June 14, 2007

இருண்மையிலிருந்து




சிங்கத்தை விட்டு இழுத்துப்போடு
சவுரியால் மனசை சேந்தி விட்டிடுவாளிவள்
மொண்ணைச்சோறு திங்க
காளியாத்தாளில்லை

வடக்குன்னா கால்
வடக்கயே நிக்கும்
ஆறு சொல்லியும் கேட்காது
என்னயே திங்கும்

இப்போ
வாய்தனியா மூக்குதனியா....... காதுதனியா
முலைரெண்டும்தனித்தனியா.......
கைதனியா ........கால்தனியா
இட்டேரியிலே படுத்துக்குது
அததுபாட்டுக்கு போய்

அத்திமரதுக்கு போயிருது
மனசு

நரம்பு பாம்பாகி
நாகலிங்கஞ்செடிதேடிப்போயிருது
நானே கேக்க முடியாது

நாஞ்சிறுக்கீதாங்
குப்பையை கிளரி நட்சத்திரத்த பொறுக்கீ
மூட்டய
மத்தியானத்துக்கிட்டயும்
அழுக்க
சூரியங்கிட்டயும்
வித்துட்டு
நான் பாட்டுக்கு நடந்து போய்விடுவேன்

இப்ப
நீயும் கேக்க முடியாது

No comments:

Post a Comment

Footer