August 23, 2009

கெளடில்யரும், ஒரு டாஸ்மாஸ் பாரும்


மணி மாலை 8.30 லிருந்து 9.00 க்குள் இருந்திருக்கும்

வேலாண்டி பாளையம் சங்கமம் அலுவலகம்..

நுழைந்ததும் ஒரே களேபரம்..

கொஞ்சமாய் பீரடியுங்கள் ...

இல்லை.., எனக்கு மூடில்லை

என்ன பெரிய்ய்ய்ய மூடு?

மூடீட்டு டம்ளர எடு...ஊத்து...அடி...அம்புட்டுதான்

என்னோட பிறந்த நாளை கேவலப்படுத்துறயா நீ ?

சம்பத்தின் வார்த்தையை தட்டமுடியவில்லை

நான் குடிக்காத ஆள் கிடையாது அதை ஒரு ஒழுக்கம் சார்ந்த விசயமாக பார்ப்பதுமில்லை ஆனால் வெட்டியாய் அடித்துவிட்டு அன்பழகனை(அன்பழகனுக்கு நிச்சயம் ஒரு பதிவு வரும்) போல மொக்கை போடுவது அறவேபிடிப்பதில்லை

அதற்கு நான் என்ன செய்ய முடியும்

அளவாய்தான் அடிப்பேன்

இதை பெருமையாக சொல்லிக்கொள்ளவில்லை, என்னால் முடிவதில்லை

எங்கள் அறையின் குடிகாரர்கள் பட்டியலில் எனக்கு இடம் கிடையாது

நானும் குடிகாரன் என்றால் ‘வடிவேல் நானும் ரவுடிதான்னு சொல்லுவாரே அது மாதிரியா’ என்று சிரிக்கிறார்கள்


அப்புறம் ஒரு டம்ளர் மட்டும் அடித்து காலாய்க்க ஆரம்பித்தோம்

சாராயத்தின் வரலாறு குறித்து வில்வம் கேள்வி எழுப்பினார்

தமிழன் குடிக்க ஆரம்பித்த பிறகுதான் ..........
எப்ப குடிக்க ஆரம்பித்தார்கள்?
பழந்தமிழகத்தில் மதுவே கிடையாது...........

யார் சொன்னது?

விறலி விடு தூது சாரயம் பற்றி பேசுகிறது

ஒளவையாருக்கும் இப்பழக்கம் இருந்திருக்கிறது

அப்படி இல்லையென்றால் ஆத்திச்சூடியும் கிடையாது கொன்றைவேந்தனும் கிடையாது

அந்தக்கட்டத்தில் அப்படி இல்லையென்றால்தான் அதிசியம் அது சமூக நடவடிக்கை

பதிற்றுப்பத்தில் கள் பற்றிய ஒரு பாட்டிருக்கிறது தோழர்

அப்படியா?அப்படின்னா அது ‘பாட்டில் பத்து’ முதல் மொக்கையை சின்னையன் இறக்கினார்

அவ்வையாரும் அதியனனும் சியர்ஸ் சொல்லி கள்ளடித்ததை புறநானூறு சொல்லுது

கொக்கமக்கா - இது முருகன்

கொஞ்சம் கலாசிவிட்டு வண்டியைகிளப்பினேன்
அப்போது மணி இரவு 10.30
லாலிசாலையின் முக்கு திரும்பியதும் பகீரென்றது..
கொஞ்சமாய் இருந்த பீரின் போதை கால்கள் வழியாக தரையிறங்கியது
விவசாயக்கலூரியின் பாதையை எச்சரிக்கையோடுபார்த்தேன்

“Drunk and drive” போலீசார் இல்லை

அப்பாடா!

இறங்கிய போதைமுள் இப்போது மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிட்டது

சிலுசிலுக்கும் காற்று

யார்முகமும் தெரியாத இரவு

கொஞ்சம் கிறக்கம்
இருட்டின் புழுக்கைகளாக மனிதர்கள்

இதைவிட வேறென்ன வேண்டும்

லேசாக மிதந்தேன்

புதூர் போனதும் இறங்கி ஒரு தம்மடித்தேன்

’கருப்புராயன் கோவில் பாலத்துக்கு பக்கத்தில் வடவள்ளி போலீஸ் இருந்ததலும் இருக்கும், பைமெட்டல் குறுக்கு வழியில் வீடுபோய் சேர்ந்திடவேண்டும்’ உறுதியெடுத்துக்கொண்டேன்

வண்டியை எடுக்கும்போது ஒரு பையன்....

