Thursday, December 3, 2009
Thursday, September 10, 2009
சாமக்கோடங்கிகளும் சமச்சீர் கல்வியும்
Posted by
naathaari
at
7:39 AM
சொரண்டி, கோவை மாவட்டம் வெள்ளியங்காடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமம் .சொரண்டியில் கிட்டதட்ட 30 குடும்பங்கள் வாழ்கிறார்கள் அங்குள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 15 . அந்த 15 குழந்தைகளும் அருகில் உள்ள அத்திக்கடவு பள்ளியில் சென்று படித்து வருகிறார்கள் சொரண்டிகிராமத்திற்க்கு, மாலை நேர வகுப்பு ஒன்று ஏற்படுத்தி உதவவேண்டுமாய் கேட்டுக்கொண்டனர்
மேலும் சொரண்டிக்கு அத்திக்கடவு கிராமத்திலிருந்து வந்து ஒருவர் மாலை நேர வகுப்பு நடத்திக்கொண்டிருந்ததாகவும் இப்போது அவர் யானை பயத்தால் வருவதில்லை எனவும் ஆகவே மாலைநேர வகுப்பிற்க்கு ஏற்பாடு செய்து தருமாறும் அங்குள்ள இளைஞர் மற்றும் பெண்கள் குழுக்கள் மூலமாக கோரிக்கையும் விடுத்தனர்
12.4.09முதல் கட்டமாக ஊர்மூப்பன், இளைஞர் குழுவின் பொறுப்பாளர்கள்,மகளிர் குழு பொறுப்பாளர்கள் ஆகியோரை கலந்து பேசப்பட்டது
20/4/2009 அன்று கிராமக் கூட்டம் நடத்தப்பட்டது அதில் ஊரில் உள்ள இளைஞர் குழு , மகளிர் சுய உதவிக்குழு உட்பட அனைத்துப்பிரிவினரும் கலந்து கொண்டனர் , ஊர்மூப்பன் முன்னிலையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் குழந்தைகளின் கல்வித்திறன் உயர மாலை நேர வகுப்பு எப்படியாகிலும் ஏற்படுத்தி தரவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொண்டனர்
கலந்துரையாடல் தொடங்கியது
பள்ளியில் நன்றாக சொல்லிக்கொடுத்தால் மாலை நேரவகுப்பு அவசியமில்லைதானே -இது நான்
நாங்க வாத்தியார கொற சொல்ல மாட்டோம்நாங்க பேசற மொழி வேற அவுங்க பேசற மொழி வேறஅதனால் எங்க ஆளுங்க எங்க மொழியில சொல்லிக்கொடுத்தா தான் புரியும்
தமிழ்தான் ஆனா கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்உதாரணத்துக்கு அம்மாவ இருளர் மொழியில் அக்கான்னுதான் சொல்லுவாங்கஅம்மா... ஆடுன்னா அது அவுங்களுக்கு ரொம்ப புதுசாத்தான் இருக்கும் அப்புறம் அவுங்க மொழிஆட்கள்தவிர வேறு யாரிடமும் அந்யோன்யமாக குழந்தைகள் பேசி பழகாது‘கற்றலில் இனிமை’ ‘கண்ணா பின்னான்னு’ எத்தனையோ நல்ல முயற்சிகள் நடந்தாலும் நம்ம வாத்தியார்கள் சிரிப்ப தூக்கி வீட்டுல போட்டுட்டு மில்டிரி மாதிரி ஒரு மூஞ்சிய தூக்கி வெச்சுட்டுதான் ஸ்கூலுக்கு வருவாங்க
சரிதான்
உங்கமொழி பேசர வாத்தியார் ஸ்கூலில் இல்லையா?
இல்லை.
சரி இதற்க்கும் முன்னால் மாலைநேர வகுப்பு சொல்லிகொடுத்தவர்கள் யார்?
வெளியில் இருந்து வந்து சொல்லிக்கொடுத்தனர்...
மீண்டும் ஒருவர் வெளியில் இருந்து வந்து சொல்லிக்கொடுத்தால் அவர் தொடர்ந்து வருவார் என்று என்ன நிச்சயம் ?
ஆமாம் யானைக்காட்டில் அவர்கள் தொடர்ந்து வருவது பிரச்சனைதான்!
என்ன செய்யலாம்?
நாமே ஒருத்தர் நடத்தலாமே?
ஆம் அதுதான் சரியான யோசனை?
இதற்க்கும் முன்னால் மாலைநேரவகுப்பு எடுத்தவரின் கல்வித்தகுதி என்ன ?
12 வது
இங்கே 12 வது படித்தவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள்
நான்கு பேர்..
பெண்கள் ஒன்று
இவர்களில் யாராலும் மாலை நேரபள்ளி நடத்த இயலாதா?
முடியும்...
அப்படியென்றால் யார் முன் வருகிறீர்கள்
ரமேஷ்
முருகன்
முருகன்
காளி
மூவரில் ஒருவர் முடிவு செய்யுங்கள்
ரமேஷ்
இப்படி இப்போது வெளியாட்களின் உதவி இல்லாமல் தங்கள் பகுதிக்குள்ளிருந்தே ஒருவரை வைத்து இளைஞர் குழு மிக நன்றாக மாலை வகுப்பை நடத்தி வருகிறது இதை மற்ற ஊர்களிலும் நடைமுறைபடுத்த மற்ற குழுக்கள் முயன்று வருகிறது ஊக்கத்தொகைக்காக கோவையிலிருந்த ஒரு தொழில் நிறுவனத்தை சென்று சந்தித்தனர் ஆதிவாசிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அந்நிறுவனம் மாதம் 250 ரூபாய் வகுப்பு எடுக்கும் ஆசிரியருக்கு வழங்க சம்மதித்தது
ஆனால் இளைஞர் குழுவை சேர்ந்த ரமேஷ் அதை ஏற்றுக்கொள்ளமறுத்து எங்கள்குழந்தைகளின் படிப்புக்கு வெளியிலிருந்து ஒருவருக்கு இருக்கும் அக்கறை எங்களுக்கும் வேண்டுதம்தானே! ஆகவே 100 ரூபாய் மட்டும், எழுது பொருட்கள் செலவுக்காக பெற்றுக்கொண்டு வகுப்பை தொடர்கிறார்
ரமேஷ் அந்தப்பகுதிக்கு ஒரு முன்னுதரணமாக விளங்குகிறார் , இன்னும் ஒன்பது கிராமங்கள் இந்தவசதியை எதிர்பார்த்து காத்திருக்கிறது இதை படிக்கும் வாய்ப்புள்ளவர்கள் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் அவர்கள் மற்ற கிராமங்களுக்கு உதவ நீங்கள் உறுதுணையாய் இருங்கள்
உதவும் நன்கொடையாளரின் பெயரிலோஅல்லது அவர்கள் பெற்றோர் பெயரிலேயோ அம்மையம் செயல்படும் மேலும் மாதம் ஒரு முறை 10 கிராமத்தின் குழந்தைகளுக்கும் சேர்த்து சிறப்பு பயிற்சியையும் திட்டமிட்டுள்ளனர்
தொடர்புகொள்ள
தொடர்புகொள்ள
பி சுமதி,ஆர் செல்வன்,
குறிஞ்சி ஆதிவாசிகள் மையம் ,
கோபனாரி,தோலம்பாளையம் அஞ்சல் கோவை 641114தொடர்பு
தொலை பேசி எடுத்தாலும் எடுக்கும் 9843611108
Permalink | 4 comments |
Sunday, August 30, 2009
Sunday, August 23, 2009
கெளடில்யரும், ஒரு டாஸ்மாஸ் பாரும்
Posted by
naathaari
at
5:28 AM

மணி மாலை 8.30 லிருந்து 9.00 க்குள் இருந்திருக்கும்
வேலாண்டி பாளையம் சங்கமம் அலுவலகம்..
நுழைந்ததும் ஒரே களேபரம்..
கொஞ்சமாய் பீரடியுங்கள் ...
இல்லை.., எனக்கு மூடில்லை
என்ன பெரிய்ய்ய்ய மூடு?
மூடீட்டு டம்ளர எடு...ஊத்து...அடி...அம்புட்டுதான்
என்னோட பிறந்த நாளை கேவலப்படுத்துறயா நீ ?
சம்பத்தின் வார்த்தையை தட்டமுடியவில்லை
நான் குடிக்காத ஆள் கிடையாது அதை ஒரு ஒழுக்கம் சார்ந்த விசயமாக பார்ப்பதுமில்லை ஆனால் வெட்டியாய் அடித்துவிட்டு அன்பழகனை(அன்பழகனுக்கு நிச்சயம் ஒரு பதிவு வரும்) போல மொக்கை போடுவது அறவேபிடிப்பதில்லை
அதற்கு நான் என்ன செய்ய முடியும்
அளவாய்தான் அடிப்பேன்
இதை பெருமையாக சொல்லிக்கொள்ளவில்லை, என்னால் முடிவதில்லை
எங்கள் அறையின் குடிகாரர்கள் பட்டியலில் எனக்கு இடம் கிடையாது
நானும் குடிகாரன் என்றால் ‘வடிவேல் நானும் ரவுடிதான்னு சொல்லுவாரே அது மாதிரியா’ என்று சிரிக்கிறார்கள்
அப்புறம் ஒரு டம்ளர் மட்டும் அடித்து காலாய்க்க ஆரம்பித்தோம்
சாராயத்தின் வரலாறு குறித்து வில்வம் கேள்வி எழுப்பினார்
தமிழன் குடிக்க ஆரம்பித்த பிறகுதான் ..........
