May 08, 2009

நினைவில் சுழலும் முள்ளின் மீதேறி நின்று


இந்த சம்பவத்தை சொல்லாமல் விசயத்துக்கு வரமுடியாது ஆகவே இதிலிருந்து தொடங்குவதுதான் சரியாக இருக்கும்
"இங்கே சேரன் பஸ் டெப்போ சீக்கிரமாய் வரப்போகிறது!" "பக்கத்தில் ஒரு அபார்ட்மெண்ட் வரப்போகிறது" "ஒரு ரிங்ரோடு உங்கள் வாசல் வழியாக மருதமலை செல்கிறது"
"இது உங்களுக்கு அதிஷ்டமான நாள்" "சீக்கிரமாய் இந்த சைட்டை வாங்கிப்போடுங்கள்" வாங்கி அடுத்த மாசம் வித்தாலும் செண்டுக்கு 10 ஆயிரம் லாபம் கிடைக்கும்’ யாரோ சொன்னதை அப்படியே நம்பி 5 செண்டை வாங்கிப்போடுகிறார் கோவை அரசு பொரியியல் கல்லூரியின் விரிவுரையாளராய் இருந்த பெருமாள் சார்
பெருமாள் சாரைப்பொறுத்தவரை எளிமையானவர்,
கஸ்டப்பட்டு படித்து நல்லநிலமைக்கு வந்தவர் அநியாயத்துக்கு நேர்மையானவர், தப்பு நடந்தால் மனதுபுழுங்கி வெம்பி எதிராக ஏதாவது செய்துவிடுவார் , கிட்டத்தட்ட ஸ்ரக்சுரல் எஞ்சினியரிங்கில் அவர்தான் கில்லி! அது குறித்து நிறைய புத்தகமும் எழுதியிருக்கிறார்.. இடம் வாங்கியதோடல்லாமல் பிடிவாதமாக கட்டிடமும் எழுப்பிவிட்டார் தன்னந்தனியாய் ஒரே ஒரு வீடு சுற்றிலும் சோளக்காடு கூப்பிடும் தூரத்தில் எந்த வீடுகளும் கிடையாது!
சந்தோசமாய்போய்கொண்டிருந்த அவரது வாழ்வில் ஒரு சின்ன கீறல்
இது பத்து வருடத்துக்கு முன்பு நடந்த சம்பவம்
நிலாவுக்கு ஹேபியஸ் கார்பஸ் போடவேண்டிய இரவு......... பூச்சிகள் சில்லிட்டுக்கொண்டிருந்தது.......... தூரத்தில் நாய்கள் குலவையிட்டுக்கொண்டிருந்தது........
மணி ஒன்றை கடந்துவிட்டது தடதடவென முன் கதவு தட்டப்படுகிறது...................... யாரது ?........... பதிலில்லை............ யாரய்யா......அது ......இது பெருமாள் சார் நாங்கதான்............ கதவுக்கு வெளியிலிருந்து குரல் நாங்கன்னா யாரு................. நாங்க திருடங்க!!!!!!!!!!!!!!!!!!!!! திருட வந்திருக்கோம் கதவ மரியாதயா தொறங்க! சத்தம் கித்தம் போட்டீங்க தொலஞ்சீங்க!
எல்லா ஜன்னல்களையும் திறந்துவிட்டு குடும்பமே குரலெலுப்புகிறது
ஜன்னலுக்கு பக்கத்தில் வந்து கத்துவதை தடுக்க கல்லெடுத்து எரிகிறார்கள் இரண்டு திருடர்கள்
ஒருவன் பின்கதவினை உடைத்துக்கொண்டு உள்ளே வந்தே விட்டான் ஒருவர் பின் ஒருவராக மூன்று பேர் உள்ளேவர
இரண்டுபேர் முன்புறம் பாரமில்ட்ரி
ம் இப்ப கத்து பாக்கலாம்? திருடன் சவால் விட
என்னவேணுமின்னாலும் எடுத்துட்டு போங்கபோங்க?
பெருமாள் சாரும் குடும்பமும் ஒதுங்கி நிற்க
பெண்களின் காதில் இருந்த கம்மல்கள் கைமாறுகிறது பீரோக்கள் புரட்டப்படுகிறது
'இன்னக்கி சம்பளநாள் தானே எங்கே கவரை எடு?'
'இல்லீங்க, இன்னக்கி முப்பதுதானே, நாளக்கி தான் சம்பளம்! இந்த மாசம் முப்பதியோரு நாட்கள்'
பவ்வியாமாய் விளக்கமளித்தார் பெருமாள்சார்
அவர்கள்என்ன திட்டத்தோடுதான் வந்திருக்கிறார்கள் என்பது அப்போதுதான் உரைத்தது
டீ போடமாட்டீங்களோ?
'நாளில் ஒன்று சக்கரகம்மி ' ஏதோ டீ கடையில் ஆர்டர்கொடுப்பது போலவே சொன்னான் ஹார்லிக்ஸ் இருக்கா?
இல்லீங்....
அவர் மனைவி டீ போட்டுத்தர நிதானமாய்குடித்துக்கொண்டிருந்த போதே
வெளியே சத்தம்