சார் பஸ் டைம் முடிந்து போச்சு நான் வடவள்ளிவரைக்கும் போகவேண்டும்

வரட்டுங்களா?

நானா சுமக்கிறேன், வா!

வண்டியில் இடம்கொடுத்தேன்

வழியில்......

ஆமா என்ன வய்சாச்சு உனக்கு?

18 .....

எங்க போய்ட்டு வரே ?

வேலைக்கு..

ஆமா இப்ப எங்க போறே?

அதன் சொன்னனே சார் வடவள்ளிக்கு
ஓ?
ஏம் படிக்கலயா?

இல்லசார்

ஏன்?

கஸ்டம்

என்ன கஸ்டம்

இப்போது வண்டி கருப்புராயன் கோவில் பாலத்துக்கு பக்கத்தில் வந்துவிட்டது

போலீஸ் வண்டியை நிறுத்தியது

நிறைய பேரை சோதனை செய்து சிலரை தனியாக நிறுத்தி
வைத்திருந்தார்கள்

லைசென்ஸ்,இன்ஸுரன்ஸ், இத்தியாதி கருமங்களை டூல் பாக்ஸை திறந்து
எடுத்து கான்ஸ்டபிளிடம் நீட்டினேன்


இத யாரு கேட்டா?

பின்னே!

குடிச்சிருக்கியா?... எங்கே வாய ஊது

‘அய்யோ... மோசம்போயிட்டியேடா’ உள் மனசு புலம்பியது

அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை நானென்ன ஒரு மொடாவா குடிச்சேன்

வேறொரு கன்ஸ்டபிள் ஊதச்சொன்னார்

அவர் ஜெகஜால கில்லாடி,... கண்டுபிடித்துவிட்டார்

ஓரமா நில்லுப்பா! சாவியை எடுத்துக்கொண்டார்

சரி தம்பி நீங்க கிளம்புங்க.... அந்த பொடியனிடம் சொன்னபோது

சார் என்னாலதான் உங்களுக்கு இந்த நிலமையாச்சு மன்னிச்சுருங்க சார்

அவன் போகவே இல்லை கொஞ்சநேரம் அங்கேயே நின்றிருந்தான்

கிளம்புப்பா நான் பார்த்துக்கறேன், மெல்ல நடக்க ஆரம்பித்தான்

அப்புறம் ஒரு போலீஸ் தேவதை வந்தது....அது ஒரே கலாய்ப்பு மூடில் இருந்தது

மேடம் இவன் குடிச்சிருக்கான்

என்ன குடிச்சிருக்கியா?

ஆமாம் கொஞ்சமாய் !

என்ன குடிச்சே?

பீர்......

எவ்வளவு ?

ஒரு டம்ளர்......

அது புண்முறுவல் பூத்தது

ஏட்டு இவனக்கொண்டுபோய் புக் பண்ணுங்க...

இல்லை, ஸ்பாட் பைன்தானே சொல்லுங்க இங்கயே கட்டிடறேன்

இது சிட்டிலிமிட் இல்லை

ஓ!

ஏட்டு வண்டியஓட்ட நான் உட்கார்ந்துகொண்டேன்

இத்தன செக் பன்னறாங்கன்னு தெரியுமில்ல எதுக்கு குடிக்கறே?

சங்கம சமாச்சாரங்களையெல்லாம் அவனிடம் சொல்லவா முடியும்

சார் ஸ்டேசன் போகம இருக்க வழியிருக்கா?

ஏன்?

‘அங்க போனா பிரச்சனியாயிடும்’

நான் பாத்துக்கறேன்

இல்லை எங்க சொந்தக்காரங்க அங்க வருவாங்க!

யாரு?
........................
அப்படிய்யா அவுங்களாஅவுங்க உனக்கு என்னாகனும் ?
............................................
வண்டியின் வேகம் தன்னிச்சையாக குறைந்தது

ஆமா என்ன வேல செய்யுற தம்பி?

குரலில் கொஞ்சம் கடுமை குறைந்திருந்தது

சமூகப்பணி

அப்படீன்னா?

அது ஒரு வேலங்க

ஓ!

அவருக்கு விளங்கவில்லை என்பது எனக்கு தெரிந்தது அதை உறுதிப்படுத்தும் விதமாக

என்ன படிச்சிருக்கே?

