June 06, 2010

யுவர் ஆனரும்......... ஒரு பேனரும்



கடல்காற்று சிலிர்த்துக்கொண்டிருந்தது


கோட்டுகளை கக்கத்தி இருக்கியபடி வெள்வால்கள் தனது கூட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தன


கோர்ட்வளாகத்தில் ஒரு வாரமாய் பயங்கரமான பரபரப்பு


எல்லாரும் மத்தியானமான தண்ணியில மொதக்குறாங்க சிக்கன தின்னுட்டு பல்லு குத்தீட்டு வர்ராணுக..... என்ன விசேசம்


ஒன்றுமில்லை நம் மரக்கேசு மணிகண்டன் வங்கீல் சங்க செயலாளர் தேர்தலில் நிக்கறார்


மணிகண்டணா???????


ஆமா....


என்ன மணிகண்டா எலக்சனுல நிக்கறயாமா?


ஆமாம் மாப்புளே எல்லாருக்கும் என்ன கண்ட எளக்கநாட்டமா போயிருச்சு

கையில காச்சுக்கு பஞ்சமில்ல தோட்டம் தொரவு பேருண்ணு பெருசா இருந்தும் இவுனுக எளக்கநாட்டம் கொறையல


மரம் மரம் ன்னு மானம் போகுது மரியாத வரவெக்கத்தான் இந்த பிளான்


பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் என்று பாட்டுகேட்டாலே ஏதாவது கேஸென்று சிவபெருமானை கிளையண்ட் ஆக்கிவிடும் வல்லமை இந்த ஏழேழு உலகத்திலும் நம்ம மணிக்கு மட்டும்தான் இருப்பதாக வக்கீல்களிடம் ஒரு புரளி இன்னும் உயிரோடு உலவிக்கொண்டிருக்கிறது


நீங்க நிக்காம யாரு நிக்கறது??!! பழனிசாமி தன் பங்குக்கு கொஞ்சம்

உசுப்பேத்திவிட்டு ஒரு தம்மடித்தார்


காக்காய் மணிகடன் தலைமேல் மலம்ஜலம் கழித்துவிட்டு

கர்ன்னு கத்தீவிட்டு கேண்டீன் பக்கம் போனது


இந்த மரத்துகிட்ட நின்னாலே இப்படித்தான் தன் வாழ்வில் முதன்முறையாக மரத்தை சலித்துகொண்டார் மணிகண்டன்


கழிவறைக்குள் போய் திரும்பினார்


இன்னைக்கு பாத்துர ஒரு கை


போகிற வர்ரவங்க கிட்ட எல்லாம் கையெடுத்து கையெடுத்து கும்பிட்டார் மணி இதை கண்டு நமுட்டுச்சிரிப்பு சிரித்த அவரது கிளையண்டை கண்டும் காணாமல் முகத்தை திருப்பி உடம்பை ஆட்டி ஆட்டி ஓட்டுக்கேட்டார்


இப்படி கேட்டுக்கொண்டே அவர் இரண்டு கட்டிடங்களையும் இணைக்கும் பாலத்துக்கு வந்திருந்தார்


இப்போது மணி நான்கிருக்கும்


நிறைய டீசண்டான வெளவ்வால்கள் தன் பணிமுடித்து திரும்பிக்கொண்டிருந்தது


மழைக்குக்கூட மணிகண்டன் இந்த சிவில்கோர்ட் பக்கம் தலைவைத்ததில்லை


வேற வழியில்லை மயில் வேசம் போட்டா மரத்துக்கு போய்தான் ஆகனும்


எல்லோருக்கும் ஒரு கும்பிடும் கைகுலுக்கலும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது


ஒரு வெள்ளை வேளேர் உருவமொன்று கோட்டை தோளில் போட்டபடி சுலோமோசனில் பாலத்தை கடந்தது


அதை ஒரு டைவ் அடித்து நிறுத்திய நம் மணி


சார் நான் மணிகண்டன் எனக்கே ஓட்டுப்போடுங்க!! சிரிப்பு வழிய கேட்டார்


ம்கூம்........


சார் எம்பேர் மணிகண்டன் நான்......


முகத்தை பதினைந்து கோணத்தில் மாற்றி


ம்கூம் முடியாது


ஏன் சார் இப்படி சொல்லறீங்க


நான் ஓட்டு போட முடியாது பிரதர் .... கடுப்புடன் அவர்


ஏன் போடமுடியாது ?


எனக்கு ஓட்டு இல்லே!


உங்களுக்கு ஓட்டு இல்லையா?


ரயில்வே ஜங்சனுக்கும் கோர்ட்டுக்கும் குதித்தார்


என்ன நடக்குது பாருல? யாரோ சதி செஞ்சிருக்காங்க? இத நான் விடப்போவதில்லை உங்களுக்கு நான் ஏற்பாடு பண்ணறேன் சார்


வாங்க.....


கைய பிடித்து அடுத்த வக்கிலின் கிளையண்டைபோல் இழுத்தார்


வாங்க சார் .....வாங்க.....


கையை உதரிய அந்த வெள்ளை உருவம் திமுறி திருவாய் மலர்ந்தது


நான் முன்சீப்ங்க(சிவில்கோர்ட் ஜட்ஜ்)!!!!!!!!!!!!!!!


அட்டன்சன் ஆன மணிகண்டனிடம் வழிந்த அசடு கோர்ட்டை மூழ்கடித்தது....


அந்த ஈரம் இப்போதும் கோர்ட்டின் கட்டிடங்களில் இருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்

1 comment:

Footer