எப்ப குடிக்க ஆரம்பித்தார்கள்?
பழந்தமிழகத்தில் மதுவே கிடையாது...........
யார் சொன்னது?
விறலி விடு தூது சாரயம் பற்றி பேசுகிறது
ஒளவையாருக்கும் இப்பழக்கம் இருந்திருக்கிறது
அப்படி இல்லையென்றால் ஆத்திச்சூடியும் கிடையாது கொன்றைவேந்தனும் கிடையாது
அந்தக்கட்டத்தில் அப்படி இல்லையென்றால்தான் அதிசியம் அது சமூக நடவடிக்கை
பதிற்றுப்பத்தில் கள் பற்றிய ஒரு பாட்டிருக்கிறது தோழர்
அப்படியா?அப்படின்னா அது ‘பாட்டில் பத்து’ முதல் மொக்கையை சின்னையன் இறக்கினார்
அவ்வையாரும் அதியனனும் சியர்ஸ் சொல்லி கள்ளடித்ததை புறநானூறு சொல்லுது
கொக்கமக்கா - இது முருகன்
கொஞ்சம் கலாசிவிட்டு வண்டியைகிளப்பினேன்
அப்போது மணி இரவு 10.30
லாலிசாலையின் முக்கு திரும்பியதும் பகீரென்றது..
கொஞ்சமாய் இருந்த பீரின் போதை கால்கள் வழியாக தரையிறங்கியது
விவசாயக்கலூரியின் பாதையை எச்சரிக்கையோடுபார்த்தேன்
“Drunk and drive” போலீசார் இல்லை
அப்பாடா!
இறங்கிய போதைமுள் இப்போது மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிட்டது
சிலுசிலுக்கும் காற்று
யார்முகமும் தெரியாத இரவு
கொஞ்சம் கிறக்கம்
யார் சொன்னது?
விறலி விடு தூது சாரயம் பற்றி பேசுகிறது
ஒளவையாருக்கும் இப்பழக்கம் இருந்திருக்கிறது
அப்படி இல்லையென்றால் ஆத்திச்சூடியும் கிடையாது கொன்றைவேந்தனும் கிடையாது
அந்தக்கட்டத்தில் அப்படி இல்லையென்றால்தான் அதிசியம் அது சமூக நடவடிக்கை
பதிற்றுப்பத்தில் கள் பற்றிய ஒரு பாட்டிருக்கிறது தோழர்
அப்படியா?அப்படின்னா அது ‘பாட்டில் பத்து’ முதல் மொக்கையை சின்னையன் இறக்கினார்
அவ்வையாரும் அதியனனும் சியர்ஸ் சொல்லி கள்ளடித்ததை புறநானூறு சொல்லுது
கொக்கமக்கா - இது முருகன்
கொஞ்சம் கலாசிவிட்டு வண்டியைகிளப்பினேன்
அப்போது மணி இரவு 10.30
லாலிசாலையின் முக்கு திரும்பியதும் பகீரென்றது..
கொஞ்சமாய் இருந்த பீரின் போதை கால்கள் வழியாக தரையிறங்கியது
விவசாயக்கலூரியின் பாதையை எச்சரிக்கையோடுபார்த்தேன்
“Drunk and drive” போலீசார் இல்லை
அப்பாடா!
இறங்கிய போதைமுள் இப்போது மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிட்டது
சிலுசிலுக்கும் காற்று
யார்முகமும் தெரியாத இரவு
கொஞ்சம் கிறக்கம்
இருட்டின் புழுக்கைகளாக மனிதர்கள்
இதைவிட வேறென்ன வேண்டும்
லேசாக மிதந்தேன்
புதூர் போனதும் இறங்கி ஒரு தம்மடித்தேன்
’கருப்புராயன் கோவில் பாலத்துக்கு பக்கத்தில் வடவள்ளி போலீஸ் இருந்ததலும் இருக்கும், பைமெட்டல் குறுக்கு வழியில் வீடுபோய் சேர்ந்திடவேண்டும்’ உறுதியெடுத்துக்கொண்டேன்
வண்டியை எடுக்கும்போது ஒரு பையன்....
சார் பஸ் டைம் முடிந்து போச்சு நான் வடவள்ளிவரைக்கும் போகவேண்டும்
வரட்டுங்களா?
