இலைகளில் ஒழுகிக்கொண்டிருந்த
இருட்டு
மேசைகளை மூழ்கடித்தது
கொட்டுகிற சாக்கணாக்களை
கொரித்தபடி மேசைக்கு கீழ்
எதையோ தேடிக்கொண்டிருக்கிறது
பூனை
தோல்களை உரித்துப்போட்டுவிட்டு
எழும்புக்கூடாய்
அமர்ந்திருக்கிறது
சுயம்
முகமூடிகள் தொலைத்து
நிஜம் அணிந்து கொண்டு
நடமாடுகிறது
காற்று
பிழிகிற சோகத்தை
அனுமதிக்காமல்
மகிழ்சியை தினித்த
அதிகாரப்பொழுதுகளில்
ஆடியபடியிருந்த வேப்ப மர நிழலில்
உறங்காத
பறவையை தேடிக்கொண்டுருந்தது
மனப்பொந்து
உதிர்த இலைகளில்
முகம் தேடியது
பூனைக்குட்டி
நானும் இல்லாத
நீயுமில்லாத
வெற்றிடத்தில்
எப்போதும் நிறைந்துகிடக்கிறது
எதோ ஒரு கோப்பை
யாருக்குமிருப்பதில்லை
விருப்பம்
முழுநேர வேசமிடுதலில்
சேகரித்து வைத்திருக்கிற ஒப்பனைகளை
வார்த்தைகளை
வர்ணங்களை
உள் மண்டிய கற்க்களை
மேலே கொண்டுவந்து துப்ப
தேவையாயிருக்கிறது
இது
எல்லாவற்றிலும்
ஏற்றதாழ்வுகளை
விதியாக்குகிற பூதங்களின்
விரல்களின் அழுத்தத்தில்
கொப்புளங்கள்
Friday, June 15, 2007
ஓர் பார்நாள் இரவு
Posted by
naathaari
at
11:47 AM
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment