July 30, 2008
மீளாத கணங்கள்
எஞ்சுருக்குபையிலிருந்து நிறய எடுப்பேன்
எல்லாமும் வெச்சிருக்கேன்
தொட்டுப்பாரு
உங்கயி
உங்காலு
***
எல்லாரும்
ஏந்தலக்குள்ளார உக்காந்து
மண்டைய இடுச்சு
மாவிளக்கு வெக்றாங்க
இப்பதா
செவுத்துல இடிச்சு
செங்கல்லாட்டம் கொட்டுனேன்
******
வயித்துக்குள்ளபோயி
வக்கப்போறாயா சூடு......
கொட்டாவுயுட்டாலே
கொட சாஞ்சுருவே
*********
வீட்டபுடுங்கி
வீதியிலபோட்டவ
கொலைய அறுத்து
கோவிலுக்கு கொண்டு போயி
மொளகா அரச்சு
மாசாணிதலையிளும்
எந்தலையிலும்
July 29, 2008
கூத்துக்கலைஞர்களுக்கு விஷம் கொடுத்துக் கொல்லுமா அரசு
ஒருத்தர்கிட்ட எதாவது வாய்ப்பு இருந்தால் அதைஎப்பிடிக்குப்பயன்படுத்துவது என்று யோசித்து பயன்படுத்திவிடுபவர்களுக்குமத்தியில் எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை தன் இலக்கியத்துக்கும்,உயிர்துடிப்பிற்க்கும் ரத்தமும் சதையும் தருகிற கூத்துக்குழுவிற்க்குஅர்பணித்துவிடுவதில் கில்லாடி 'மணல்வீடு ' பத்திரிக்கையின் ஆசிரியர் ஹரிகிருஷ்ணன்
எனது இருப்பு ஆனைக்கட்டியாக மாறியதாலும் எங்கள் ஆவணப்படத்தின்படப்பிடிப்பு முழுக்க மேற்குதொடர்ச்சிமலையில் நடப்பதாலும் தப்பித்துக்கொண்டிருந்தேன்
மாங்கரை தாண்டினால் நாட் ரீச்சபுள்.....வீட்டுக்கு வந்தால் தான் ரீச்சபுள
பின்னர் ஒரே கலாய்ப்புதான்
அற்புதமான உடல்மொழி!
பழுத்த புலவர்களைப்போல் சீறும் வசனங்கள!
தலைக்கனமில்லாத அணுகு முறை
மக்களை கூத்தில் பங்கேற்க வைத்தல்
உடனடி சமாளிப்புகள்
வெளிப்படையான் காட்சி அமைப்பு
இப்படி அசாத்திய திறமைகளை வைத்துக்கொண்டு ஒரு எல்லைகளுக்குள் சுருங்கிக்கிடப்பத்ற்க்கு நாமும் ஒரும் காரணமாய் இருக்கிறோம் என்று குற்ற உணர்வு குத்தியது. அளப்பறிய அர்பணிப்பும், வேகமும் நடிப்பும் பலநேரங்களில் என்னை கேமராவை கையாளுவதிலின்றி விளக்கிவைத்தது
ராஜா தனது பத்திரம் முடிந்தவுடன் மிருதங்கம் அடிக்க வந்துவிட்டார் அவர்தோற்பாவைக்கூத்தும், பொம்மலாட்டம் கூட நடத்துவார் என்றுகேள்விப்பட்டபோது அதிர்ந்தேன்।எல்லோரும் இசைக்கருவிகளை கையாளுவது வியப்பாய் இருந்தது।கோமாளி தனது காட்சி இல்லாதபோது பார்வையாளர்களிடம் சென்றுபீடிவாங்கிகுடித்தபடி அவர்களது மனசை அளந்தது சூப்பர்।அதை விடவும்ஏற்பாட்டாளர் குறைந்த கட்டணத்தை தங்களைபுக் செய்திருக்கிறார் என்றுபாத்திரத்திலேயே கிண்டலடித்ததுதான் உச்சம்। கூத்து தொடங்கிய இரவு பத்துமணி முதல்கூத்து முடிந்த அதிகாலை ஆறு மணிவரை கூட்டத்தை தங்களது கூத்தால் கட்டிப்போட்டு வைத்திருந்தனர்। நிகழ்ச்சி முடிந்து பேருந்தில் ஏறும் வரை வினாடி ஓய்வில்லை எனறாலும்கூட
கடுகளவுகூட எனக்கு சலிப்பே வரவில்லை
மிகப்பெரிய ஒரு நாளை எனக்கு வழங்கிய அவர்களை தொழுதபடி மனமின்றி விடைபெற்றேன்
அவர்களுடைய வாழ்வு கூத்தில் இருக்கிறது
அதுதவிரவேறேதும் அறியாதவர்கள்
நம்மைப்போல் அல்லாமல் அவர்களுடைய வாரிசுகளையும் அதில் ஈடுபட வைக்கிறார்கள்
அதற்க்காகவே வாழ்வை அர்பணித்திருக்கிறார்கள்•
இவர்களைத்தத்தெடுக்கலாம்
இவர்களின் குழந்தைகளுக்கு கலைசம்பந்தமான படிப்புகளில் ஒதுக்கீடுதரலாம்•
இவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்சிகளில் வாய்ப்புததரலாம்
நீர்ச்சுழிகள்
புழுதிபடிந்த
கூரைகளில் நின்று
கரைந்துகொண்டிருக்கும் குருவிக்கு தெரிந்திருக்கிறது
மூச்சுக்காற்று
வயிற்றுக்கு
எதையும் செய்ததில்லை
எழுதிய அக்கி
நகர்ந்து
தேவதைகளாகி
காலத்தை
குடித்துத்தீர்க்கிறது
எரவாரங்களில் குடியிருந்துகொண்டு
எசகடவக்குதிரைகள்
இன்னும்
இரவுகளில்
இவ்வழியே ஓடிக்கொண்டிருக்கிறது
இன்னும்யாருக்கும் பிடிபடவில்லை
எருக்கம்பூவெடுத்து மாலையாக்கி
மரத்துக்குபோட்ட
ரகசியம்
நாக்கில் வந்து உட்கார்ந்து போகும்
எதிலும் ராமாப்பிள்ளைப்பாட்டிக்கு பங்கு உண்டு
இப்பவும்