July 10, 2007









புழுதிபடிந்த
வீட்டின் கூரைகளில் நின்று
கரைந்துகொண்டிருக்கும் குருவிக்கு தெரிந்திருக்கிறது
அவளது மூச்சுக்காற்று

வயிற்றுக்கு
ஒருபோதும்
எதையும் செய்ததில்லை

எழுதிய அக்கி
நகர்ந்து சென்று
சுவர்களுக்குள் புகுந்து
தேவதைகளாகி
காலத்தை
குடித்துத்தீர்க்கிறது
எரவாரங்களில் குடியிருந்துகொண்டு

எசகடவக்குதிரைகள்
இன்னும்
இரவுகளில்
இவ்வழியே ஓடிக்கொண்டிருக்கிறது

எருக்கம்பூவெடுத்து மாலையாக்கி
மரத்துக்குபோட்ட
ரகசியம்
இன்னும்யாருக்கும் பிடிபடவில்லை

அந்த இடங்களில் முளைத்திருக்கும்
குழந்தைகளைப்பார்த்து
சிரித்துக்கொண்டிருக்கிறாள்
ஆவரம்பூ இடித்து காப்பி கொடுத்தபடி

நாக்கில் வந்து உட்கார்ந்து போகும்
எதிலும் ராமாப்பிள்ளைப்பாட்டிக்கு பங்கு உண்டு

No comments:

Post a Comment

Footer