கத்தல் எப்படியோ கசிந்து கசிந்து ஊரின் ஓரத்தில் குடியிருந்த வெல்லத்துகார ராமசாமி அண்ணனைனை( எக்ஸ் வெல்லவியாபாரி)எட்டியிருந்திருக்கிறது
பதட்டத்தோடு வந்தார்
'வாங்கண்ணா!'
புதிய முகத்தை பார்த்து திடுக்கிட்டு நின்றவரை
'வாங்கண்ணே ஏ நின்னுட்டீங்க?'
திருட்டுக்கும்பல்தான்... தாட்சண்யமின்றி வரவேற்றது புது முகமாய் இருக்கிறதே என்று விபரீதம் உணர்ந்தவர் திரும்பி ஓட்டமெடுத்தார் அதற்க்குள்
அவசர அவசரமாக சேந்தமங்களத்திலிருந்து உறவினாரால் கொண்டுவரப்பட்ட மாம்பழக்கூடை, டேப் ரெகார்டர், கேசட்டுகள், கம்பளி, கம்மல், இவற்றையெல்லாம் மூட்டை கட்டிக்கொண்டு நடையக்கட்டினார்கள்
போன வெல்லத்துக்காரர் ஊர்க்காரர்களை கூட்டி திரும்பிவரும்போது
எல்லா காட்சிகளும் முடிந்துபோயிருந்தது.
முதலில் கால் பகுதி மட்டும் காட்டப்பட்டு மெல்லமாய் கேமரா மேலேரி முழு உருவத்தையும் காட்டுகிறது
இசை கூடுகிறது
அந்த உருவம் வேறு யாருமில்லை நானே தான்
இங்குதான் எனது என்ட்ரி ஆரம்பமாகிறது குழந்தைகள் பயந்துக்குது கொஞ்ச நாள் இங்கு யாரவது வந்து நிலமையை சரிசெய்து பாதுகாப்பு கொடுத்தல் இருக்கிறேன்
இல்லையென்றால் திரும்பவும்
கோட்டர்ஸ்க்கு திரும்பிவிடுகிறேனென்றார் வாத்தியார்

இதை பயன்படுத்தி அந்தவீட்டை சில புள்ளிகள் அடிமாட்டுவிலைக்கு கேட்டார்கள் காலிபண்ணி விற்க்கவைக்கவே இப்படிமிரட்டியிருக்கிறார்கள் என்ற வதந்தி இன்னும் ஊருக்குள் உயிரோடு உலவிக்கொண்டிருக்கிறது. இதைக்கேள்விப்பட்டு எங்களுக்கு ஜிவ்வென்று ஏறியது
ஒரு முடிவெடுத்தோம்
‘அவரை போகவிடக்கூடாது’
இந்த வீட்டை காலிசெய்யவிட்டுவிடக்கூடாது’

