August 19, 2007

டணாய்க்கன் கோட்டை


ஒரே மூச்சாய்'டணாய்கண்கோட்டை' படித்து முடித்த கையோடு

இதை எழுதுகிறேன்

ஒரே மூச்சாய் படிக்குமளவு .............

வேகம்,

இயல்பான நடை,

ஒவ்வொரு கதாபாத்திரமும் கொண்டிருக்கிற முக்கியத்துவம்

வடிவம்,

ஆசிரியரின்வித்தியாசமான முயற்ச்சி

இவையெல்லாம் இருந்தாலும்
திப்பு பற்றியது என்பதுதான் மிகமிக முக்கியமான காரணம்.........................

ஆனால்

டணாய்க்கன் கோட்டை நாவலில்

திப்புவின் தந்திரங்களோ

திப்புவின் வீரமோ

திப்புவின் வேகமோ

திப்புவின் உலகலாவிய தொழில் மேன்மை முயற்சியோ

திப்புவின் அறிவுக்கூர்மையோ

நிச்சயமாக பதிவாகவில்லை

அவருடைய மத சார்பின்மை குறித்துகூட மிகஅழுத்தமான பதிவுகள் இல்லை

இது கூடப்பபரவாயில்லை

மனிதகுல வரலாற்றிலேயேமுதலும் இறுதியுமாக புலிப்படையை வைத்திருந்த,

கடல்தாண்டி லண்டணிலிருந்த ஆங்கிலகிராமங்களையும் நடுங்கவைத்த,

ஆங்கிலேயரை எதிர்த்துப்போராட ஒரு அய்க்கிய முண்ணனியைக்கட்டிய,

உலகமெல்லாம் இருந்த நுட்பங்களை கொண்டுவந்து இங்குள்ளவர்களுக்கு பயிற்றுவித்த,

ராக்கட் தொழில்நுட்பத்தை முதன் முதலில் உலகிற்க்கு அறிமுகப்படுத்திய,

மதச்சார்பின்மையை உயிராய் நினைத்து நடைமுறைப்படுத்திய,

கஜான காலியானாலும் பரவாயில்லையென்று மதுவிலக்கை அமுல்படுத்திய,

புதிய புதிய யூத்திகளை கையாண்டு வேளாண்மையை மாற்றியமைத்த

மற்றமன்னர்களைப்போல் கோழையாக மண்டியிட்டு

கப்பங்கட்டி கஞ்சிகுடிக்காமல்

களத்தில் வீரரோடு வீரனாக போரிட்டு மடிந்த

மாவீரன் சமூக அறிவாளன் திப்புவை ஒரு கேணக்காத்தான்,மண்டமாக்கான் போல்
சித்தரித்திருக்கிறது

அதற்க்கு மாறாக

ராணி லட்சுமியின் தந்திரங்களும்

ராணி லட்சுமியின் வீரமும்

ராணி லட்சுமியின் வேகமும்

இயல்புக்கு மாறாக

மிக மிக மிகஅதிக தூக்கலாக இருக்கிறது

அப்படியிருக்கும் பட்சத்தில்

அட்டையில் திப்புவையோ

உள்பக்கங்களில்

திப்புவின் ஆட்சி வரைபடங்களையோ,

திப்புவின் நாணயங்களையோ,

திப்பு பயன்படுத்திய பொருட்களையோ,

பயன்டுத்தியிருப்பதுஎதோ ஒவ்வாத ஒரு செயல் போல தெரிகிறது

திலகவதியின் அற்புதமான முன்னுரை மட்டுமில்லாமலிருந்தால்

வரலாறு தெரியாமல் புதிதாய் புத்தகத்தை கையிலெடுப்பவர்களுக்கு........

''திப்பு ஒரு கேணக்காத்தான்'' என்றுதான் நினைக்கத்தோன்றும் என்பதை
இங்கே வருத்தத்தோடு பதிவு செய்ய விரும்புகிறேன்

திப்புவை தூக்கி நிறுத்தி திலகவதியின் முன்னுரை முதல் பதிப்பில் ஏற்பட்டஇருட்டடிப்பிற்க்கு
இரண்டாம் பதிப்பில் நாயுடுவுக்கு பிராயசித்தம் தேடிக்கொடுத்திருக்கிறது


விவேகானந்தரை வீழ்த்திவிட்ட வள்ளுவர் சிலை போல

No comments:

Post a Comment

Footer