August 23, 2009

கெளடில்யரும், ஒரு டாஸ்மாஸ் பாரும்


மணி மாலை 8.30 லிருந்து 9.00 க்குள் இருந்திருக்கும்

வேலாண்டி பாளையம் சங்கமம் அலுவலகம்..

நுழைந்ததும் ஒரே களேபரம்..

கொஞ்சமாய் பீரடியுங்கள் ...

இல்லை.., எனக்கு மூடில்லை

என்ன பெரிய்ய்ய்ய மூடு?

மூடீட்டு டம்ளர எடு...ஊத்து...அடி...அம்புட்டுதான்

என்னோட பிறந்த நாளை கேவலப்படுத்துறயா நீ ?

சம்பத்தின் வார்த்தையை தட்டமுடியவில்லை

நான் குடிக்காத ஆள் கிடையாது அதை ஒரு ஒழுக்கம் சார்ந்த விசயமாக பார்ப்பதுமில்லை ஆனால் வெட்டியாய் அடித்துவிட்டு அன்பழகனை(அன்பழகனுக்கு நிச்சயம் ஒரு பதிவு வரும்) போல மொக்கை போடுவது அறவேபிடிப்பதில்லை

அதற்கு நான் என்ன செய்ய முடியும்

அளவாய்தான் அடிப்பேன்

இதை பெருமையாக சொல்லிக்கொள்ளவில்லை, என்னால் முடிவதில்லை

எங்கள் அறையின் குடிகாரர்கள் பட்டியலில் எனக்கு இடம் கிடையாது

நானும் குடிகாரன் என்றால் ‘வடிவேல் நானும் ரவுடிதான்னு சொல்லுவாரே அது மாதிரியா’ என்று சிரிக்கிறார்கள்


அப்புறம் ஒரு டம்ளர் மட்டும் அடித்து காலாய்க்க ஆரம்பித்தோம்

சாராயத்தின் வரலாறு குறித்து வில்வம் கேள்வி எழுப்பினார்

தமிழன் குடிக்க ஆரம்பித்த பிறகுதான் ..........
எப்ப குடிக்க ஆரம்பித்தார்கள்?
பழந்தமிழகத்தில் மதுவே கிடையாது...........

யார் சொன்னது?

விறலி விடு தூது சாரயம் பற்றி பேசுகிறது

ஒளவையாருக்கும் இப்பழக்கம் இருந்திருக்கிறது

அப்படி இல்லையென்றால் ஆத்திச்சூடியும் கிடையாது கொன்றைவேந்தனும் கிடையாது

அந்தக்கட்டத்தில் அப்படி இல்லையென்றால்தான் அதிசியம் அது சமூக நடவடிக்கை

பதிற்றுப்பத்தில் கள் பற்றிய ஒரு பாட்டிருக்கிறது தோழர்

அப்படியா?அப்படின்னா அது ‘பாட்டில் பத்து’ முதல் மொக்கையை சின்னையன் இறக்கினார்

அவ்வையாரும் அதியனனும் சியர்ஸ் சொல்லி கள்ளடித்ததை புறநானூறு சொல்லுது

கொக்கமக்கா - இது முருகன்

கொஞ்சம் கலாசிவிட்டு வண்டியைகிளப்பினேன்
அப்போது மணி இரவு 10.30
லாலிசாலையின் முக்கு திரும்பியதும் பகீரென்றது..
கொஞ்சமாய் இருந்த பீரின் போதை கால்கள் வழியாக தரையிறங்கியது
விவசாயக்கலூரியின் பாதையை எச்சரிக்கையோடுபார்த்தேன்

“Drunk and drive” போலீசார் இல்லை

அப்பாடா!

