August 02, 2008

சிங்கிள் டீ


ஊரிக்கொண்டிருந்த அந்தஅதிகாலை
எல்லாவற்றையும்
காட்டிக்கொடுக்கிறது

ஒரு கிலோமீட்டருக்குள்

வான்முட்டும் கட்டிடங்களை
வாசலற்ற வீடுகளை
வீடற்ற வாசல்களை
குடிசைகளை

உடம்பிற்க்கு நடப்பவர்களை
நடக்க உடம்பில்லாதவர்களை

கடையின் தின்னைகளில்
உறங்கும் பைத்தியங்களை

இருட்டுக்குள்ளிருந்து ஒருத்தி புடவையை உதரி
அவளது நாளை உறுதிசெய்துகொண்டு

குயில் என்ன மயிருக்கு
இப்படி கூவவேண்டும்
சோடிய மரத்தில் இருந்துகொண்டு

1 comment:

  1. தோழமைக்கு

    ஆக்ரோஷமான உணர்ச்சிப் பதிவுகள்

    தொடரட்ட்டும் உங்கள் பணி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete

Footer