நானா சுமக்கிறேன், வா!
வண்டியில் இடம்கொடுத்தேன்
வழியில்......
ஆமா என்ன வய்சாச்சு உனக்கு?
18 .....
எங்க போய்ட்டு வரே ?
வேலைக்கு..
ஆமா இப்ப எங்க போறே?
அதன் சொன்னனே சார் வடவள்ளிக்கு
இதைவிட வேறென்ன வேண்டும்
லேசாக மிதந்தேன்
புதூர் போனதும் இறங்கி ஒரு தம்மடித்தேன்
’கருப்புராயன் கோவில் பாலத்துக்கு பக்கத்தில் வடவள்ளி போலீஸ் இருந்ததலும் இருக்கும், பைமெட்டல் குறுக்கு வழியில் வீடுபோய் சேர்ந்திடவேண்டும்’ உறுதியெடுத்துக்கொண்டேன்
வண்டியை எடுக்கும்போது ஒரு பையன்....
சார் பஸ் டைம் முடிந்து போச்சு நான் வடவள்ளிவரைக்கும் போகவேண்டும்
வரட்டுங்களா?
நானா சுமக்கிறேன், வா!
வண்டியில் இடம்கொடுத்தேன்
வழியில்......
ஆமா என்ன வய்சாச்சு உனக்கு?
18 .....
எங்க போய்ட்டு வரே ?
வேலைக்கு..
ஆமா இப்ப எங்க போறே?
அதன் சொன்னனே சார் வடவள்ளிக்கு
ஓ?
ஏம் படிக்கலயா?
இல்லசார்
ஏன்?
கஸ்டம்
என்ன கஸ்டம்
இப்போது வண்டி கருப்புராயன் கோவில் பாலத்துக்கு பக்கத்தில் வந்துவிட்டது
போலீஸ் வண்டியை நிறுத்தியது
நிறைய பேரை சோதனை செய்து சிலரை தனியாக நிறுத்தி
இல்லசார்
ஏன்?
கஸ்டம்
என்ன கஸ்டம்
இப்போது வண்டி கருப்புராயன் கோவில் பாலத்துக்கு பக்கத்தில் வந்துவிட்டது
போலீஸ் வண்டியை நிறுத்தியது
நிறைய பேரை சோதனை செய்து சிலரை தனியாக நிறுத்தி
வைத்திருந்தார்கள்
லைசென்ஸ்,இன்ஸுரன்ஸ், இத்தியாதி கருமங்களை டூல் பாக்ஸை திறந்து
லைசென்ஸ்,இன்ஸுரன்ஸ், இத்தியாதி கருமங்களை டூல் பாக்ஸை திறந்து
எடுத்து கான்ஸ்டபிளிடம் நீட்டினேன்
இத யாரு கேட்டா?
பின்னே!
குடிச்சிருக்கியா?... எங்கே வாய ஊது
‘அய்யோ... மோசம்போயிட்டியேடா’ உள் மனசு புலம்பியது
அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை நானென்ன ஒரு மொடாவா குடிச்சேன்
வேறொரு கன்ஸ்டபிள் ஊதச்சொன்னார்
அவர் ஜெகஜால கில்லாடி,... கண்டுபிடித்துவிட்டார்
ஓரமா நில்லுப்பா! சாவியை எடுத்துக்கொண்டார்
சரி தம்பி நீங்க கிளம்புங்க.... அந்த பொடியனிடம் சொன்னபோது
சார் என்னாலதான் உங்களுக்கு இந்த நிலமையாச்சு மன்னிச்சுருங்க சார்
அவன் போகவே இல்லை கொஞ்சநேரம் அங்கேயே நின்றிருந்தான்
கிளம்புப்பா நான் பார்த்துக்கறேன், மெல்ல நடக்க ஆரம்பித்தான்
அப்புறம் ஒரு போலீஸ் தேவதை வந்தது....அது ஒரே கலாய்ப்பு மூடில் இருந்தது
மேடம் இவன் குடிச்சிருக்கான்
என்ன குடிச்சிருக்கியா?
ஆமாம் கொஞ்சமாய் !
என்ன குடிச்சே?
பீர்......
எவ்வளவு ?
ஒரு டம்ளர்......
அது புண்முறுவல் பூத்தது
ஏட்டு இவனக்கொண்டுபோய் புக் பண்ணுங்க...
இல்லை, ஸ்பாட் பைன்தானே சொல்லுங்க இங்கயே கட்டிடறேன்
இது சிட்டிலிமிட் இல்லை
ஓ!