வக்கிலுக்கு!

வண்டியை நிறுத்திவிட்டார் திரும்பி

ஏன் சார் இத அப்பவே சொல்லுலாமில்ல?

மரியாதை லிட்டர் கணக்கில் எகிறியது

ஆனா கோர்ட்டுக்கு போவதில்லை

அப்புறம் சார்....

ஒரு அரசின் திட்டத்தில் பணியாற்றுகிறேன்

என்ன சார்? நீங்க இதெல்லாம் சொல்லாம இப்படி இருகீங்களே

கடய 10 மணிக்கு மூடுன்னா எங்களுக்கும் தொல்லை கம்மியாகும் அத செய்யுதாஇந்த கவுறுமெண்டு- இது ஏட்டு

அதற்குள் தேவதை வந்துவிட்டது

என்ன ஏட்டையா நின்னுட்டீங்க?
.........................................................................................................!
எல்லா சமாச்சாரத்தையும் தேவதையிடம் சொல்லியிருப்பார் போல!

, எங்க டூட்டிய நாங்க பாக்கனுமில்ல சார்
இல்லை பைன் வேணா கட்டிடறேன்
இனிமேல் இப்படி நடக்காம பாத்துக்குங்க.....
வண்டிய ஏட்டு பவ்யமாய் ஸ்டார்ட் செய்து ஒப்படைத்தார்

ஏட்டு எவ்வளவு கேஸாச்சு

இவுரில்லாம 2 ங்க

இன்னொன்னு புடிங்க!!!!

அவர்களுடைய டார்கெட் அன்றைக்கு மூன்றென்று புரிந்துகொண்டேன்

வடவள்ளியில் வந்து ஒரு தம் பத்தவைத்துவிட்டு யோசிச்சேன்

இப்படியாயிருச்சே!

எங்கே கோளாறு?


ச்சே!!!!!
இந்த இவுனுககிட்டல்லா நிக்கவேண்டியதா போச்சே

கருப்புராயன் கோவில் பாலத்துக்கு பக்கத்தில் வடவள்ளி போலீஸ் இருந்தாலும் இருக்கும்,...பைமெட்டல் குறுக்கு வழியில் வீடுபோய் சேர்ந்திடவேண்டும் என்று உறுதியெடுத்துக்கொண்டிருந்தேனே... என்னாயிற்று அது?

அப்போதுதான் உறைத்தது

அந்த பையனோடு பேசிக்கொண்டே வந்ததில் பைமெட்டல் கட்டும்,
சங்கமத்தில் பீரடித்ததும் மறந்து போயிருக்கிறேன்

ஆம் இந்த அரசாங்கம் எதற்க்கு டாஸ்மாக்கை திறந்து வைத்திருக்கிறது?

கல்லா கட்ட!

அப்புறம் எதுக்கு பிடிக்கிறார்கள் ?

குடித்துவிட்டு வண்டியோட்டி ஆகும் விபத்துகளை தவிர்க்க........

இந்த ரோட்டில் குடித்துவிட்டு வண்டியோட்டி நடந்த விபத்தின் சதவீதம் ஜீரோ பர்செண்ட்!

அரசு தன் ஒழுக்கத்தை நிரூபிக்கவேண்டாமா?...

அப்புறம் கடையை திறப்பது எந்த ஒழுக்கத்தில்?

கல்லா கட்ட!

அப்புறம் ஏன் பிடிக்கிறார்கள்?

ஒழுக்க மயிர நிரூபிக்க ....

தொடர்ந்து தினமும் புடிக்கவேண்டியதுதானே!.. என்ன மயிறுக்கு சனிக்கிழமை மட்டும் பிடிக்கிறாங்க?

அன்னிக்குதான் நிறைய கேஸ்கிடைக்கும்

தினமும் பிடிச்சா யாரும் குடிக்கமாட்டாங்கதானே

குடிக்காட்டீ டாஸ்மாஸ்க் எப்படி ஓடும்?

விக்கறது கொறஞ்ச தகவல் வந்திருக்கு...!

லபக்க்றத நிறுத்து!

அப்புறம்கேப்பு
அரசாங்கத்துமேல குடிக்காத மக்களுக்கு கொஞ்சம் அதிருப்தி -உளவு
மீண்டும் லபக்கு...
இப்படி குடிகாரர்களின் ஆதரவையும் குடிக்காதவர்களின் ஆதரவையும்
பேலன்சாய் வைத்திருப்பது எம்புட்டு கஸ்டம் தெரியுமா?

