May 13, 2007

தாந்தோன்றி

மரத்தடியில்
வளர்ந்த வினாயகர்
இயல்பாகவே...
ஒரு புறம்குப்பைதொட்டியும்
அடுத்தபுறம் டாஸ்மாஸ்க் பாரும்
உடைபடுகிற தேங்காய்க்கு
உள்ளிருக்கும் மெளனங்கள்
விசும்புகிறது
சக்கரங்களில் வழிகிறது
சிட்ட்ரிக் அமிலம்

காரில்
போர்த்திருக்கும் துணிக்கு
தெரிய வாய்ப்பிருக்குமா
வாசல்காரியின் குளிர்

No comments:

Post a Comment

Footer