊîÍ þôÀ ¦Àâ šö측ġ ¦ÅðÊô§À¡ð¼¡í¸, ²Ã¢ô¦À¡Èõ§À¡ìÌìÌ ´ñÏõ ÌÎì¸Á¡ð¼¡í¸È¡í¸


«§¾¡ «×Õ ¾¨Ä¢ðξ¡ý ¾ñ½¢ìÌ ´Õ §¼íÌõ ÒÇÇí¸ ÀÊì¸ ´Õ Å£¾¢ ¨ÄðÎõ §À¡ðÎò¾ó¾¡í¸

ÒûÇí¸ ÀÊì¸ ¿¡í¸ ÌÊ¢Õì¸ ±ôÀÊ¡ÅÐ À¢ÃÉ ¾£òÐ ´Õ ²üÀ¡Î Àñ½¢ì¦¸¡Îí¸ ¯í¸Çò¾¡ý ¿õÀ¢Â¢Õ츢§È¡õ


¦¸ஞ்Íõ ¸ñ¸§Ç¡Î ¨¸¦ÂÎòÐ «¨ÁîºÃ¢ý ¯¾Å¢Â¡Ç¨Ã §ÅñÊ즸¡ñ¼¡÷¸û

4

«îºõÀ¡¨ÇÂõ


þí¸ 50 Ìʸ þÕ째¡õ ¬É¡ ¨ÄðÎõþø§Ä ¾ñ½¢Ôõ þø§Ä


²ýÉ¡ þÐ×õ Ì𨼦À¡Èõ§À¡ìÌ


«ôÒÈõ ±í¸ÙìÌ ±¼õ §ÅÏõÓýÛ Àஞ்ºÂòÐÄ §¸ð§¼¡õ

«×Ú °ðÎìÌ 3000 õ ÌÎí¸ பஞ்சாயத்துல þÕóÐ ´Õ «§Á¡ñ¼ §À¡ðÎ Àì¸òÐÄ þÕìÌÈ ¿¢Äò¾ Å¡í¸¢ ţΠ¸ðÊì¸Ä¡ÓýÉ¡Õ


¿¡í¸Ùõ Ìடுò§¾¡õ


À½ò¾ §ºò¾ÈìÌûள ¦À¡Èó¾ ¿¡Ù ¸ñÊÕîÍ «¾ ¦¸¡ñΧÀ¡ö «ôÀ

À¢Ãº¢¦¼ñ¼¡ þÕó¾ ̽§º¸Õ¸¢ð¼ ¦¸¡Îò§¾¡õ


¿¢Äõ Å¡í¸¢Â¡îÍýÉ¡ «í¸ §À¡¸§ÅñÊÂо¡§É


«×Õ ±í¸£í¸ Å¡í¸¢ ÌÎò¾¡Õ!


¿¢ÄòÐ측ÃÕ þôÀ «ó¾ Å¢¨ÄìÌ ÌÎì¸ÓÊ¡РþýÛõ ±îº¡ ÌÎí¸ýÛ §¸ì¸Ã¡Õ «¾É¡Ä þýÛõ À½õ §ÅÏÓýÛ §¸ð¼¡Õ


«ôÒÈõ «¾Ôõ ÒÃð¼ ÓÊÂÄ


¦ºÃ¢ நமக்கு «ùÅÇ×¾¡ý ÌÎòÐ ÅîºÐýÛðÎ «ó¾ À½ò¾ þôÀ ¾¢ÕõÀ¢§¸ð§¼¡õ


‘«ÐìÌ þÐìÌýÛ ¦ºÄš¢ÕîÍ’ ‘«ôÀ þÕó¾ «ó¾ ¬÷ ³ ¸¢ð¼ ÌÎò§¾ý «×Õ þôÀ transfer ¬¸¢ §À¡Â¢ð¼¡Õ’ «ôÀËýÛ ¸¨¾ ¦º¡øÄÈ¡Õí¸! þ§¾ Á¡¾¢Ã¢¾¡ý º¡¨ÄäâÄÔõ À½õÅ¡í¸¢ðÎ ÊÁ¢ì¸¢ ¦¸¡Îò¾¡Õ