ஏட்டு வண்டியஓட்ட நான் உட்கார்ந்துகொண்டேன்
இத்தன செக் பன்னறாங்கன்னு தெரியுமில்ல எதுக்கு குடிக்கறே?
சங்கம சமாச்சாரங்களையெல்லாம் அவனிடம் சொல்லவா முடியும்
சார் ஸ்டேசன் போகம இருக்க வழியிருக்கா?
ஏன்?
‘அங்க போனா பிரச்சனியாயிடும்’
நான் பாத்துக்கறேன்
இல்லை எங்க சொந்தக்காரங்க அங்க வருவாங்க!
யாரு?
........................
அப்படிய்யா அவுங்களாஅவுங்க உனக்கு என்னாகனும் ?
............................................
வண்டியின் வேகம் தன்னிச்சையாக குறைந்தது
ஆமா என்ன வேல செய்யுற தம்பி?
குரலில் கொஞ்சம் கடுமை குறைந்திருந்தது
சமூகப்பணி
அப்படீன்னா?
அது ஒரு வேலங்க
ஓ!
அவருக்கு விளங்கவில்லை என்பது எனக்கு தெரிந்தது அதை உறுதிப்படுத்தும் விதமாக
என்ன படிச்சிருக்கே?
வக்கிலுக்கு!
வண்டியை நிறுத்திவிட்டார் திரும்பி
ஏன் சார் இத அப்பவே சொல்லுலாமில்ல?
மரியாதை லிட்டர் கணக்கில் எகிறியது
ஆனா கோர்ட்டுக்கு போவதில்லை
அப்புறம் சார்....
ஒரு அரசின் திட்டத்தில் பணியாற்றுகிறேன்
என்ன சார்? நீங்க இதெல்லாம் சொல்லாம இப்படி இருகீங்களே
கடய 10 மணிக்கு மூடுன்னா எங்களுக்கும் தொல்லை கம்மியாகும் அத செய்யுதாஇந்த கவுறுமெண்டு- இது ஏட்டு
அதற்குள் தேவதை வந்துவிட்டது
என்ன ஏட்டையா நின்னுட்டீங்க?
.........................................................................................................!
எல்லா சமாச்சாரத்தையும் தேவதையிடம் சொல்லியிருப்பார் போல!
, எங்க டூட்டிய நாங்க பாக்கனுமில்ல சார்
இத யாரு கேட்டா?
பின்னே!
குடிச்சிருக்கியா?... எங்கே வாய ஊது
‘அய்யோ... மோசம்போயிட்டியேடா’ உள் மனசு புலம்பியது
அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை நானென்ன ஒரு மொடாவா குடிச்சேன்
வேறொரு கன்ஸ்டபிள் ஊதச்சொன்னார்
அவர் ஜெகஜால கில்லாடி,... கண்டுபிடித்துவிட்டார்
ஓரமா நில்லுப்பா! சாவியை எடுத்துக்கொண்டார்
சரி தம்பி நீங்க கிளம்புங்க.... அந்த பொடியனிடம் சொன்னபோது
சார் என்னாலதான் உங்களுக்கு இந்த நிலமையாச்சு மன்னிச்சுருங்க சார்
அவன் போகவே இல்லை கொஞ்சநேரம் அங்கேயே நின்றிருந்தான்
கிளம்புப்பா நான் பார்த்துக்கறேன், மெல்ல நடக்க ஆரம்பித்தான்
அப்புறம் ஒரு போலீஸ் தேவதை வந்தது....அது ஒரே கலாய்ப்பு மூடில் இருந்தது
மேடம் இவன் குடிச்சிருக்கான்
என்ன குடிச்சிருக்கியா?
ஆமாம் கொஞ்சமாய் !
என்ன குடிச்சே?
பீர்......
எவ்வளவு ?
ஒரு டம்ளர்......
அது புண்முறுவல் பூத்தது
ஏட்டு இவனக்கொண்டுபோய் புக் பண்ணுங்க...
இல்லை, ஸ்பாட் பைன்தானே சொல்லுங்க இங்கயே கட்டிடறேன்
இது சிட்டிலிமிட் இல்லை
ஓ!
ஏட்டு வண்டியஓட்ட நான் உட்கார்ந்துகொண்டேன்
இத்தன செக் பன்னறாங்கன்னு தெரியுமில்ல எதுக்கு குடிக்கறே?
சங்கம சமாச்சாரங்களையெல்லாம் அவனிடம் சொல்லவா முடியும்
சார் ஸ்டேசன் போகம இருக்க வழியிருக்கா?
ஏன்?
‘அங்க போனா பிரச்சனியாயிடும்’
நான் பாத்துக்கறேன்
இல்லை எங்க சொந்தக்காரங்க அங்க வருவாங்க!