இறங்கிய போதைமுள் இப்போது மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிட்டது

சிலுசிலுக்கும் காற்று

யார்முகமும் தெரியாத இரவு

கொஞ்சம் கிறக்கம்
இருட்டின் புழுக்கைகளாக மனிதர்கள்

இதைவிட வேறென்ன வேண்டும்

லேசாக மிதந்தேன்

புதூர் போனதும் இறங்கி ஒரு தம்மடித்தேன்

’கருப்புராயன் கோவில் பாலத்துக்கு பக்கத்தில் வடவள்ளி போலீஸ் இருந்ததலும் இருக்கும், பைமெட்டல் குறுக்கு வழியில் வீடுபோய் சேர்ந்திடவேண்டும்’ உறுதியெடுத்துக்கொண்டேன்

வண்டியை எடுக்கும்போது ஒரு பையன்....

சார் பஸ் டைம் முடிந்து போச்சு நான் வடவள்ளிவரைக்கும் போகவேண்டும்

வரட்டுங்களா?

நானா சுமக்கிறேன், வா!

வண்டியில் இடம்கொடுத்தேன்

வழியில்......

ஆமா என்ன வய்சாச்சு உனக்கு?

18 .....

எங்க போய்ட்டு வரே ?

வேலைக்கு..

ஆமா இப்ப எங்க போறே?

அதன் சொன்னனே சார் வடவள்ளிக்கு
ஓ?
ஏம் படிக்கலயா?

இல்லசார்

ஏன்?

கஸ்டம்

என்ன கஸ்டம்

இப்போது வண்டி கருப்புராயன் கோவில் பாலத்துக்கு பக்கத்தில் வந்துவிட்டது

போலீஸ் வண்டியை நிறுத்தியது

நிறைய பேரை சோதனை செய்து சிலரை தனியாக நிறுத்தி
வைத்திருந்தார்கள்

லைசென்ஸ்,இன்ஸுரன்ஸ், இத்தியாதி கருமங்களை டூல் பாக்ஸை திறந்து
எடுத்து கான்ஸ்டபிளிடம் நீட்டினேன்


இத யாரு கேட்டா?

பின்னே!

குடிச்சிருக்கியா?... எங்கே வாய ஊது

‘அய்யோ... மோசம்போயிட்டியேடா’ உள் மனசு புலம்பியது

அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை நானென்ன ஒரு மொடாவா குடிச்சேன்

வேறொரு கன்ஸ்டபிள் ஊதச்சொன்னார்

அவர் ஜெகஜால கில்லாடி,... கண்டுபிடித்துவிட்டார்

ஓரமா நில்லுப்பா! சாவியை எடுத்துக்கொண்டார்

சரி தம்பி நீங்க கிளம்புங்க.... அந்த பொடியனிடம் சொன்னபோது

சார் என்னாலதான் உங்களுக்கு இந்த நிலமையாச்சு மன்னிச்சுருங்க சார்

அவன் போகவே இல்லை கொஞ்சநேரம் அங்கேயே நின்றிருந்தான்

கிளம்புப்பா நான் பார்த்துக்கறேன், மெல்ல நடக்க ஆரம்பித்தான்

அப்புறம் ஒரு போலீஸ் தேவதை வந்தது....அது ஒரே கலாய்ப்பு மூடில் இருந்தது

மேடம் இவன் குடிச்சிருக்கான்

என்ன குடிச்சிருக்கியா?

ஆமாம் கொஞ்சமாய் !

என்ன குடிச்சே?

பீர்......

எவ்வளவு ?

ஒரு டம்ளர்......

அது புண்முறுவல் பூத்தது

ஏட்டு இவனக்கொண்டுபோய் புக் பண்ணுங்க...

இல்லை, ஸ்பாட் பைன்தானே சொல்லுங்க இங்கயே கட்டிடறேன்

இது சிட்டிலிமிட் இல்லை

ஓ!

ஏட்டு வண்டியஓட்ட நான் உட்கார்ந்துகொண்டேன்

இத்தன செக் பன்னறாங்கன்னு தெரியுமில்ல எதுக்கு குடிக்கறே?