¿¡ý ÄðÍÁ½ý Àì¸õ¾¢ÕõÀ¢§Éý

¿¢Äò¾ Å¡í¸¢ þó¾ Áì¸ÙìÌ Å£Î ¸ðÊò¾Ã§ÅñÊÂÐ ¬¾¢ ¾¢Ã¡Å¢¼ ¿ÄòШÈ¢ý ¦À¡ÚôÒ «¾¡§Ä þ¨¾ Á¡Åð¼ ¬¾¢¾¢Ã¡Å¢¼ ¿ÄòÐ¨È «¾¢¸¡Ã¢ ¸ÅÉòÐìÌ ¦¸¡ñΧÀ¡Â¢Õ츢§È¡õ «Å÷¸Ùõ ÅóÐ À¡÷¨Å¢ðÎ போயிருக்கிறார்கள், º£ì¸¢ÃÁ¡ þó¾ À¢Ã¨ÉìÌ Å¢Ê× ¸¢¨¼ìÌõ ±É ¿õÒ¸¢§Èý


þ¨¾ ¦ºÂøÀÎòÐÅÐ ÁðÎÁøÄ ºõÀó¾ôÀð¼ ШÈ¢ý §Å¨Ä, «ó¾ Áì¸û ÓýÉ¡ø °Ã¡ðº¢ò¾¨ÄÅâ¼õ þÆó¾ À½ò¨¾Ôõ Á£ðÎõ ¾Ã§ÅñÎõ


¦ºöÔÁ¡ ¬¾¢¾¢Ã¡Å¢¼ ¿ÄòШÈ?


¦¾¡¼÷óÐ ¾Ä¢òРŢ§Ã¡¾ô§À¡ì¸¢ø º¡¾¢¦ÅâÂ÷¸ÙìÌ Ð¨½Â¡¸ ¿¢üÀÐ ÁðÎÁøÄ

º¡¾¢¦Åâ§Â¡Î ¦ºÂøÀðÎ즸¡ñÊÕìÌõ °Ã¡ðº¢ ¾¨ÄÅ÷¸Ç¢ý À¾Å¢¨Â ÀȢ츧ÅñÎõ


þ§¾§À¡ýÈ À¢Ã¨É¸Ç¡ø அலைகழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் Àø§ÅÚ ¸¢Ã¡Áí¸¨ÇÔõ À¡÷¨Å¢ð¼À¢ÈÌ «Åâ¼õ ¦º¡ý§Éý


þ¨¾ ¬Å½ôÀÎòÐí¸û þó¾ பிரச்சனைகளின்போது கடைபிடிக்கப்பட்ட ÅƢӨȸû ÓÂüº¢¸û ÁüÈÅ÷¸ÙìÌõ ´Õ ÅÆ¢¸¡ð¼Ä¡¸ þÕìÌõ þ¨¾ ´Õ ¬Å½ôÀ¼Á¡¸ Á¡üÈ ÓÂüº¢ ¦ºöÔí¸û ±ýÚ §¸ðÎ즸¡ñ§¼ý


¯¼ÉÊ¡¸ ¦¾¡¨Ä§Àº¢Â¢ø ¦À¡ý;¡Å¢¼õ §Àº¢§É¡õ «Å÷ þ¨½óÐ ¦ºö§Å¡õ ±ýÚ ´òÐ즸¡ñ¼¡÷


Å¢¨¼¦Àü§Èý


þí§¸ ²üÀðÎ즸¡ñÊÕìÌõ Á¸ò¾¡É Á¡üÈí¸ÙìÌ பின்னாலிருந்து ¦ºÂøÀð¼ ¦Àâ¡÷ ¾¢Ã¡Å¢¼÷¸Æ¸ò¾¢ý ¾¨ÄÅ÷ ¦¸¡Çòà÷ Á½¢Ôõ, Ì þáÁ¸¢Õட்டிணனும்.


¦Àâ¡÷ ÀÊôÀ¸ò¾¢ý ¿ñÀ÷¸Ùõ,


µð¨¼ôÀüÈ¢ ¸Å¨ÄôÀ¼¡Áø இப்பகுதி ¾Ä¢òиǢý ¾¡÷Á£¸ «ÊôÀ¨¼¯Ã¢¨Á¸Ùìகாக Àì¸ÀÄÁ¡¸ ¦ºÂøÀðட ¾¸Åø ¦¾¡Æ¢ø ÑðÀòÐ¨È «¨Áîºரும்,


±ô§À¡Ðõ þõÁì¸Ç¢ý ¦¾¡¼÷À¢ø þÕóЦ¸¡ñÎ ¦¿Õì¸ÊÂ¡É §¿Ãí¸Ç¢¦ÄøÄ¡õ Ш½ ¿¢üÌõ «Åâý «Ãº¢Âø ¯¾Å¢Â¡ÇÕõ,


Žì¸òÐìÌõ Å¡úòÐìÌõ ¯Ã¢ÂÅ÷¸û




Footer