
எப்படி சம்மத்தித்தாள்
வியாழக்கிழமையின் கீழ்
ஆச்சரியம் புகைந்து கொண்டிருந்தது
.நண்பர்கள்.....எனது சங்கவாசிகள்....
வந்து போகும்அந்தஅறை முழுதும்
நிறைந்திருந்த வர்தைகளைகூட்டி
எரிந்து கொண்டேயிருப்பாள்
கதவிடிக்கில் தேங்கி வழியும்
நடுத்தட்டின்...
கெளரவங்களை
துடைத்தவளுமில்லை.....
சக வீட்டு சங்கதிகளை
சந்தித்தவளுமில்லை
பின் எப்படி....
எ ட் டி ப் பார்த்தேன்
தீர்க்கம் அப்பியிருந்த..
அந்தக்
குப்பைக்கூடையுள்நெளிந்தபடி கிடந்தது
பல்லியின் வார்தைகளும்
சில கிரகங்களும்
மற்றும்
ஒரு பணிக்கரின் வாயும்
No comments:
Post a Comment