சங்கம சமாச்சாரங்களையெல்லாம் அவனிடம் சொல்லவா முடியும்

சார் ஸ்டேசன் போகம இருக்க வழியிருக்கா?

ஏன்?

‘அங்க போனா பிரச்சனியாயிடும்’

நான் பாத்துக்கறேன்

இல்லை எங்க சொந்தக்காரங்க அங்க வருவாங்க!

யாரு?
........................
அப்படிய்யா அவுங்களாஅவுங்க உனக்கு என்னாகனும் ?
............................................
வண்டியின் வேகம் தன்னிச்சையாக குறைந்தது

ஆமா என்ன வேல செய்யுற தம்பி?

குரலில் கொஞ்சம் கடுமை குறைந்திருந்தது

சமூகப்பணி

அப்படீன்னா?

அது ஒரு வேலங்க

ஓ!

அவருக்கு விளங்கவில்லை என்பது எனக்கு தெரிந்தது அதை உறுதிப்படுத்தும் விதமாக

என்ன படிச்சிருக்கே?

வக்கிலுக்கு!

வண்டியை நிறுத்திவிட்டார் திரும்பி

ஏன் சார் இத அப்பவே சொல்லுலாமில்ல?

மரியாதை லிட்டர் கணக்கில் எகிறியது

ஆனா கோர்ட்டுக்கு போவதில்லை

அப்புறம் சார்....

ஒரு அரசின் திட்டத்தில் பணியாற்றுகிறேன்

என்ன சார்? நீங்க இதெல்லாம் சொல்லாம இப்படி இருகீங்களே

கடய 10 மணிக்கு மூடுன்னா எங்களுக்கும் தொல்லை கம்மியாகும் அத செய்யுதாஇந்த கவுறுமெண்டு- இது ஏட்டு

அதற்குள் தேவதை வந்துவிட்டது

என்ன ஏட்டையா நின்னுட்டீங்க?
.........................................................................................................!
எல்லா சமாச்சாரத்தையும் தேவதையிடம் சொல்லியிருப்பார் போல!

, எங்க டூட்டிய நாங்க பாக்கனுமில்ல சார்
இல்லை பைன் வேணா கட்டிடறேன்
இனிமேல் இப்படி நடக்காம பாத்துக்குங்க.....
வண்டிய ஏட்டு பவ்யமாய் ஸ்டார்ட் செய்து ஒப்படைத்தார்

ஏட்டு எவ்வளவு கேஸாச்சு

இவுரில்லாம 2 ங்க

இன்னொன்னு புடிங்க!!!!

அவர்களுடைய டார்கெட் அன்றைக்கு மூன்றென்று புரிந்துகொண்டேன்

வடவள்ளியில் வந்து ஒரு தம் பத்தவைத்துவிட்டு யோசிச்சேன்

இப்படியாயிருச்சே!

எங்கே கோளாறு?


ச்சே!!!!!
இந்த இவுனுககிட்டல்லா நிக்கவேண்டியதா போச்சே

கருப்புராயன் கோவில் பாலத்துக்கு பக்கத்தில் வடவள்ளி போலீஸ் இருந்தாலும் இருக்கும்,...பைமெட்டல் குறுக்கு வழியில் வீடுபோய் சேர்ந்திடவேண்டும் என்று உறுதியெடுத்துக்கொண்டிருந்தேனே... என்னாயிற்று அது?

அப்போதுதான் உறைத்தது

அந்த பையனோடு பேசிக்கொண்டே வந்ததில் பைமெட்டல் கட்டும்,
சங்கமத்தில் பீரடித்ததும் மறந்து போயிருக்கிறேன்

ஆம் இந்த அரசாங்கம் எதற்க்கு டாஸ்மாக்கை திறந்து வைத்திருக்கிறது?

கல்லா கட்ட!

அப்புறம் எதுக்கு பிடிக்கிறார்கள் ?