யாரு?
........................
அப்படிய்யா அவுங்களாஅவுங்க உனக்கு என்னாகனும் ?
............................................
வண்டியின் வேகம் தன்னிச்சையாக குறைந்தது
ஆமா என்ன வேல செய்யுற தம்பி?
குரலில் கொஞ்சம் கடுமை குறைந்திருந்தது
சமூகப்பணி
அப்படீன்னா?
அது ஒரு வேலங்க
ஓ!
அவருக்கு விளங்கவில்லை என்பது எனக்கு தெரிந்தது அதை உறுதிப்படுத்தும் விதமாக
என்ன படிச்சிருக்கே?
வக்கிலுக்கு!
வண்டியை நிறுத்திவிட்டார் திரும்பி
ஏன் சார் இத அப்பவே சொல்லுலாமில்ல?
மரியாதை லிட்டர் கணக்கில் எகிறியது
ஆனா கோர்ட்டுக்கு போவதில்லை
அப்புறம் சார்....
ஒரு அரசின் திட்டத்தில் பணியாற்றுகிறேன்
என்ன சார்? நீங்க இதெல்லாம் சொல்லாம இப்படி இருகீங்களே
கடய 10 மணிக்கு மூடுன்னா எங்களுக்கும் தொல்லை கம்மியாகும் அத செய்யுதாஇந்த கவுறுமெண்டு- இது ஏட்டு
அதற்குள் தேவதை வந்துவிட்டது
என்ன ஏட்டையா நின்னுட்டீங்க?
.........................................................................................................!
எல்லா சமாச்சாரத்தையும் தேவதையிடம் சொல்லியிருப்பார் போல!
, எங்க டூட்டிய நாங்க பாக்கனுமில்ல சார்
இல்லை பைன் வேணா கட்டிடறேன்
இனிமேல் இப்படி நடக்காம பாத்துக்குங்க.....
வண்டிய ஏட்டு பவ்யமாய் ஸ்டார்ட் செய்து ஒப்படைத்தார்
ஏட்டு எவ்வளவு கேஸாச்சு
இவுரில்லாம 2 ங்க
இன்னொன்னு புடிங்க!!!!
அவர்களுடைய டார்கெட் அன்றைக்கு மூன்றென்று புரிந்துகொண்டேன்
வடவள்ளியில் வந்து ஒரு தம் பத்தவைத்துவிட்டு யோசிச்சேன்
இப்படியாயிருச்சே!
எங்கே கோளாறு?
ச்சே!!!!!
ஏட்டு எவ்வளவு கேஸாச்சு
இவுரில்லாம 2 ங்க
இன்னொன்னு புடிங்க!!!!
அவர்களுடைய டார்கெட் அன்றைக்கு மூன்றென்று புரிந்துகொண்டேன்
வடவள்ளியில் வந்து ஒரு தம் பத்தவைத்துவிட்டு யோசிச்சேன்
இப்படியாயிருச்சே!
எங்கே கோளாறு?
ச்சே!!!!!
இந்த இவுனுககிட்டல்லா நிக்கவேண்டியதா போச்சே
கருப்புராயன் கோவில் பாலத்துக்கு பக்கத்தில் வடவள்ளி போலீஸ் இருந்தாலும் இருக்கும்,...பைமெட்டல் குறுக்கு வழியில் வீடுபோய் சேர்ந்திடவேண்டும் என்று உறுதியெடுத்துக்கொண்டிருந்தேனே... என்னாயிற்று அது?
அப்போதுதான் உறைத்தது
அந்த பையனோடு பேசிக்கொண்டே வந்ததில் பைமெட்டல் கட்டும்,
சங்கமத்தில் பீரடித்ததும் மறந்து போயிருக்கிறேன்
ஆம் இந்த அரசாங்கம் எதற்க்கு டாஸ்மாக்கை திறந்து வைத்திருக்கிறது?
கல்லா கட்ட!
அப்புறம் எதுக்கு பிடிக்கிறார்கள் ?
குடித்துவிட்டு வண்டியோட்டி ஆகும் விபத்துகளை தவிர்க்க........
இந்த ரோட்டில் குடித்துவிட்டு வண்டியோட்டி நடந்த விபத்தின் சதவீதம் ஜீரோ பர்செண்ட்!
அரசு தன் ஒழுக்கத்தை நிரூபிக்கவேண்டாமா?...
அப்புறம் கடையை திறப்பது எந்த ஒழுக்கத்தில்?
கல்லா கட்ட!
அப்புறம் ஏன் பிடிக்கிறார்கள்?
ஒழுக்க மயிர நிரூபிக்க ....