அவரோடு பேசினோம்
முதன் முதலாய் அவரை பார்த்தபோது அவர் சொன்ன வார்த்தை ‘பாவங்க நம்மல விட கஷ்டமாயிருக்கிறதனாலதானே நம்மகிட்ட திருட வறாங்க....இல்லீங்களா?
இந்த பார்வை எத்தனை பேராசிரியர்களுக்கு வரும் இதற்க்காக
கேசைக்கூட பெரிதாக அழுத்தம் கொடுக்காமல் விட்டுவிட்ட இவரை நாம் இழக்கக்கூடாது
நாங்கள் வாக்குகொடுத்தோம்
சந்தோசப்பட்டார்..
நான் சிவக்குமார்,பழனிசாமி,ராமசாமி ,தங்கவேலு .பாலாஜி,ரமேஷ்
இன்னும் பலர்.....................
இதில் ரமேஷ்தான் சீனியர்
இரவானால் பெருமாள் சார்வீட்டுக்கு சென்று காவலிருப்போம் வெடிய வெடிய கொட்ட கொட்ட முழிச்சு
விசிலடித்து...
ரோந்து போகிறது...... இதெல்லாம்
ஒரு மாதம்தான்
அப்புரம் வழக்கமான காவலுக்கு வந்திருந்தோம் வழக்கமான காவல்னா வேறொன்றுமில்லை
போனவுடன் நல்ல டீ கிடைக்கும்.,
(திருடனுக்கே நல்லா டீ போட்டுகொடுத்த குடும்பம் நமக்கு குடுக்காதா என்ன?!!!!!!!!!!!)
கொஞ்ச நேரம் கேரம் விளையாடுவோம் ,
பேப்பர் படிப்போம்
அப்புறம் கொரட்டைவிட்டு தூங்குறதுதான்
காலையில் எழுப்பி நல்ல காபியொன்று தருவார்கள் அதற்கு சரசூஸ் காப்பியென்று பேர்
புதுசாருக்கில்ல! அது வேரொன்றுமில்லை பெருமாள் சாரின் மனைவி பெயர் சஸ்வதி
( இப்படித்தான் அவரிடமும் சொல்லுவேன்)
குடித்துவிட்டு கிளம்பவேண்டியதுதான்
அப்புறம் ஞாயிறானால் கூவிவிடுவார்
(சிக்கன்) ப்ரொபஸர் அப்படித்தான் சொல்லுவார்
போண்டா ...
இந்த போண்டாவிற்க்காகவே காவலுக்கு வந்தவர்கள் இருக்கிறார்கள் இது கிட்டத்தட்ட மூன்றுவருடம் தொடர்ந்தது எங்களுக்கும் போரடிக்க ஆரம்பித்துவிட்டது அப்புறம் அவர் தைரியமாய்
எல்லாவற்றையும் எதிர்கொள்ள ஆரம்பித்தார் இரண்டுவீடுகளும் அவர் பகுதிக்கு புதிதாய் வந்துவிட்டது எங்கள் சேவையை அந்த வீடுகள் எடுத்துக்கொண்டுவிட்டது
இந்த காலகட்டத்தில் அவர்கள் குடும்பத்தோடு ஐக்கியம் ஆகிவிட்டோம்
அவருடைய குடும்பம் மிக அழகானது இரண்டு பெண்கள் மணிமேகலை- பெரிய மகள்-மெளனி பானுமதி -சின்ன மகள்-வால் சரவணன் மகன்-ஜாலி
எங்கள் மேல் அவர்களுக்கும் அவர்கள்மேல் எங்களுக்கும் அதீத அக்கறை துளிர்விடத்தொடங்கிய காலகட்டம் கிட்டதட்ட நெருங்கிய சொந்தம் போலவே ஆகிவிட்டோம்
மிக அதிக அக்கறை சில எதிர்பார்ப்புகளை விதைத்துவிட்டிருந்தது
இந்த தொடர்பைவைத்து காவலுக்கிருந்த நிறைய பேர் அவரிடம் ஆட்டையப்போட்டிருக்கிறார்கள்,
நிறையபேர் தங்களுக்கான சில வேலைகளை சாதித்திருக்கிறார்கள்,
சிலர் அவரிடம் அரசியல் செய்திருக்கிறார்கள்
ஒரு காரியம் செய்யதுவிட்டு அந்த தொடர்பை வலுப்படுத்தி வைத்துக்கொள்வதோ அல்லது அதற்க்கு பிரதி பலனாக சில காரியம் சாதித்து கொள்ளுவதோ இரண்டையும் எனக்குள் இல்லாமல் செய்திருந்ததது மக்கள் பண்பாட்டு இயக்கம்
என்னை பொறுத்தவரை அதற்கு பிறகு அந்த தொடர்பை கொஞ்சம் கொஞ்சமாக துண்டித்துவிட்டு வழக்கம் போல நான் இயங்க ஆரம்பித்துவிட்டேன்

அவரது பிரச்சனை முடிந்துவிட்டபின்பு நாம் எதற்காக அவரோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கவேண்டும் என்றுதான் தெரியவில்லை அதுதான் பிரச்சினையாகிவிட்டது
வழக்கம்போல் இல்லையென்றாலும்
வாரம் ஒருமுறையோ மாதம் ஒருமுறையோ வந்துவிட்டுபோலாமே -இது அவர்களின் வேண்டுதல்
ஆனால் வருடம் ஒருமுறைகூட போகவில்லை
இது தப்பா என்று தெரியவில்லை
ஆனால் வரும்போதுபோகும்போது பார்த்தால் பரஸ்பரம் ஒரு புன்னகையும் நேரமிருந்தால் சின்ன உரையாடலும் ஒரு ஹாயும்
இருந்துகொண்டுதான் இருந்தது

நான் போகாவிட்டால்கூட அவர்கள் வந்திருக்கலாம்தானே?
எனக்கு அப்படிக்கேட்கக்கூட தோணவில்லை

மணிமேகலையின் திருமணத்துக்கு போக முடியவில்லை சென்னையில் இருந்தேன்
இருந்தாலும் போயிருக்கமாட்டேன்
தலித்,மற்றும் இஸ்லாமியர் கல்யாணங்களைதவிர 99.99 % எங்கும் போவதில்லை
இது என்ன கொள்கையோ தெரியவில்லை ஆனாலும் ஊரிப்போய்விட்டது