குடித்துவிட்டு வண்டியோட்டி ஆகும் விபத்துகளை தவிர்க்க........

இந்த ரோட்டில் குடித்துவிட்டு வண்டியோட்டி நடந்த விபத்தின் சதவீதம் ஜீரோ பர்செண்ட்!

அரசு தன் ஒழுக்கத்தை நிரூபிக்கவேண்டாமா?...

அப்புறம் கடையை திறப்பது எந்த ஒழுக்கத்தில்?

கல்லா கட்ட!

அப்புறம் ஏன் பிடிக்கிறார்கள்?

ஒழுக்க மயிர நிரூபிக்க ....

தொடர்ந்து தினமும் புடிக்கவேண்டியதுதானே!.. என்ன மயிறுக்கு சனிக்கிழமை மட்டும் பிடிக்கிறாங்க?

அன்னிக்குதான் நிறைய கேஸ்கிடைக்கும்

தினமும் பிடிச்சா யாரும் குடிக்கமாட்டாங்கதானே

குடிக்காட்டீ டாஸ்மாஸ்க் எப்படி ஓடும்?

விக்கறது கொறஞ்ச தகவல் வந்திருக்கு...!

லபக்க்றத நிறுத்து!

அப்புறம்கேப்பு
அரசாங்கத்துமேல குடிக்காத மக்களுக்கு கொஞ்சம் அதிருப்தி -உளவு
மீண்டும் லபக்கு...
இப்படி குடிகாரர்களின் ஆதரவையும் குடிக்காதவர்களின் ஆதரவையும்
பேலன்சாய் வைத்திருப்பது எம்புட்டு கஸ்டம் தெரியுமா?

கருப்பு கார்பரேட்டுகளுக்கு இது கைவந்த கலை

கல்லா கட்டுறது மட்டும் தான் நோக்கம், வேறு ஏதாவது நலநோக்கம் இந்த அரசுகளுக்கு இருக்கும் என்று நீங்க நினைத்தால், உங்கள் விட கூமுட்டை யாரும் இருக்கமுடியாது!

ஒரு ஸ்டேசனுக்கு ,ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம் 5 கேஸ், மாதத்தில் 15 நாள்

ரூரலில் அபராதம் 2000

அர்பன்னா அபராதம் 1000

2000x5= 10000x15= 1,50,000

ஒரு மாவட்டத்துக்கு 30 ஸ்டேசன்

30x1,50,000= 45 லட்சம்

45 லட்சம் x 30 மாவட்டம் 13,50,00000 கோடி

வருசத்துக்கு 13,50,00000x12=1620000000

அப்பாடியோ அபராதமே 100 கோடிய தாண்டுது

அப்புறம் டாஸ்மாஸ்க் விற்பனை

தமிழ் நாட்டில் 177 லட்சம் பெட்டிகள் பீரும், 144 லட்சம் பெட்டிகள் பிராந்தியும் 87 லட்சம் பெட்டிகள் ரம்மும் , 33 லட்சம் பெட்டிகள் விஸ்கியும் , 8 லட்சம் பெட்டிகள் ஜின் 7 லட்சம் பெட்டிகள் ஓட்கா 8 லட்சம் பெட்டிகள் ஒயினும் விக்குதாம்

கணக்கு போட்டு பாருங்க
இப்பவே கண்ணகட்டுதா?
இப்படி டபுள் வருமானம் உள்ளத விட உங்களப்போல அரசு இளிச்சவாயனா என்ன ?