தொடர்ந்து தினமும் புடிக்கவேண்டியதுதானே!.. என்ன மயிறுக்கு சனிக்கிழமை மட்டும் பிடிக்கிறாங்க?
அன்னிக்குதான் நிறைய கேஸ்கிடைக்கும்
தினமும் பிடிச்சா யாரும் குடிக்கமாட்டாங்கதானே
குடிக்காட்டீ டாஸ்மாஸ்க் எப்படி ஓடும்?
விக்கறது கொறஞ்ச தகவல் வந்திருக்கு...!
லபக்க்றத நிறுத்து!
அப்புறம்கேப்பு
கருப்புராயன் கோவில் பாலத்துக்கு பக்கத்தில் வடவள்ளி போலீஸ் இருந்தாலும் இருக்கும்,...பைமெட்டல் குறுக்கு வழியில் வீடுபோய் சேர்ந்திடவேண்டும் என்று உறுதியெடுத்துக்கொண்டிருந்தேனே... என்னாயிற்று அது?
அப்போதுதான் உறைத்தது
அந்த பையனோடு பேசிக்கொண்டே வந்ததில் பைமெட்டல் கட்டும்,
சங்கமத்தில் பீரடித்ததும் மறந்து போயிருக்கிறேன்
ஆம் இந்த அரசாங்கம் எதற்க்கு டாஸ்மாக்கை திறந்து வைத்திருக்கிறது?
கல்லா கட்ட!
அப்புறம் எதுக்கு பிடிக்கிறார்கள் ?
குடித்துவிட்டு வண்டியோட்டி ஆகும் விபத்துகளை தவிர்க்க........
இந்த ரோட்டில் குடித்துவிட்டு வண்டியோட்டி நடந்த விபத்தின் சதவீதம் ஜீரோ பர்செண்ட்!
அரசு தன் ஒழுக்கத்தை நிரூபிக்கவேண்டாமா?...
அப்புறம் கடையை திறப்பது எந்த ஒழுக்கத்தில்?
கல்லா கட்ட!
அப்புறம் ஏன் பிடிக்கிறார்கள்?
ஒழுக்க மயிர நிரூபிக்க ....
தொடர்ந்து தினமும் புடிக்கவேண்டியதுதானே!.. என்ன மயிறுக்கு சனிக்கிழமை மட்டும் பிடிக்கிறாங்க?
அன்னிக்குதான் நிறைய கேஸ்கிடைக்கும்
தினமும் பிடிச்சா யாரும் குடிக்கமாட்டாங்கதானே
குடிக்காட்டீ டாஸ்மாஸ்க் எப்படி ஓடும்?
விக்கறது கொறஞ்ச தகவல் வந்திருக்கு...!
லபக்க்றத நிறுத்து!
அப்புறம்கேப்பு
அரசாங்கத்துமேல குடிக்காத மக்களுக்கு கொஞ்சம் அதிருப்தி -உளவு
மீண்டும் லபக்கு...
இப்படி குடிகாரர்களின் ஆதரவையும் குடிக்காதவர்களின் ஆதரவையும்
பேலன்சாய் வைத்திருப்பது எம்புட்டு கஸ்டம் தெரியுமா?
கருப்பு கார்பரேட்டுகளுக்கு இது கைவந்த கலை
கல்லா கட்டுறது மட்டும் தான் நோக்கம், வேறு ஏதாவது நலநோக்கம் இந்த அரசுகளுக்கு இருக்கும் என்று நீங்க நினைத்தால், உங்கள் விட கூமுட்டை யாரும் இருக்கமுடியாது!
ஒரு ஸ்டேசனுக்கு ,ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம் 5 கேஸ், மாதத்தில் 15 நாள்
ரூரலில் அபராதம் 2000
அர்பன்னா அபராதம் 1000
2000x5= 10000x15= 1,50,000
ஒரு மாவட்டத்துக்கு 30 ஸ்டேசன்
30x1,50,000= 45 லட்சம்
45 லட்சம் x 30 மாவட்டம் 13,50,00000 கோடி
வருசத்துக்கு 13,50,00000x12=1620000000
அப்பாடியோ அபராதமே 100 கோடிய தாண்டுது
அப்புறம் டாஸ்மாஸ்க் விற்பனை
தமிழ் நாட்டில் 177 லட்சம் பெட்டிகள் பீரும், 144 லட்சம் பெட்டிகள் பிராந்தியும் 87 லட்சம் பெட்டிகள் ரம்மும் , 33 லட்சம் பெட்டிகள் விஸ்கியும் , 8 லட்சம் பெட்டிகள் ஜின் 7 லட்சம் பெட்டிகள் ஓட்கா 8 லட்சம் பெட்டிகள் ஒயினும் விக்குதாம்
கணக்கு போட்டு பாருங்க
கருப்பு கார்பரேட்டுகளுக்கு இது கைவந்த கலை
கல்லா கட்டுறது மட்டும் தான் நோக்கம், வேறு ஏதாவது நலநோக்கம் இந்த அரசுகளுக்கு இருக்கும் என்று நீங்க நினைத்தால், உங்கள் விட கூமுட்டை யாரும் இருக்கமுடியாது!
