July 21, 2007






கசிவுநீர்க்குட்டையை
அலகால்
உருஞ்சிய வெலுத்த நாரை

பறந்து போய் வானாமாகி ப்போனது

துடிப்பேரி கரையேறிய மீன்கள்
அந்நிய பயணத்தில்
லயித்துப்போய் காலனிகளுக்காக
செதுக்கிக்கொண்டிருந்தது

மண்ணை சடுதிவழி அடைய
குடைந்தது நண்டு



தவளைகள் மாற்று இருப்பிடங்களை
நோக்கிய பயணத்தில் களைத்திருந்தது

வனம் நொறுங்கிய பொழுதுகளை
எண்ணிய படி தள்ளாடிக்கொண்டிருக்கிறது
ஒரு
வண்ணத்துப்பூச்சி

முகத்தை மறைத்துக்கொண்டு
ஒரு
மரங்கொத்தி
அலகை உடைத்து
தற்க்கொலையில்
வீழ்ந்துகிடந்தது

கொடங்கு பள்ளத்திலிருந்து
சோளக்காட்டுக்கு வந்து
ஊளையிடும் நரிகள்
சத்தமடங்கி
ஈன வலியில் காற்றை கணமாக்கிக்கொண்டிருந்த்து

ஆறு தன் உயரத்தை குறத்துக்கொண்டது

அருவி பாதியில் உறைந்தபடி நின்றது

வானமே கூரையாச்சு
வையகமே வீடாச்சு

ஒரு



சிறப்பு பொருளாதார மண்டலம்

No comments:

Post a Comment

Footer