குடிக்காதவங்கள வெச்சு குடிக்கறவங்ககிட்ட அட்ட டைமில் ரெண்டு தபா பிக்பாக்கெட் அடிச்சு சம்பாரிக்கும் அரசை, குடிக்கறவங்கள வெச்சு, குடிக்காதவங்க கிட்ட நல்ல பேரையும் சம்பாரிக்கும் அரசை அர்தத சாஸ்திரத்துக்கு பிறகு இங்குதான் காணமுடிகிறது

May 30, 2009

குப்பைத்தொட்டியில் கிடக்கிறது ஒரு கருப்பை





தீண்டப்படாத இடம் யாதுமில்லையென்றபோதும்

பிளவுபட்ட நாக்குகளை தின்றுவிடும் அகோர வெரியோடு

ஊர்கிறது


சமாதிகளில் வழியும் உயிரை நக்கும்

அதன் நகர்வுகளில் நெரிகிறது குழந்தைகளும்

அதன் பொம்மைகளும்


சாட்சியமே அழித்ததற்க்காய்

பிராந்திய வேசம்கட்டி

சதையையும் பிட்டுத்தருகிற

கொடூரங்களைக் கேட்டு உதிர்ந்த காதுகள்

உடலமெங்கும் முளைக்கிறது



ஏலாமையில்வடிந்தகுற்றவுணர்வில்

குதித்து

வலியின் வேர்கள் பிளக்க

தவணையில் சாகிறது மனசு


‘கசப்பில் வழிந்த துளிகள்

இறுகி படிக்கட்டுகளாகும்’


நம்பிக்கையின் கீற்று அற்றுப்போன

சிதிலங்களில் பெய்கிற பேரிடியில்

பிணவாசனையெழும்பி உலகத்தில் ஒவ்வொருவனின் நுரையீரலையும் நிரப்பும்

அண்டெனும்

எட்டிப்பாருங்கள்

சர்வதேசத்தின் குப்பைத்தொட்டியை

May 21, 2009

பிரபாகரனோடு மூன்று நாட்கள்

மே13அல்லது 14 ஆம் தேதி இரவு நெருங்கிய,(EPRLF) பி எல் எப் ன் ஆதரவாளர் ஒருவர் திடுக்கிடும் செய்தியை சொன்னார்

ஈழத்தின் முக்கியமான தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார் தேர்தலில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்க்காக அரசு அதை மறைத்துவைத்திருக்கிறது தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பார்கள்என்பதுதான் அந்த திடுகிடும் செய்தி

அந்த முக்கியமான தலைவர் பிரபாகரன்.

எனக்கு பெரிய அதிர்சி ஏற்படவில்லை.

அப்படியா?

ஆம், நானும் எங்கேயோ படித்தேன் இந்திய இலங்கைக்கு இருக்கும் ரகசியஒப்பந்தமே அதுதானே!

ஆனால் பிரபாகரன் அங்கில்லை என்று சொல்கிறார்களே?

அவருக்கு தெரிந்த செய்தியின் மேல் லேசான சந்தேகத்துடன்பார்ப்போம்என்றார்

பின்பு 17 ஆம் தேதி அவரே அழைத்தார்

நல்ல தூக்கத்தில் இருந்தேன்

பிரபாகரன் இறந்துவிட்டார் CNN IBN ல் பாருங்கள்என்றார்

அப்படியா பார்க்கிறேன்

ஆனால் பார்க்கமுடியவில்லை

மாலையில் நிதானமாக எனதுவேலைகளை முடித்துவிட்டு

அவரோடு இருந்த மற்ற தோழர்களையும் சந்தித்தேன்

மலை மலரைக்காட்டினார்கள்

மாலைமலரை விரித்துக்காட்டிஇதோ பேப்பரில் போட்டுவிட்டார்கள்என்று காட்டினார்கள்

வேனில் தப்பிக்கும்போது ஏவுகணை வீச்சில் அனைத்துமுன்ணனி தலைவர்களோடு பிரபாகரனும் கொல்லப்பட்டார்

தோழர் எனக்கு நம்பிக்கையில்லை

மாலைமலரில் இவ்வளவு பெரிசாய் போட்டிருக்கிறான் நம்பமாட்டீங்களா?

