இன்று சத்தியமங்கலம் நகராட்சிக்கட்டிடத்தில் ஊராளி,சோளகர்,மலையாளி குரும்பர் முடுகர் இன ஆதிவாசிகள் நிறைந்திருந்த கூட்டத்தில் ஒடியன் நூல் அறிமுகம் நடைபெற்றது நூலை வழக்கறிஞர் ப.பா மோகன் வெளியிட கருப்புசாமி பெற்றுக்கொண்டார்
அவர்கள் வாழ்விற்க்காக தங்கள் வாழ்வை தியகப்படுத்திக்கொண்ட ரங்கசாமி மோகன்குமார்,பாலதண்டாயுதம், குணசேகர் பணையம்பள்ளி சுந்தர் ஆதிவாசிகள் மேல் சோடிக்கப்படும் எல்லா வழக்குகளையும் தொடர்ந்து நொறுக்கிக்கொண்டிருக்கும் ப பா மோகன் ஆகியோர் புததகம் குறித்து உரையாற்றினார்கள்
கூட்டத்தில் கல்ந்துகொண்ட ஆதிவாசிகள் தங்கள் ஆடைகளுக்குள் முடிந்திருந்த காசுகளை எண்ணி எண்ணி புத்தகத்தை வாங்கிக்கொண்ட காட்சி என்னை கண்கலங்கவைத்தது
இறுதியில் புத்தக விற்பனையில் வந்த பணத்தை அவர்கள் சங்க வளர்ச்சிப்பணிகளுக்கு ஒப்படைத்தேன் பலத்த கட்டாயப்படுத்தலுக்கு பின்பே அப்பணத்தை பெற்றுக்கொண்டனர்
வாழ்வில் மறக்கமுடியாத நாளாய் இந்நிகழ்வை மாற்றிய ஆதிவாசி மக்களுக்கும் அவர்களோடு வழிநடந்துகொண்டிருக்கும் அத்தோழர்களுக்கும் நன்றி சொல்லி கனத்த மனதோடு விடைபெறவேண்டியிருந்தது
பகிர்தலுக்கு நன்றி இலட்சுமணன்.
ReplyDelete