கருப்பு கார்பரேட்டுகளுக்கு இது கைவந்த கலை

கல்லா கட்டுறது மட்டும் தான் நோக்கம், வேறு ஏதாவது நலநோக்கம் இந்த அரசுகளுக்கு இருக்கும் என்று நீங்க நினைத்தால், உங்கள் விட கூமுட்டை யாரும் இருக்கமுடியாது!

ஒரு ஸ்டேசனுக்கு ,ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம் 5 கேஸ், மாதத்தில் 15 நாள்

ரூரலில் அபராதம் 2000

அர்பன்னா அபராதம் 1000

2000x5= 10000x15= 1,50,000

ஒரு மாவட்டத்துக்கு 30 ஸ்டேசன்

30x1,50,000= 45 லட்சம்

45 லட்சம் x 30 மாவட்டம் 13,50,00000 கோடி

வருசத்துக்கு 13,50,00000x12=1620000000

அப்பாடியோ அபராதமே 100 கோடிய தாண்டுது

அப்புறம் டாஸ்மாஸ்க் விற்பனை

தமிழ் நாட்டில் 177 லட்சம் பெட்டிகள் பீரும், 144 லட்சம் பெட்டிகள் பிராந்தியும் 87 லட்சம் பெட்டிகள் ரம்மும் , 33 லட்சம் பெட்டிகள் விஸ்கியும் , 8 லட்சம் பெட்டிகள் ஜின் 7 லட்சம் பெட்டிகள் ஓட்கா 8 லட்சம் பெட்டிகள் ஒயினும் விக்குதாம்

கணக்கு போட்டு பாருங்க
இப்பவே கண்ணகட்டுதா?
இப்படி டபுள் வருமானம் உள்ளத விட உங்களப்போல அரசு இளிச்சவாயனா என்ன ?

குடிக்காதவங்கள வெச்சு குடிக்கறவங்ககிட்ட அட்ட டைமில் ரெண்டு தபா பிக்பாக்கெட் அடிச்சு சம்பாரிக்கும் அரசை, குடிக்கறவங்கள வெச்சு, குடிக்காதவங்க கிட்ட நல்ல பேரையும் சம்பாரிக்கும் அரசை அர்தத சாஸ்திரத்துக்கு பிறகு இங்குதான் காணமுடிகிறது

7 comments:

  1. அவ்வ்வ்வ்வ்!

    //குடிக்காதவங்கள வெச்சு குடிக்கறவங்ககிட்ட அட்ட டைமில் ரெண்டு தபா பிக்பாக்கெட் அடிச்சு சம்பாரிக்கும் அரசை, குடிக்கறவங்கள வெச்சு, குடிக்காதவங்க கிட்ட நல்ல பேரையும் சம்பாரிக்கும் அரசை அர்தத சாஸ்திரத்துக்கு பிறகு இங்குதான் காணமுடிகிறது//

    :-)

    ReplyDelete
  2. thambi..wonderful..
    good write Up
    i am waiting for article on anbazhagan ..
    (sorry tamil font support aagala..)

    myilvannan

    ReplyDelete
  3. amma thambi sariya sonninka. eppathan entha maramantaikku puriyuthu... Rs.66 rupai quarter ra 70 rupa kututhu vaanki bar rukkulla pona 50 paisa tamlara 3rupa kututhuvanki summakitaikkura thanniya 3rupa water paketta 2vanki kutucha kapakapanu vayuru eriyuthu duplicate sarakka erukkumonu nenachu oru verkatala vaila potalamunu sonna 10 rupa solran enni patha 22 katalathan erukku....sarinu ellam settle pannitu vantha. policesukku 1000 rupa so totala 70+3+6+10+1000=Rs1089 ..66rupa quarter 1089 rupa kututhu kutikkuro VALKA JANANAYAKAM

    ReplyDelete
  4. மயில்

    எந்த பாண்ட் போடுவது தெரியவில்லை, மற்றவர்களிடமிரூந்து அவ்வகையானஅறிவுறுத்தல் ஏதும் வரவில்லை

    ReplyDelete
  5. செல்வினுக்கு

    ஆமாஇல்ல, இதக்கூட எழுதியிருக்கலாம் ஒரு கோட்டர் விலை 1089
    நன்றி செல்வின்

    ReplyDelete

Footer