மாட்டேன்,! இதே போல் நான்குமுறை போட்டிருக்கிறான், நானும் படித்திருக்கிறேன்!

அப்புறம் மாலைமலரில் போடுவதையெல்லாம் நம்பவேண்டிய அவசியம் இல்லையென்றேன் அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்

பிரின்டேடு மேட்டர் எல்லாம் உண்மை என்று நம்பும் அறிவின் வயதை கடந்து வெகுகாலமாகிவிட்ட எனக்கு அவர்களின் போக்கு ஆச்சரியமளிக்கவில்லை.

அவசரமாக வந்த ஒரு தொலைபேசி அழைப்பு என்னை அங்கிருந்து நகர்த்தியது

அப்புறம் எனது வேலைகளில் மூழ்கிவிட்டேன்

இரவு மக்கள் தொலைக்காட்சியில் நெடுமாறன் மறுத்தார்

பிறகு அடுத்த நாள் காலை11மணிக்கு முக்கியமான விடுதலைப்புலிகளின் அன்புக்கு பாத்திரமான ஒரு நேர்மையான தலைவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவர் சொன்ன தகவல்

ஆண்டணிகூட இறந்திருக்க வாய்ப்பிருக்கிறது

பிரபாகரன்?...

கிட்டதட்ட 30 நாட்களுக்குமுன்பே சகபோராளிகளால் வலுக்கட்டாயமாக பாதுகாப்பான இடத்திற்க்கு அழைத்துகொண்டு செல்லப்பட்டுவிட்டார் தம்பி நலமாய் இருக்கிறார்

அன்று நண்பகல் இரண்டு மணிக்கு தொடக்கத்தில் சொன்ன வட்டத்திலிருந்து ஒரு தோழர் எனக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தார்

அது

We are sorry to inform that LTTE leader prabhakaran died

Breakingnews:Prabhakaranbodyfound
கிட்டதட்ட எல்ல தொலைகாட்சிகளும் அறிவித்துவிட்டது

நிறைய அழைப்புகள் எனக்கு வந்தது ஆச்சரியமாய் இருந்தது

எல்லா அழைப்பும் மிக பதட்டத்தோடும் அதில் பிரபாவின் மரணம் நிகழ்திருக்கக்கூடாது என்ற அக்கரையோடும் இருந்தது இதில் காங்கிரஸ்காரர்களும் உண்டு என்பதுதான் ஆச்சரியம்.

நான் எல் டி டி யின் ஆதரவாளனுமல்ல. சொல்லப்போனால் நான் ஈபியின் ஆதரவாளானாய் ஒரு கட்டத்தில் இருந்திருக்கிறேன். கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தவேலிகள் தகர்த்துஎன்ற எனது நீள் கவிதை வெளியீடு புலிகளுக்கு எதிரானது

இந்த அரக்கத்தனமான போர் தொடங்கும் வரை எனக்கும் புலிகளின் மேல் கடுமையான விமர்சனங்கள் உண்டு அதை அழைத்தவர்களோடு பகிர்ந்துமிருக்கிறேன்

பிறகு எப்படி இத்தனை அழைப்புகள்...

எதற்கு இத்தனை அழைப்புகள்

பிறகு மதியம் காந்திபுரம் சென்றுவிட்டு வருகிற வழியில் மீண்டும் அவர்களை சந்திக்கநேர்ந்தது

இப்போது

மாலைமலரோடு TIMESNOW ம்

இப்பவாவது நம்பறீங்களா?

அது சட்சாத் பிரபாகரன் மாதிரியே இருந்தது

பார்த்தவுடன் தெரிந்தது

மிகவும் இளமையான முகம்,

மெழுகுபோல் பளபளவென்று அவ்வளவு அழகு,!

புலிகளுக்கு வயதாவதில்லை என்று சிங்கள அரசு அறிவித்தாலும் அறிவிக்கும்!

அனேகமாய் அது 93 ல் எடுக்கப்பட்டிருக்கலாம்,!

