September 07, 2007

RED TEA-ரெட் டீ-முருகவேள்


தோழர் முருகவேளோடு ஒரு இரவு முழுக்க கோபநாரியின் காட்டுப்பகுதிகளில் வெளிச்சம் ஒழுகும் இரவில் நிழல்களின் அசைவுகளில் கேளையாடுகளின் சத்தங்களோடு RED TEA யின் உள்ள கவிதைகளை மொழிபெயர்க்க அமர்ந்தபோது நாவலின் பக்கங்களை படிக்கக்கொடுத்தார் கொஞ்சம் பக்கங்களுக்குள் மனதைபிழிந்து போட்டுவிட்டது அதன் இயல்பான சம்பவங்கள்


இப்போது தேயிலை மலைகளை பார்க்கும் போதெல்லாம் லட்சக்கணக்கான மனிதர்களைதின்று வயிறு வீங்கி படுத்திருப்பது போலவே தெரிகிறது
ஆங்கில மொழியில் வெளிவந்து கேட்பாரற்று கிடந்த மிகச்சிறந்த இந்த நாவல்,வெகு விரைவில் முருகவேளின் மொழிபெயர்ப்பில், விடியல் பதிப்பக வெளியீடாக வரவிருக்கிறது. இந்நாவல் புதிய அலைகளை தருவதற்கான அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கிறது
இது வெளிவரும்போது நிச்சயம் தலித் நாவல்கள் புதிய பரிமாணத்தை எட்டும்

No comments:

Post a Comment

Footer