Saturday, September 8, 2007

கடவுகளை அடைத்தத கடவுள்கள்


நேற்று எனது பணிக்களமான ஆனைகட்டியிலிருந்து

திரும்பிக்கொண்டிருந்தேன்

இருட்டுக்கும் பகலுக்குமான மயிரிழைநேரமது

உள் மனது ஏனோ எச்சரிக்கை செய்துகொண்டே வந்தது

elephent corridor களை அடைத்து கட்டப்பட்டிருக்கிற ஆசிரமத்தை தாண்டி

பைக்கை முறுக்கினேன்

இன்னொரு corridor சலீம் அலி பறவைகள் சரணாலயத்தை தாண்டிய போது

மீண்டும் பலமாக மனசு எச்சரித்தது

வண்டியயை slowவாக ஓட்ட ஆரம்பித்தென்

பாதையை இருட்டு முழுங்கியிருந்தது

வண்டி 30 ல் போய்க்கொண்டிருந்தது

அபாயமுக்கில் திரும்பினேன்

சூழ்நிலை பார்த்தேன்

புதிதாய் கிளரப்பட்ட மண்

புதிதாய் பிய்த்தெரியப்பட்ட கத்தாழை

புதியதாய் முரிக்கப்பட்ட கிளைகள்

சந்தேகமே இல்லை ..................

ராஜா சமீபத்திலிருக்கிறான்

புதிதில்லை என்றாலும் பகீரென்றது

வண்டியை 20 க்கு குறைத்தேன்

வளைவில் திரும்பினேன்

சாணிவாசனை மூக்கை தொட்டது

10
அடி தூரத்தில் எதோவெள்ளையாய் மினுங்கியது

உற்றுப்பார்தேன்

கண கம்பீரமாக தந்தத்தை நீட்டியபடி

அடங்காத உடல் மொழியோடு

என்னையே பார்த்தபடி நின்றிருந்தது

ஒரு அடி கூட முன்னே வரவில்லை

நான் தயானந்தசரஸ்வதியோ

சலீம் அலி விஜயனோ

கொழலில்(Gun) அடிக்கிற குள்ளானோ

காட்டை தின்றதற்க்காய்
கரும்பு பாலில் யூரியா போட்டு வைத்து அதன் சம்சாரத்தைக்கொன்ற கவுண்டனோ
அல்லஎன்று

அதற்க்கு தெரியாதா என்ன?

வருகிற வாகணங்களுக்கு எச்சரிக்கை செய்ய

முப்பதடி பின்னால் வளைவில்போய் நின்றேன்

பின்னால் பூஜை முடித்து காரில் வந்தவர்களிடம்

விசயத்தைச் சொல்லி நிறுத்தினேன்
'
பாக்கிறோம் சார் என்னபன்னீரும் '
போலி தைரியத்தோடு
காரை முன்னோக்கி நகர்த்தினார்கள்

'வேண்டாம் சார்
ஒண்டி ரொம்ப கோவமாருக்குது'

கேட்டபாடில்லை

வளைவில் திரும்பி நிறுத்திக்கொண்டார்கள்

அவ்வளவுதான்

காரை கண்டவுடன் பிளிரியபடி

முன்னோக்கி வந்தான்


கார் சட்டென்று திரும்பி ஓட ஆரம்பித்தது

வண்டியையை நிறுத்திவிட்டு நான் மலையில் ஏரிக்கொண்டேன்

காரைத்துரத்திய பிறகு வந்து

எனதுவண்டியை தும்பிக்கையால் தொட்டது
என்ன நினைத்ததோ

கொஞ்ச நேரம் நின்று விட்டு

எனக்கு எதிர்புறகாட்டுக்குள் போய்விட்டது

அதற்க்கு தெரியாதா என்ன?

நான் தயானந்தசரஸ்வதியோ!

சலீம் அலி விஜயனோ!

கொழலில்(Gun) அடிக்கிற குள்ளானோ!
காட்டை தின்றதற்க்காய்
கரும்பு பாலில் யூரியா போட்டு வைத்து அதன் சம்சாரத்தைக்கொன்ற கவுண்டனோ!

அல்லஎன்று ...........