அப்புறம் அவர் சமீப காலமாக மீசை வைப்பதில்லை

இங்கே ட்ரீம் செய்யப்பட்ட மீசை

அப்படியே மீசையை விட்டிருந்தால் தாடியையும் விட்டிருப்பார்தானே

எனக்குள் சின்னசந்தேகம் துளிர்விடத்தொடங்கியது

இப்பவாவது நம்பறீங்களா?

இல்லை !!!

அரசாங்கமே சொல்லுகிறது...

அரசு, குடும்பம் தனிச்சொத்து பற்றி ஏங்கல்ஸே வந்து சொல்லுவார்

நீங்க எப்பதான் நம்புவீர்கள்?

புலிகள் அறிவித்தால்.....

அவர்கள் அறிவிக்க மாட்டார்கள்.....

நானும் நம்பமாட்டேன்

நல்லதுதான் அஞ்சலிகூட்டம் நடத்தமாட்டீர்கள்...

அவர்பேச்சில் விசம் இருந்தது

தோழர் நீங்கள் அவரது சாவை எதிர்பார்த்துக்காத்திருக்கிறீர்கள்... அதனால் நீங்கள் நம்பவேண்டியிருக்கிறது

நீங்கள் எதிர்பார்க்கவில்லை ஆகவே நம்பமாட்டீர்கள்

நான் சாதாரண மனநிலையில் இருந்து பார்க்கிறேன் என்னை நம்பவைக்கும் நம்பகத்தன்மை அந்த படத்தில் அந்த வீடியோ காட்சிகளில் இல்லை

அது என்ன சாதரண மனநிலை ?

சோவை ஆதரிக்கிறவர்கள் இப்படி ஒரு மனநிலையில் இருந்து பேசுவதை மறுக்கிறார்கள் என்பது முரண்நகை

இல்லை நீங்கள் புலிகளின் தீவிர ஆதரவாளர் அன்னைக்கு அப்படித்தான் கருணாவின் பேட்டியை ஜெரக்ஸ் எடுக்க வண்டிகூட கொடுக்கமாட்டேன் என்று மறுத்தீர்கள்?

(தினமலரில் வந்திருந்த கருணாவின் பேட்டியை ஜெராக்ஸ் எடுத்து சமரச சன்மார்க்க சங்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் விநியோகிக்க ஏற்பாடு செய்திருந்தனர்)

ஆம், மக்கள் மோசமாக செத்துக்கொண்டிருக்கும் போது அதை முன்னிறுத்தாமல் அது பற்றிய செய்திகளை வெளியிடாமல் புலிகளை விமர்சிக்கும் அப்பேட்டியை வெளியிடவேண்டிய அவசியம் என்ன? இது எந்தவகை அரசியல் ?

‘நீங்கள் என்னமோ சொல்லிக்கொண்டுபோங்கள் செத்தாச்சு பிரபாகரன் இனி அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது’

தனிமனித கொலையும் இந்த சமுதாயத்தை மாற்றுவதில் சிறிய பங்குவகிக்கும் என்று நக்ஸலைட்டுகள் நம்புவது தவறு என்ற கருத்தை வைத்திருக்கிற இவர்கள் இப்படி பேசுவது எந்த மேல் கட்டுமானம் என்று தெரியவில்லை

டைவட் ஆகுது.. சரி ரூட்டுக்கு வருவோம்

சரி தோழர் நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் அது இந்திய அரசுக்கு பேரிழப்பு..இந்திய அரசு அவர்களுக்கான ஒரு channel இப்பவரை ஓப்பன் செய்து

வைத்திருப்பார்கள் முற்றும் முழுதாக இந்தியா ராஜபக்ஸேவை நம்பியிருக்காது இலங்கைக்குள் தனது பொருளாதார விளையாட்டை தொடங்கியிருக்கும் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு counterஆக அங்கு இவர்களின் பலவீனப்பட்ட அல்லது இந்தியாவை சார்ந்திருக்கிற ஆதரவு சக்தி இருப்பதை விரும்புவார்கள்

