May 13, 2007

சங்கராத்தீ







எப்படி சம்மத்தித்தாள்

வியாழக்கிழமையின் கீழ்
ஆச்சரியம் புகைந்து கொண்டிருந்தது

.நண்பர்கள்.....எனது சங்கவாசிகள்....
வந்து போகும்அந்தஅறை முழுதும்
நிறைந்திருந்த வர்தைகளைகூட்டி
எரிந்து கொண்டேயிருப்பாள்

கதவிடிக்கில் தேங்கி வழியும்
நடுத்தட்டின்...

கெளரவங்களை
துடைத்தவளுமில்லை.....

சக வீட்டு சங்கதிகளை
சந்தித்தவளுமில்லை


பின் எப்படி....
எ ட் டி ப் பார்த்தேன்

தீர்க்கம் அப்பியிருந்த..
அந்தக்
குப்பைக்கூடையுள்நெளிந்தபடி கிடந்தது

பல்லியின் வார்தைகளும்
சில கிரகங்களும்
மற்றும்
ஒரு பணிக்கரின் வாயும்

No comments:

Post a Comment

Footer