அவைகள் வரும் பாதை முழுக்க அடைத்து எழுப்பட்ட

கட்டிடங்கள்

ரிசாட்டுகள்

பயிற்சி நிறுவனங்கள்

இப்படி

அதோட எடத்துல போய்


எல்லாத்தையும் அடச்சுப்போட்டு

'யானைத்தொல்லை'

'யானை புகுந்தது'

'யானை அட்டகாசம்'

என்று

அலறுகிறவர்களை

அது நன்றாக அறிந்தே வைத்திருக்கிறது

பின்பு இன்னொரு கோரிடாரான kkid பக்கம் வந்தபிறகு நின்று நிதானமாக தம்மடித்தபடியே யோசித்தேன்

யானைகளுக்கென்று ஒரு பத்திரிக்கை இருந்தால் அது இப்படித்தன் செய்திபோடும்

மனிதர்கள் அட்டகாசம்

மனிதர்கள் தொல்லை

மனிதர்கள் காட்டுக்குள் புகுந்தனர்

Friday, September 7, 2007

RED TEA-ரெட் டீ-முருகவேள்


தோழர் முருகவேளோடு ஒரு இரவு முழுக்க கோபநாரியின் காட்டுப்பகுதிகளில் வெளிச்சம் ஒழுகும் இரவில் நிழல்களின் அசைவுகளில் கேளையாடுகளின் சத்தங்களோடு RED TEA யின் உள்ள கவிதைகளை மொழிபெயர்க்க அமர்ந்தபோது நாவலின் பக்கங்களை படிக்கக்கொடுத்தார் கொஞ்சம் பக்கங்களுக்குள் மனதைபிழிந்து போட்டுவிட்டது அதன் இயல்பான சம்பவங்கள்


இப்போது தேயிலை மலைகளை பார்க்கும் போதெல்லாம் லட்சக்கணக்கான மனிதர்களைதின்று வயிறு வீங்கி படுத்திருப்பது போலவே தெரிகிறது
ஆங்கில மொழியில் வெளிவந்து கேட்பாரற்று கிடந்த மிகச்சிறந்த இந்த நாவல்,வெகு விரைவில் முருகவேளின் மொழிபெயர்ப்பில், விடியல் பதிப்பக வெளியீடாக வரவிருக்கிறது. இந்நாவல் புதிய அலைகளை தருவதற்கான அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கிறது
இது வெளிவரும்போது நிச்சயம் தலித் நாவல்கள் புதிய பரிமாணத்தை எட்டும்


தமிழின் பல மாற்று சிறுபத்திரிகைகளையும் ஒருசேர வாசிக்கும் தளமாக விளங்குவது 'கீற்று' இணையத்தளம். மார்க்சியம், பெரியாரியம், பெண்ணியம், தலித்தியம், மனித உரிமைகள் என பல்வேறு அரசியல் பார்வைகளை அடிப்படையாகக் கொண்ச இத்தளத்தை நடத்திவருபவர் இளைஞரான தோழர்.ரமேஷ். இந்தத் தளத்தின் மூலம் எந்த ஆதாயமும் பெறாத அதேநேரத்தில் கடுமுழைப்பையும் செலுத்திவருபவர். இப்போது கீற்று இணையத்தளத்தில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்றவர்களின் நூல்களையும் சமகால இலக்கிய மற்றும் அரசியல் நூற்களையும் ஏற்றவுள்ளார் ரமேஷ். ஆனால் இதற்கென ஒரு நபரை நியமித்து அவருக்கான சம்பளம் மற்றும் தொலைபேசி போன்ற பல்வேறு செலவுகள் அவரை எதிர்நோக்கியுள்ளன. மேலும் கீற்று இணையத்தளம் குறித்த அறிமுகத்தையும் அனைத்துத் தமிழர்களுக்கும் கொண்டு செல்வதற்கான ஆலோசனைகளையும் வேண்டுகிறார் தோழர்.ரமேஷ். மாதம் அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலக்கியம் மற்றும் அரசியலில் ஆர்வமுள்ள நண்பர்கள் தங்களால் இயன்ற அளவில் மாதம் ஒரு தொகையைப் பகிர்ந்துகொள்ளலாம்.
மேலும் தொடர்புக்கு ரமேசின் தொலைபேசி: 9940097994, அவரது மின்னஞ்சல் editor@keetru.comரமேஷின் வங்கிக் கணக்கெண் : 603801511669iciici bank, chennai branch.