ஒரு ஸ்டேசனுக்கு ,ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம் 5 கேஸ், மாதத்தில் 15 நாள்
ரூரலில் அபராதம் 2000
அர்பன்னா அபராதம் 1000
2000x5= 10000x15= 1,50,000
ஒரு மாவட்டத்துக்கு 30 ஸ்டேசன்
30x1,50,000= 45 லட்சம்
45 லட்சம் x 30 மாவட்டம் 13,50,00000 கோடி
வருசத்துக்கு 13,50,00000x12=1620000000
அப்பாடியோ அபராதமே 100 கோடிய தாண்டுது
அப்புறம் டாஸ்மாஸ்க் விற்பனை
தமிழ் நாட்டில் 177 லட்சம் பெட்டிகள் பீரும், 144 லட்சம் பெட்டிகள் பிராந்தியும் 87 லட்சம் பெட்டிகள் ரம்மும் , 33 லட்சம் பெட்டிகள் விஸ்கியும் , 8 லட்சம் பெட்டிகள் ஜின் 7 லட்சம் பெட்டிகள் ஓட்கா 8 லட்சம் பெட்டிகள் ஒயினும் விக்குதாம்
கணக்கு போட்டு பாருங்க
இப்பவே கண்ணகட்டுதா?
இப்படி டபுள் வருமானம் உள்ளத விட உங்களப்போல அரசு இளிச்சவாயனா என்ன ?
குடிக்காதவங்கள வெச்சு குடிக்கறவங்ககிட்ட அட்ட டைமில் ரெண்டு தபா பிக்பாக்கெட் அடிச்சு சம்பாரிக்கும் அரசை, குடிக்கறவங்கள வெச்சு, குடிக்காதவங்க கிட்ட நல்ல பேரையும் சம்பாரிக்கும் அரசை அர்தத சாஸ்திரத்துக்கு பிறகு இங்குதான் காணமுடிகிறது
குடிக்காதவங்கள வெச்சு குடிக்கறவங்ககிட்ட அட்ட டைமில் ரெண்டு தபா பிக்பாக்கெட் அடிச்சு சம்பாரிக்கும் அரசை, குடிக்கறவங்கள வெச்சு, குடிக்காதவங்க கிட்ட நல்ல பேரையும் சம்பாரிக்கும் அரசை அர்தத சாஸ்திரத்துக்கு பிறகு இங்குதான் காணமுடிகிறது
Permalink | 7 comments |
Saturday, May 30, 2009
குப்பைத்தொட்டியில் கிடக்கிறது ஒரு கருப்பை
Posted by
naathaari
at
8:28 AM
தீண்டப்படாத இடம் யாதுமில்லையென்றபோதும்
பிளவுபட்ட நாக்குகளை தின்றுவிடும் அகோர வெரியோடு
ஊர்கிறது
சமாதிகளில் வழியும் உயிரை நக்கும்
அதன் நகர்வுகளில் நெரிகிறது குழந்தைகளும்
அதன் பொம்மைகளும்
சாட்சியமே அழித்ததற்க்காய்
பிராந்திய வேசம்கட்டி
சதையையும் பிட்டுத்தருகிற
கொடூரங்களைக் கேட்டு உதிர்ந்த காதுகள்
உடலமெங்கும் முளைக்கிறது
ஏலாமையில்வடிந்தகுற்றவுணர்வில்
குதித்து
வலியின் வேர்கள் பிளக்க
தவணையில் சாகிறது மனசு
‘கசப்பில் வழிந்த துளிகள்
இறுகி படிக்கட்டுகளாகும்’
நம்பிக்கையின் கீற்று அற்றுப்போன
சிதிலங்களில் பெய்கிற பேரிடியில்
பிணவாசனையெழும்பி உலகத்தில் ஒவ்வொருவனின் நுரையீரலையும் நிரப்பும்
அண்டெனும்
எட்டிப்பாருங்கள்
சர்வதேசத்தின் குப்பைத்தொட்டியை
Permalink | 5 comments |
Thursday, May 21, 2009
Friday, May 8, 2009
Subscribe to:
Posts (Atom)