புலிகள் அப்படி யாருக்கும் கைப்பாவையாய் இருக்காதவர்கள்,.அடங்கமறுத்து அத்துமீறுபவர்கள் ,மிக அர்பணிப்பு உள்ளவர்கள், தனதுமண் அடுத்த நாடுகளின் மார்கெட்டாக மாறுவதை அனுமதிக்காதவர்கள்.. 'இம்' என்று ஒருவார்த்தை சொன்னால் இப்போதே எல்லாமே தலைகீழ் ஆகிவிடும் ...

அடுத்த கூட்டத்தில் வாய்ப்பிருந்தால் அதுகுறித்து விரிவாக பேசுகிறேன்

இலங்கை அதிகாரிகளின் முரண்பட்ட பேட்டிகள்,

ஒவ்வொரு நாளும் புது புதுசாய் பிரபகரனைக்கொல்வது,

இன்ஸ்டண்ட் டி என் டெஸ்டுகள்,

எனக்கு நம்பிக்கையில்லை இதில் சந்தேகங்கள் இருக்கிறது...

புறப்பட்டுவிட்டேன்

இன்று 21.5.2009

நக்கீரன், இயக்கத்தின் தலைவர் உயிரோடு இருப்பதை 1000 மடங்கு நம்பகத்தன்மையோடு சொல்லியிருக்கிறது

எனக்கு இருக்கும் சந்தேகங்கள்

1 30 நாட்களுக்கு முன்பே பாதுக்காப்பான பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்ட பிரபா நக்கீரனின் கட்டுரைப்படி அங்கேயே எப்படி இருந்திருப்பார்

2 தேர்தலுக்கு முன்பு அறிவித்தால் முடிவுகள் பாதிக்கும் என்று ஆளும் கட்சிகள் நினைத்து வெளியிடாமல் வைத்திருந்தது என்று சொல்கிறார்கள் இதை வெளியிட்டால் தமக்கு சாதகமான முடிவு உறுதியாக கிடைக்கும் நிலையில் உள்ள ஆதரவு கட்சிகள் வெளியிட்டிருக்கலாம்தானே! அப்படி நடந்திருந்தால் நடேசன் இதைக்கூடவா சொல்லியிருக்கமாட்டார்?

3 கருணா ராஜீவ்கொலை நடந்த சூழல் பற்றி ராகுலுக்கும் பிரியங்காவிற்கும் விளக்குவேன் என்று இப்பொழுது சொல்லுவானேன்?

4 அம்பாரையில் சீனாவால் உருவாக்கப்பட்டிருந்த அல்லது சீனாவின் உதவியால் அமைக்கப்பட்டிருந்த கடற்படைதளம் ஒருமாதத்துக்கு முன்னால்புலிகளால் சுக்குநூறாக தகர்க்கப்பட்டது புலிகளோடு மேலும் வேறு யாருக்கு சாதகத்தை கொடுத்திருக்கும்?

5 ஒரு வல்லாதிக்க அரசால் முன்னெடுக்கப்பட்டு, ஒரு பேரினவாத அரசால் சனம் வேட்டையாடப்படுகிற போரில் ஒரு நேர்மையாளன் எந்தப்பக்கம் நிற்கவேண்டும், யார் சொல்வதை நம்பவேண்டும்?

அதே தோழர்கள் இக்கட்டுரையை முடிக்கும் முன்பு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருக்கிறார்கள்

PRABHAKARAN ALIVE I READ A NEWS IN NAKEERAN. IS IT POSSIBLE’ ?

நானும் பதில் அனுப்பியிருக்கிறேன்

அந்த பதில்...

இதற்க்கெல்லாம் பதிலை பிரபாகரன் வந்து சொல்லுவார்

Footer