February 10, 2010

செதிலுதிர்க்கும் அரசு

கடலில் எரிந்த
கட்டு மரங்களின் சாம்பல் மேடுகளிலிருந்து
எழுகின்ற சூரியன் நீ

தொழுவதற்க்கில்லை


நெய்தல் திரிந்து

பாலையாகிறது

தொலையுணரும் கருவி

புயல்களை உனக்கு மட்டும் அறிவிக்கிறது



எந்த உரிமையும்

எனக்கில்லை

ஆனால்

அந்நியனுக்கு எல்லா சலுகையும்

என்னை நொறுக்கும் துப்பாக்கி உட்பட

12 கிலோ மீட்டர் உள்வாங்கிக்கொண்ட
கடல்
ஒரு நாள் 5000 மைல்கள் முன்னேறும்

உன்
சட்டத்தின் நகலில்
என் நண்டு சிறு நீர்கழிக்கும

No comments:

Post a Comment

Footer