அப்புறம்கூட அதே பரஸ்பர புன்னகையும் 'ஹாயும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது
மணி புதிதாகவீடுகட்டியிருக்கிராள்
யாரையும் அழைக்கவில்லை புதுமனை புகுவிழவை
ரொம்ப சிம்பிளாக வைத்துவிட்டோம் என்றார்கள்
நல்லவேளை தப்பித்தேன் என்றிருந்தது
அதற்கு பிறகுதான் தெரிந்தது
சிலபேரை அழைத்திருக்கிறார்கள்
உள்ளூர் அரசியல் அவர்களையும் ஆட்டிவைத்திருப்பது.
கொஞ்சம் மனது கனக்க ஆரம்பித்த போது எனக்கே ஆச்சரியமானது
அப்புறமும் தொடர்ந்தது
அதே புன்னகை
அதே ஹாய்
போனமாதத்தில் ஏதோ ஒரு தேதி-3-2009 அன்று
பெருமாள் சார் பொண்ணின் குழந்தை இறந்து விட்டது எழவுக்கு போகலயா? சம்பந்தமில்லாத ஒருவர் கேட்டார்]
அதிர்சியானேன்
எப்படி?
‘நல்லாதான் இருந்ததாம்
உடம்பு சரியில்லேன்னு ஆஸ்பத்திரிக்கு எடுத்துப்போனார்களாம்
மருந்த தப்பா மூக்கில் ஊத்திட்டாரம் டாக்டர்’
மனசு கொதித்தது,
எவனந்த டாக்டர்?
மிகமிகமிகமிக மென்மையும் பிடிவாதமும் கலந்த இந்த ஜீவானால் இதை எப்படி
தாங்கிக்கொள்ளும் என்று நினைத்தபோது மனசுக்குள் கஸ்டமாயிருந்தது
எப்ப நடந்தது?
ஒரு வாரமாச்சுன்னே!
அப்படியா?
அப்புறந்தான் கேட்டேன்
மணிக்கு எப்ப குழந்தைபிறந்தது ?
“நல்லா கேட்டீங்க போங்க
ஒரு மாசம் இருக்கும்.... கொழந்த பொறந்தததே உங்களுக்கு தெரியாதா?’
இல்லை!
ஏதோ குற்ற உணர்வும் ஏமாற்றமும் பாம்பாகி ஊற ஆரம்பித்து
ச்சே வைரவனாவது(மணியின் கணவர்) ஒரு ஒரு மெசேஜ் பண்ணிருக்கலாமே!
ஒருவாரம் கழித்து பிறப்புக்கு போகாமல் இறப்புக்குமட்டும் போக மனது
இடங்கொடுக்கவில்லை
இடையில் வைரவனை பார்த்தபோது கேட்டும்விட்டேன்
வைரவனிடமிருந்து இதற்க்கு பதிலுமில்லை
இப்பொழுது எதிரில்
மணியை பார்த்தாலும்.....
பானுவைப்பார்த்தாலும்......
வைரவனைப்பார்த்தாலும்.......
யாரும் புன்னகைப்பதில்லை
யாரும் ஹாய் சொல்வதில்லை
சின்ன உரையாடலும் கிடையாது
ஆனாலும் மனதுக்குள் அந்த குடும்பம் நீங்காத இடத்தை ஆக்கிரமித்திருப்பதை
உணரமுடிந்தது
அங்கே தங்கியிருந்தபோது
அன்யோன்யத்தை உணர்ந்திருக்கிறேன்............
அப்பழுக்கில்லாத நேசத்தை பெற்றிருக்கிறேன்...........
அக்கறையை பெற்றிருக்கிறேன்
நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்,

எப்பவாது அந்த திருடர்களைஅடையாளம் கண்டால் மெலிதாய் புன்னகைத்து ஒரு நன்றிசொல்ல வேண்டும்
அவனாவது ஹாய் சொல்லுவானா?


3 comments:

  1. தலைவா.ஒரு அனுபவத்தை
    அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்..
    சிறப்பு..வலையில் கட்டுரை / கவிதையை பதிவேற்றம் செய்யும் போது அதை ஒரு ஒழுங்கில் செய்தால் வாசிக்க சுலபமாயிருக்கும்..

    - அன்புடன்
    மயில்வண்ணன்.

    ReplyDelete
  2. அன்பு நண்பா உங்கள் எழுத்துக்ககள் அருமை பொன்ட் சரியாக விழவில்லை தயவுசெய்து பாருங்கள் அல்லது யுனி கோட்டில் எழுதுங்கள்.

    ReplyDelete
  3. மிக அற்புதமாக இருக்கிறது.

    ReplyDelete

Footer